#மகாபெரியவா
நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை, அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டம் என்று அந்த கடவுளை திட்டுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். Image
ஆனால் அந்தக் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை தரும் என்பது நம்மில் சிலருக்கு புரிவதில்லை. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெரிய வசதிப் படைத்த ஜமீன்தார் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இவர் பல கோவில்களை சீர் அமைப்பதற்கு தன்னிடம் உள்ள செல்வத்தை
கொடுத்திருக்கின்றார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஜமீன்தாருக்கு ஒரு நாள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பறி போகும் அளவிற்கு அந்த கஷ்டமானது அவரை வாட்டி வதைத்தது. இவர் காஞ்சி பெரியவரின் பரம பக்தரும் கூட. தன் கஷ்டங்களை
கூறுவதற்காக காஞ்சி பெரியவரை சந்திக்க சென்றார். “நான் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நினைக்கின்றேன். அந்த ஆண்டவன் எதற்காக எனக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை தரவேண்டும். அந்த கடவுளை நான் இனி வணங்க மாட்டேன்” என்று கோபத்துடன் தன் ஆதங்கத்தை எல்லாம் காஞ்சி பெரியவரிடம் கொட்டி தீர்த்தார்.
எல்லாம் அறிந்த அந்த காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக தெரியும். இந்த சமயத்தில் ஒரு மனிதனுக்கு என்ன அறிவுரை கூறினாலும் அவன் மூளையை போய் சேராது என்று. இதனால் ஒரு கதையை மட்டும் அந்த ஜமீன்தாருக்கு காஞ்சி பெரியவர் கூறினார். நீண்ட நாட்களுக்கு முன்பு  கிராமத்தில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து
வந்தான். அந்த ஊரில் உள்ளவர் எல்லாம் இந்த வியாபாரியிடம் தான் உப்பு வாங்குவார்கள். உப்பு வியாபாரம் செய்து தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் ஒரு காமாட்சியம்மன் பக்தன். தினமும் காமாட்சி அம்மனை வணங்கி விட்டுதான் வியாபாரத்திற்கு செல்வான். இப்படி தினம்தோறும் இவனது
வாழ்க்கை சுமூகமாக தான் சென்று கொண்டிருந்தது. அந்தக் காலத்திலெல்லாம் உப்பு விற்க செல்பவர்கள் கழுதையின் மீது உப்பு மூட்டையை போட்டு எடுத்துக் கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள். வழக்கம் போல உப்பு மூட்டைகளை கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு சென்றான் உப்பு வியாபாரி.
என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு காலநிலையானது மிகவும் மோசமாக மாறி நன்றாக மழை பெய்து விட்டது. மூட்டையில் இருந்த உப்புக்கள் எல்லாம் கரைந்து போய்விட்டது. அந்த வியாபாரிக்கு பெருத்த நஷ்டம். கஷ்டம் வந்துவிட்டது முதலில் அவன் திட்டியது அந்த காமாட்சி அம்மனை தான். தினம்தோறும் உன்னை நினைத்து
பூஜை செய்த எனக்கு இப்படியொரு தண்டனையா? எனக்கு பெருத்த நஷ்டம், இனிமே நான் உன்னை வணங்க மாட்டேன். என்று அந்த அம்மனை திட்டி கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வழியில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் இவனை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வியாபாரி தான் இன்று
வியாபாரம் செய்யவில்லையே. இவனிடம் எப்படி பணம் இருக்கும். வந்தவர்கள் அவனை நன்றாக சோதனை செய்து விட்டு பணம் இல்லை என்று விட்டு சென்று விட்டார்கள். திருடர்கள் இவனை விட்டு சென்ற போது இந்த உப்பு வியாபாரியை பார்த்து ‘உனக்கு இன்று நல்ல நேரம் போலிருக்கு. உன்னிடம் பணம் ஏதுமில்லை. அதனால்
உன்னை விட்டு விட்டு செல்கின்றோம்.’ என்று கூறிவிட்டு சென்றனர். அப்போது தான் அந்த உப்பு வியாபாரி யோசித்தான். ‘ஒருவேளை இன்று நாம் உப்பினை விற்று பணத்தோடு வந்திருந்தால் பணத்தை காப்பாற்ற, இந்த திருடர்களிடம் சண்டையிட வேண்டியதாக இருந்திருக்கும். இதனால் என் உயிரை கூட நான் இறந்திருப்பேன்.
இன்றைக்கு என் உப்பு கரைந்து கூட நல்லதுக்காக என்பதை நான் உணர்ந்து விட்டேன்’. என்று அந்த காமாட்சி அம்மனிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டான். இப்படியாக காஞ்சி பெரியவர் கூறிய கதையை கேட்ட அந்த பெரிய ஜமீன்தார் மௌனத்தோடு, தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டம் கூட ஏதாவது நன்மைக்காகத் தான்
இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, தன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டார். சிறிது நாள் கழித்து காஞ்சி பெரியவரை சந்திக்க ஜமீன்தார் திரும்ப வந்திருந்தார். ஸ்வாமி என்னுடைய சொத்துக்கள் எல்லாம் பறிபோகும் நிலமையானது எனக்கு வந்த போது, சொத்துக்கள் எல்லாம் என்னுடையது தான் என்பதற்கான ஆதாரங்கள்
என் முன்னோர்கள் திருப்பணி செய்த ஒரு  கோவிலின் குருக்களிடம் இருந்தது. அந்த சொத்து பத்திரத்தை வைத்து என் சொத்துக்கள எல்லாம் நான் எந்த சேதாரமும் இல்லாமல் மீட்டுவிட்டேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட கஷ்டம் கூட என் நல்லதுக்காக தான் என்பதை நான் உணர்ந்து விட்டேன். என்று காஞ்சி பெரியவரை
வணங்கி ஆசிபெற்று பெற்றார் அந்த ஜமீன்தார். அந்த கடவுள் நமக்கு கொடுக்கும் கஷ்டத்தில் கூட நமக்காக ஏதாவது ஒரு நன்மையை வைத்துதான் கொடுப்பார் என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 3
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள் Image
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
விட்டுப் போய்விட்டார்கள். மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.
"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும், வேகாததுமாக சாதம்
Read 5 tweets
Jan 2
#MahaPeriyava
M.G. Ramachandran was a famous actor and Chief Minister of Tamil Nadu. He was very devoted to Sri Maha Periyava. M.G.R on returning to India after surgery from the US, went to Kanchi for Sri Maha Periyava’s darshan. He made a humble request to Periyava: “I wish Image
to do anything that You may say for the Matham”.
Periyava told him:
“There are vaara (days of the week) theerthas in Kanchi. You must arrange to clean and maintain them. Somvar-Ekambareswarar kulam, Mangalvar-Mangala theertham opposite to the Mutt, Budhvar-satyavratha theertham
near Kaaligamedu, Chinna Kanchipuram, Guruvar-Kaayarogana theertham, Sukravar-Sukravar theertham, Kaamakshi temple, Sanivar-Sarvatheertham. Please don’t think of having bath in any of these now!”

Periyava found it difficult to go and have bath in all the theerthams due to His
Read 17 tweets
Jan 2
#VaikuntaEkadasi #MahaPeriyava (Gems from Deivathin Kural)

Periyava has explained the importance of observing this Vratha in great lengths and depths and the significance behind it.

“Ekadashyam thu karthavyam sarvesham bhojana dwayam”

This is the first part of a sloka. What is Image
the meaning of this? “Ekadashyam thu karthavyam Sarvesham” means, on Ekadasi day, it should be done like this by all the people.
What should be done?
The answer comes as “Bhojana Dwayam”.
Don’t you understand the meaning? Dwayam means 2. “Bhojana Dwayam”, means, two times food.
It conveys the meaning that everyone should have food two times on Ekadasi day. Normally, we have heard that on Ekadasi, one has to fast, and also go waterless. Whereas, here, you are saying that it is said, not once, but food should be taken twice? This sloka is actually a
Read 7 tweets
Jan 2
#சொர்க்கவாசல்_இல்லாத_திவ்யதேச_கோவில்கள்
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல்
எனப்படும் பரமபத வாசல் கிடையாது. 
இதற்குக் காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். ImageImageImage
மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும். இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து
சென்றாலே பரமபதம் கிட்டும்
என்ற ஐதீகமும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண
வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல
வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.
இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத
ஆலயங்கள்
1) காஞ்சிபுரம்
Read 9 tweets
Jan 1
#குருபார்வை #கர்மவினை #மகான்கள்_மகிமை
பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மை. ஆனால் நாம் நம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள். இதை ஓர் எடுத்துக் காட்டுடன் பார்த்தால் விளங்கும். ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்து Image
கொள்ளுங்கள், அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது, கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார்.
இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை
பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள். கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப் படாதபடி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நம் ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். வினை கழிந்த மகான்களை வணங்க நம் பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத
Read 4 tweets
Dec 31, 2022
#நாம_மகிமை ஒருநாள் சிறைக்கைதிகள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பக்தி சேவை இயக்கம் சார்பில் பகவத் கீதையும், ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உபன்யாசம் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைவருடைய வாழ்க்கையும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் மாற்றம் அடைய துவங்கியது. ஒரு நாள் சங்கர் எனும் கைதியினுடைய மனைவி Image
உமா கடிதம் எழுதியிருந்தாள். அன்புள்ள அத்தானுக்கு, நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று
எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி சங்கர் பதில் எழுதினான்.
அன்பே.. நான் இங்கு அனுதினமும் ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உச்சடானம் செய்து என் மனதை பக்குவமாக மாற்றிக் கொண்டு இருக்கிறேன். குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(