M.SivaRajan Profile picture
Jan 2 13 tweets 3 min read
#வைகுண்ட_ஏகாதசி

*#சொர்க்கவாசல்* இல்லாத திவ்ய தேச கோவில்கள் :

108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம
பத வாசல் இருக்கும்.

ஆனால்,  கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில்  சொர்க்கவாசல்
எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்கு காரணம் இருக்கிறது. 
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.

மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால்  தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.
எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும்
என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. 

மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
உத்ராயணவாசல் வழியே தை முதல் ஆனி வரையும்,

தெட்சிணாயண
வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல
வேண்டும்.

ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத
ஆலயங்கள் :
1) காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனப்படும்  ஸ்ரீ பரமபத நாதப்
பெருமாள் ஆலயம்.

இவ்வாலய மூலவரின் திருநாமம்ஸ்ரீவைகுண்டப் பெருமாள் என்றாலும்
இங்கு சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது.
இப்பெருமாளுக்கு  பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.
2) ராமானுஜர் அவதரித்த தலமான  ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள்
ஆலயம்.

ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீ பெரும்புதூரை நித்ய சொர்க்கவாசல் தலமாக கருதுகிறார்கள்.

எனவே இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும் ராமானுஜரும்
பூதக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளும்போது மணிக்கதவுகள் சொர்க்க
வாசல் திறக்கப்படுவதுபோல திறக்கப்படும்.
3) திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜபெருமாள் ஆலயம்.
திருக்கண்ணபுரம் பூலோகத்து
விண்ணகரம் என்பதால், 
இத்திருக்கோவிலில் பரமபத
வாசல் கிடையாது. 

இவனது திருக்கோவிலே
பரமபதமானதால் மற்ற
வைணவக்கோவில்களில் உள்ளது போன்று
வைகுண்டவாசல் இங்கு இல்லை.
4) திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள்
கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில்
இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. 

தாயார் நாமம் செங்கமலதாயார்.

இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்து விடும் என்பதால்,
இங்கு சொர்க்கவாசல் கிடையாது. 

இங்கு வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.  

இங்கும் குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோவிலில் உள்ளது போன்று
தட்சிணாயன வாசல் உத்தராயண வாசல் என இரு வாசல்கள் உள்ளது.
இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே
பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உத்ராயணவாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண
வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல
வேண்டும்.

ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.
திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

காஞ்சிபுரம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்,

பவள வண்ணபெருமாள்,

திருப்க்குழி விஜயராகவப் பெருமாள்

ஆகிய இந்த கோவிலில் சொர்க்கவாசல் இல்லை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 2
#சொர்க்கவாசல்

*சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?*

அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி

பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,

தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.

அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
Read 4 tweets
Jan 2
#ஸ்ரீ_விஷ்ணு_சதநாம_ஸ்தோத்திரம்

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்
தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம்
Read 7 tweets
Jan 1
சைவ உலகில் இரு பேரரசா்கள் :

சைவ உலகில் இரண்டு இராஜாக்கள் உள்ளனா்.

ஒருவா் நடராஜா, மற்றொருவா் தியாகராஜா.

நடராஜாவே ஊன நடனம் ஞான நடனம் என்னும் இரு நடனமும் செய்தபோதிலும்,

ஞான நடனத்தைப் புலப்படுத்தவே தியாகராஜாவாகத் திருவாரூாில் எழுந்தருளினாா்.
அவா் அமரா் நாட்டிலிருந்த ஐஸ்வா்யங்களை எல்லாம் உதறி ஆரூா் நுண் மணலையே இடமாகக் கொண்டு தியாகராஜாவாகத் திருவாரூாில் வீற்றிருக்கிறாா்.

நடராஜப்பெருமான் செய்யும் நடனம் ஆனந்த நடனம்.

தியாகராஜா செய்யும் நடனம் அசபா நடனம்.

இது மூச்சுக் காற்றால் நிகழ்வது.
நடராஜா் நின்று ஆடுகிறாா்.
இவா் இருந்து ஆடுகிறாா்.

நடராஜா் நடனம் போக நடனம் போகம் என்பது இன்ப துன்ப அனுபவம்.

தியாகராஜா் நடனம் யோக நடனம்.

யோகம் என்பது துன்பக் கலப்பில்லா இன்ப அனுபவம்.

அவா் நடனம் பிறவியை தொடுவது.

இவா் நடனம் பிறவியை விடுவது.
Read 9 tweets
Jan 1
#வைகுண்ட_ஏகாதசி

சகல சௌபாக்கியங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி...

விரதம் இருப்பது எப்படி?

வைகுண்ட ஏகாதசி
விரத முறை...!!

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி.

மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு முக்தி ஏகாதசி,
முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி (திங்கட்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
Read 10 tweets
Dec 31, 2022
#திருத்தணி_படி_பூஜை_திருவிழா

இன்று திருத்தணி படி பூஜை திருவிழா :

ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது  ஊழியர்களின் வழக்கமாக இருந்தது.
புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய  வள்ளிமலை ஸ்வாமிகளால்  தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா.

ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வேண்டி
அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள்.

இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது.
Read 11 tweets
Dec 31, 2022
#திருநாம_விளக்கம்

*பகவான் திருநாமங்களின் பொருள்*

வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.

*அத்திவ்ய நாமங்களும்* *அவற்றின்* *விளக்கங்களும்* :
1. *கேசவ* – துன்பத்தைத் தீர்ப்பவன்

2. *நாராயண*– உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

3. *மாதவ* – திருமகள் மணாளனாக இருப்பவன்

4. *கோவிந்த* – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

5. *விஷ்ணு*– அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. *மதுசூதனன்* – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) *மது* என்னும் *அரக்கனை* *வென்றவன்*

7. *த்ரிவிக்ரம்*– மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

8. *வாமன* – குள்ளமான உருவம் உடையவன்

9. *ஸ்ரீதர* – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்

10. *ஹ்ருஷிகேச* – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(