Theni Siraj Profile picture
Jan 4 6 tweets 5 min read
திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள்.
அவர்களில் ஒவ்வொருவராக பார்க்கலாம்..
முதலில் #பனகல்_அரசர்

இரட்டை ஆட்சி முறையின் கீழ், சென்னை
1/n
மாகாணத்தில் அன்றைய பிரதமராக இரண்டு முறை இருந்தவர்.

அரசியல் ரீதியாக ஆட்சி அதிகாரத்துடன் சமூகநீதிக்கு அடித்தளமிட்டு முன்னின்று எடுத்த பனகல் அரசர், 1921-ல் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுக்காகவே என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என்று 2/n
நாட்டின் உள்கட்டமைப்பிற்கு அடித்தளமிட்டவர்.

இந்து அறநிலையத்துறை அமைத்தவர்.

சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை ஒழித்தவர்.

பஞ்சமர் என்ற வார்த்தை ஒழித்து ஆதி திராவிடர் என்ற அழைக்க சட்டமேற்றியவர்.

இவ்வளவு ஏன்.?!
தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல்
3/n
வருவதற்கு காரணமே இவரைப்பற்றி வாசித்த ஒரு நூல் தான். இதை தலைவர் கலைஞர் அவர்களே கூறியுள்ளார்.
ஆம், அந்த போற்றுதலுக்கு உறிய அந்த தலைவர்
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட " பனகல் அரசர்"
காளகஸ்தியில் பிறந்து சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்
4/n
பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். வடக்கு ஆர்க்காடு மாவட்ட வாரியத்தின் பிரதிநிதியாகக் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து பொது வாழ்க்கை தொடங்குகிறது.
நீதிக் கட்சி உருவெடுத்தபோது தன்னை இணைத்துக்கொண்டு, அதன் தூண்களுள் ஒன்றாக இவரும்
5/n

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Theni Siraj

Theni Siraj Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thenisiraj

Jan 5
திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள்.
அவர்களில் ஒவ்வொருவராக பார்க்கலாம்.
Dr.C. NATESANAR THE DOYEN OF DRAVIDIAN MOVEMENT.
நேற்றைய பதிவின்
1/n Image
நீதிக் கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அக்காலத்தில், எம்பிசிஎம் என்பதே மருத்துவப் பட்டத்தில் முதல்தரப் பட்டம். இப்பட்டம் பெற நடேசனார் பல முறை முயன்றும் முடியவில்லை.
2/n
எல்எம்எஸ் என்ற மருத்துவப் பட்டத்தைப் பெற்றே அவரால் மருத்துவராக முடிந்தது என்றாலும் வைத்திய நிபுணர் என்றும், கைராசிக்காரர் என்றும் மக்களிடம் அவர் நன்மதிப்பைப் பெற்றார்.
சென்னை ராஜதானியின் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் சாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார்
3/n
Read 15 tweets
Jan 5
ஆடத்தெரியாத நாட்டியக்காரி வாசல் கோணல் என்பாளாம்.
அதுபோல பேசத் தெரியாத தற்குறியை தலைவனாக நியமித்த பாசிச பாஜக...
ஆட்டுக்குட்டி @annamalai_k இதுவரை எவ்வளவு பொய்களை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொரனையில்லாமல் அதுவும் பொது வெளியில் கூறி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட
#Annamalai_Pimp
1/n
நிகழ்வுகள் பலப்பல..
20000 புத்தகம் படித்தது
200000 வழக்குகள் பதிந்தது..
பத்திரிகையாளர் என்றால் பணம் பெறும் கூட்டம் என்று உறுவகபடுத்தும் நீ உன்னுடைய தேர்தல் படிவத்தில் சமர்பித்த சொத்து பட்டியல் ஒரு நேர்மையான ஊழியராக சாத்தியமா?
ரஃபேல் வாட்ச் என்ன காரணத்திற்காக அன்பளிப்பு?
2/n
நீ யோக்கிய சிகாமணி என்றால் கொள்முதல் செய்த பில்லை பொது வெளியில் போடலாமே?
அடுத்தவர்களை கேள்வி கேட்கும் முன் உன்னை நோக்கி பல கேள்விகள் உள்ளதே?
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று உறுதி படுத்துகிறது..
ஆணவத்தால் ஆடிய பலபேர் இந்த மண்ணில் அடையாளம் இழந்த வரலாறு 20000 புத்தகத்தில்
3/n
Read 4 tweets
Nov 25, 2022
நவம்பர் 26 1957
தமிழக வரலாற்றில் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

சாதி ஒழிப்பை வலியுறுத்தி சட்ட எரிப்பு போராட்டம்..

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியான 13(2), 25(1), 26, 29(1) (2), 368 பிரிவுகளைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26
1/n
அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அதற்கான தீர்மானம் 1957 நவம்பர் 3 ஆம் தேதி - தஞ்சாவூரில் தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசியல் சட்டத்திலேயே இடம்பெறவில்லை.
2/n
அவசர அவசரமாக மத்திய அரசின் உத்தரவுப்படி சென்னை சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினர்.
நவம்பர் 3 ஆம் தேதி போராட்ட அறிவிப்பு 6 ஆம் தேதி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அறிஞர் அண்ணா அவர்கள் இந்த சட்டத்தை ஆணித்தரமாகவே எதிர்த்தார்.
மேலும் அண்ணா
‘‘இந்த ஏழு ஆண்டுகளில் இந்திய
3/n
Read 14 tweets
Nov 23, 2022
முரசொலி மாறன்...
"மாநில சுயாட்சி" என்ற நூல் செதுக்கிய சிற்பி இன்று மறைந்த தினம்...
அவர் எழுதிய அந்த நூலின் சில உங்கள் பார்வைக்கு...
ஃபெடரல் (Federal) என்னும் ஆங்கிலச் சொல் 'Foedus' என்கிற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 'Foedus: என்றால் ‘ஒப்பந்தம்' என்று பொருள்.
1/n
என்பது எனவே, பழங்காலத்தில் பல சுதந்தர அரசுகள் ஒரு ஒப்பந்தத் தின் மூலம் கூட்டாட்சியாக உருவாகியிருக்கின்றன தெளிவாகிறது.

கூட்டாட்சிக்கு அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் தான்.

“எப்படி (அரசு தரும்) மான்யத் தொகையிலிருந்து ஒரு வாரியம் பிறக்கிறதோ, அதைப் போல அரசியல் அமைப்புச்
2/n
சட்டத்திலிருந்துதான் ஒரு கூட்டாட்சி அரசு பிறக்கிறது.
எனவே நிர்வாகத் துறை, சட்டம் இயற்றும் துறை, நீதித் துறை போன்ற ஒவ்வொரு அதிகாரமும், - அது நாடு முழுமைக்குமானாலும் சரி, அல்லது தனிப்பட்ட மாநிலத்திற்கானாலும் சரி - அரசியல் அமைப்புச் - சட்டத்திற்குக் கீழ்ப்படிந்ததும்,
3/n
Read 10 tweets
Nov 22, 2022
மக்களின் முதல்வர் @mkstalin படி விடாமல் படி என்கிறார் மாணவர்களிடம்..
கல்வி ஒன்றே உன் வாழ்க்கையில் அழியாத சொத்து..
படித்ததில் பிடித்தது...

2006 ல் +2 முடித்துவிட்டு மளிகை கடையில் 50 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். அப்படியே அரசு கல்லூரியில் B. Sc Chemistry சீட் கிடைத்தது.
1/n
மதியம் வரை கல்லூரி. பின்பு இரவு 10 மணி வரை மளிகை கடை வேலை, பின்பு இரவு 12 மணி வரை இரயில்வே நிலையத்தில் படிப்பு.

பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு
2/n
கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல.

PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள்
3/n
Read 5 tweets
Nov 13, 2022
"ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமா?
அவ்வினத்தின் மொழியை அழித்து விடு" -இப்பன்ஸ்

"அயர்லாந்து வேண்டுமா? அல்லது காலிக் மொழி வேண்டுமா' என்று கேட்கப்பட்டால் நான் அயர்லாந்தை விட்டு விடுவேன், காலிக் மொழி வேண்டும் என்று கேட்பேன்" என்கிறார் அயர்லாந்தின் விடுதலைக்காக போராடிய திவேலரா.
1/n Image
1963 மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்".

"இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து
2/n
உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது என்றார்.

'இந்தியா ஒற்றை நாடல்ல'

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு
3/n
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(