M.SivaRajan Profile picture
Jan 22 12 tweets 3 min read
#திருவோண_விரதம்

*திருப்பங்கள் தரும் திருவோணம் :*_

*இன்று திருவோண விரதம்*

திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.

வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.

ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.

அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,

நீதி நெறி தவறாதவர்;

சீரிய வழியில் பொருள் தேடுபவர்;

நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி;

செல்வந்தர் என்று கூறுகிறது.

கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள்.

சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள்.
பசியைப் பொறுத்துக் கொள்ளாத இவர்கள் பாலால் ஆன இனிப்புகளை விரும்பி அதிகம் உண்பார்கள்.

அழகான உடலும், புன்னகை பூத்த முகமும் உடையவர்.

புலவராகவும் பண்டிதராகவும் சிறந்து விளங்குவார்கள்.
*விரதமுறை*

திருவோண விரதமிருப்பவர்கள் முந்தய நாள் இரவு உபவாசமிருத்தல் நலம்.

திருவோண நட்சத்திரம் ஆரம்பித்த நேரம் முதலே பெருமாளைப்பற்றிய மந்திரங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் முதலியன பாராயணம் செய்தல் நன்று.
விரத நாளன்று குளித்து அருகிலுள்ள ஆலயம் சென்று ஒரு கைப்பிடியேனும் பிறர்கு உணவளித்தல் நலம்.

அல்லது வீட்டிலேயே பாராயணங்கள் செய்தும், மலர்களால் அர்ச்சித்தும், மனதார வேண்டிக் கொள்ளலாம்.
வெளியே சென்று அன்னதானமிட இயலாதவர்கள் அக்கம் பக்கத்தினருக்காவது பிரசாதம் செய்து அளிக்கலாம்.

துளசி தீர்த்தம் அனைவரும் பருகுவது சாலச்சிறந்தது.

மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யலாம்.
இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

*இன்றைய சிறப்பு நாள்*

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை.

அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.
இன்று திருவோண நாளும் சந்திர தரிசனமும் இணைந்த நாள்.

மனதுகாரகனாகிய சந்திரனின் அருளும் மாலனின் அருளும் பெற திருவோண விரதம் இருந்து இரட்டை வரம் பெற்றிடலாம்.
திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் கடைபிடித்து வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.

#திருவோண_விரதம்

#திருவோண_விரத_மகிமை

#திருவோண_விரத_சிறப்பு

#ஸ்ரீவைஷ்ணவம்

#பெருமாள்வழிபாடு

#ஓம்நமோநாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 23
*#சியாமளா_நவராத்திரி*

* 22.01.2023 தை வளர்பிறை பிரதமை திதி* முதல் சியாமளா நவராத்ரி ஆரம்பம்*🌹

நவராத்திரி கேள்வி பட்டிருப்போம் அதென்ன சியாமளா நவராத்திரி.

மொத்தம் 4 நவராத்திரிகள் உள்ளது என்பது பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதைப் பற்றி காண்போம்: Image
சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது.

இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய
நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும்.

அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் உள்ளன.

1) *ஆஷாட நவராத்திரி*

ஆனி மாதம்  அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இது வராகி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
Read 20 tweets
Jan 23
#சந்திரமௌலீஸ்வரர்

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் 
திருக்கோயில் - முசிறி.

குழந்தைப்பேறு மற்றும் 

தொழிலில் அபிவிருத்தி 
அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

சந்திரனுக்கு ஈசன் சாப விமோசனம் அளித்த கோயில். Image
கருவறையில் மூன்றாம் பிறை சந்திரனைத் தனது தலையில் சூடியவாறு, 

கிழக்குத் திசை நோக்கிய 
சன்னதியில் பக்தர்களுக்கு 
காட்சியளித்து வருகிறார் 
சந்திரமௌலீசுவரர்.

தன்னை நாடி வரும் 
பக்தர்களின்  சாப 
விமோசனங்களையும் நீக்கி 
அருளுபவராக 
சந்திரமௌலீசுவரர் 
திகழ்கிறார்.
ஒவ்வொரு மாத அமாவாசை 
முடிந்த மூன்றாம் நாளில் 

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர
சுவாமிக்கு பசும்பால் 
நைவேத்தியம் செய்து, 

பின் மூன்றாம் பிறை
சந்திரனைத் தரிசனம் செய்து வந்தால் 

தொழில், கல்வி, வியாபாரம் 
ஆகியவற்றில் சிறந்து 
விளங்கலாம்.
Read 4 tweets
Jan 23
#சோமாஸ்கந்தர்

பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர் :

சனாதன தர்மத்தில்

சைவம் (சிவன்),

வைணவம் (விஷ்ணு),

சாக்தம் (சக்தி),

கௌமாரம் (முருகன்),

சௌரம் (சூரியன்),

காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது. Image
இதில் சிவன், சக்தி, முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு.

சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம், நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது. Image
உண்மையாகிய சிவனும், அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்ற இன்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.

சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து,

பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க, Image
Read 6 tweets
Jan 23
#முற்பிறவி_வினை_தீர

முற்பிறவி வினை நீக்கும் திருக்கோயில்!

குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.

வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால் Image
வாலி குரங்காகவும்,

இந்திரன் அணிலாகவும்,

எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.

தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.

அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
Read 8 tweets
Jan 22
புதிய சிவலிங்கம் கண்டுபிடிப்பு :

🕉️ *வாழைத் தோட்டத்தில் 3½ அடி சிவலிங்கம்*🕉️

21.01.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருகே மேலநாகம்பாடி கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் வாழைத்தோட்டத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும்
பல நாட்களாக மண்ணுக்கு வெளியே தெரிந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களால் சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம் 3½ அடி உயரத்தில் 4 மற்றும் 8 பட்டைகளுடன் இருந்தது.
பிரம்ம சூத்திர குறியீடு மற்றும் பாம்பின் உருவத்தை பின்பக்கத்தில் அமைத்திருப்பது சிறப்பான ஒன்று.

சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் அவ்வாழைத் தோட்டத்தில் கிடைத்த செங்கற்களை வைத்துப் பார்க்கும்போது சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவலிங்கம் என கருதலாம்.
Read 5 tweets
Jan 22
#கருட_சேவை

தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

தைமாதம் 8ஆம் தேதி (22-01-2023) ஞாயிற்றுக்கிழமை தை‌ அமாவாசை திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை உத்ஸவம் நடைபெறுகிறது.
இத்தனை திவ்ய தேச எம்பெருமான்கள் ஒருசேர கருட சேவை உலகத்தில் இங்கு மட்டுமே.

இந்த மங்களாசாசன கருட சேவை உற்சவத்திற்கு மிக முக்கியமானவர் ஸ்ரீ திருமங்கையாழ்வார்.
இவர் தை அமாவாசை (தை 07, 21-01-2023) அதிகாலை திருநகரி ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கல்யாண ரெங்கநாதன் திருக்கோயிலிருந்து ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் ஸ்ரீ திருமங்கையாழ்வார் கோலாகலத்துடன் புறப்பட்டு, நடுவில் உள்ள
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(