உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் #சப்த_விடங்க_தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள்.
1. திருவாரூர் வீதிவிடங்கர் - #அசபாநடனம்.
கும்பகோணத்தில் இருந்து 43 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்
படுகிறது. இங்குள்ள ஈசன் #வீதிவிடங்கர் என்று அழைக்கப் படுகிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் அசபா நடனம். உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல,
திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
2. #உன்மத்த_நடனம் #திருநள்ளாறு:
கும்பகோணத்தில் இருந்து 56 கிமீ தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில். இது சனீஸ்வர பரிகாரத்
தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள ஈசன் #நகரவிடங்கர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் #உன்மத்தநடனம் ஆகும். இது பித்தனைப் போன்று ஆடுவது ஆகும். சனி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபடலாம்.
3. #தரங்கநடனம் #திருநாகைக்காரோணம்:
கும்பகோணத்தில் இருந்து 67 கிமீ தொலைவில் உள்ளது,
திருநாகைக்காரோணம். இங்குள்ள ஆலய இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் என்றும், இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இங்குள்ள ஈசன் #சுந்தரவிடங்கர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய தாண்டவம் #தரங்கநடனம். கடல் அலைகள் எழுவது போன்று ஆடுவது இதன் நடன
முறையாகும். இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபட்டால், பாவங்களுக்கு மன்னிப்பும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.
4. #குக்குடநடனம் திருக்காறாயில்:
கும்பகோணத்தில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது இத்திருத்தலம். இங்குள்ள இறைவன் - கண்ணாயிரநாதர்
என்றும், இறைவி - கயிலாயநாயகி என்றும் அழைக்கப் படுகின்றனர். பிரம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் ஈசன் அருளிய தலம் இது. இங்குள்ள ஈசன் #ஆதிவிடங்கர் எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் #குக்குடநடனம். கோழியைப் போல் ஆடுவது இதன் அசைவாகும். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரி
ஆகவும் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.
5. #பிருங்கநடனம் #திருக்குவளை:
கும்பகோணத்தில் இருந்து 72 கிமீ தொலைவில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் -பிரம்மபுரீஸ்வரர், இறைவி - வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் ‘அவனி விடங்கர்.’ இவர் ஆடியது ‘பிருங்க நடனம்.’ வண்டு மலருக்குள்
குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக் கொள்ள, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.
6. #கமலநடனம் #திருவாய்மூர்:
கும்பகோணத்தில் இருந்து 76 கிமீ தொலைவில் இருக்கிறது திருவாய்மூர். இங்குள்ள இறைவன் - வாய்மூர்நாதர், இறைவி - பாலினும் நன்மொழியம்மை.
பிரம்மன் மற்றும் சூரியன் சாபம் தீர்த்த தலம் இது. இங்குள்ள ஈசன் #நீலவிடங்கர். இவர் ஆடிய நடனம் #கமலநடனம். தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். கல்வி மற்றும் செல்வம் பெருகும்.
7. #அம்சபாதநடனம் #திருமறைக்காடு:
கும்பகோணத்தில் இருந்து
106 கிமீ தொலைவில் இருக்கிறது, திருமறைக்காடு. இங்குள்ள இறைவன் - மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர், இறைவி - யாழினும் இனிய மொழியாள், வேதநாயகி. அப்பரும் சம்பந்தரும் தங்கள் பாடல்களின் மூலம், கதவை திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன் #புவனவிடங்கர். இவர் ஆடிய நடனம்
#அம்சபாதநடனம். அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்றது இந்த நடனம். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும். மன அமைதி, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை
தரிசிக்கலாம்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 23
@sarvadamanpremi இருக்கிறது. எங்களுக்கும் குல தெய்வம் பல வருடங்களாகத் தெரியாமல் 5 வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடித்தோம். திருப்பதி பெருமாள் தான் குலதெய்வமாக வைத்திருந்தோம். பிறகு எனக்குப் பல பிரச்சினைகள் வந்த பின் ஜோசியரை அணுகியபோது அவர் குலதெய்வம் வழிபாடு இல்லாமல் தான் இந்தப் பிரச்சினை என்றார்
@sarvadamanpremi பிறகு வேறு ஒரு நல்ல ஜோசியர், என் நண்பருக்கு குலதெய்வம் கண்டுபிடிக்க உதவியதால் அவரிடம் சென்றேன். அவருக்கு trance மாதிரி ஜாதகத்தைப் பார்த்ததும் வரும். அவர் எங்கள் குல தெய்வம் எப்படி இருக்கும் என்று சில clues கொடுத்தார். தினம் கூர்ம ஆவதாரத்தை, ஸ்லோகம் சொல்லி வழிபாட்டு வர சொன்னார்.
@sarvadamanpremi ஒரு நாள் விடாமல் ஏழெட்டு வருடங்கள் பிரார்த்தித்து வந்தேன். அவர் சொன்னபடி எதிர்பாராத விதமாக எங்கள் தூரத்து உறவினர் மூலம் எங்கள் உண்மையான சொந்த ஊரும், குல தெய்வமும் தெரிய வந்தது. குல தெய்வம் போய் வணங்கிவிட்டு வந்ததும் பல நல்ல விஷயங்கள் உடனே நடந்தேறியது. எங்கள் குடும்பத்தார்
Read 5 tweets
Jan 23
#MahaPeriyava
Author: Dr. Padma Subramanyam, 'Nrutyodaya', Chennai
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Some years back a few Russian and American professors, who came to Chennai, had darshan of
Maha Swamigal. In the year 1987, Soviet Union celebrated the Indian Cultural Festival. It was my custom to write research papers related to our culture and tradition and show it to Periyavargal. We took one such blessed paper to hand over to Professor Ribekov, the President of
the Russian Academy of Sciences and the Institute of Oriental Studies in Moscow. The only picture that adorned his room was of the Kanchi Periyavar! What wonder, he had not even seen Swamigal in person until then. He said, 'When I come to Chennai--one, I should meet the Kanchi
Read 10 tweets
Jan 23
#குலதெய்வம் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் பல பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதோ இன்னும் ஒன்று:
1. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
2. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. கோடி நன்மை தரும்.
3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,
குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
4. குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
5.நம் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.
6. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
7. நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த
தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால்
Read 14 tweets
Jan 22
#நற்சிந்தனை ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் பரமசிவம் என்பவர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர். அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்து இருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை
அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் பரமசிவம் வந்த போது அங்கே
யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதருகோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ணலாம் என்று குதிரைக்காரனிடம் கேட்டார். அய்யா! நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு
Read 8 tweets
Jan 22
#ஶ்ரீரங்கம் #பூலோக_வைண்டம் #ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்‌ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
Read 14 tweets
Jan 21
#MahaPeriyava

Author: Smt Indira Balasubramaniam
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 6
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Kanchi Mahan needs no introduction. If it is one kind of joy to read about the experiences had by those who
approached Him, it is another kind to share them with others; and to write about them is a third kind. He was also unique in fulfilling the yearnings of those who sought Him. It was the time when Kanakabhishekam was being arranged for the Mahan. A letter received from the Matham
said that those who wished to participate in the service might give according to their Shakti, gold worth one sovereign or an equivalent amount in rupees. I decided to give the pair of bangles that I had made for my marriage. Although it was a month and a half for the day of the
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(