M.SivaRajan Profile picture
Jan 23 20 tweets 4 min read
*#சியாமளா_நவராத்திரி*

* 22.01.2023 தை வளர்பிறை பிரதமை திதி* முதல் சியாமளா நவராத்ரி ஆரம்பம்*🌹

நவராத்திரி கேள்வி பட்டிருப்போம் அதென்ன சியாமளா நவராத்திரி.

மொத்தம் 4 நவராத்திரிகள் உள்ளது என்பது பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதைப் பற்றி காண்போம்:
சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது.

இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய
நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும்.

அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் உள்ளன.

1) *ஆஷாட நவராத்திரி*

ஆனி மாதம்  அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இது வராகி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
2) *சாரதா நவராத்திரி*.
     
புரட்டாசி  மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இது துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்குரிய நவராத்திரி ஆகும்.

3) *சியாமளா நவராத்திரி*

தை மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இது இராஜ மாதங்கி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.

*4) வசந்த நவராத்திரி*

பங்குனி மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இது லலிதா திரிபுரசுந்தரிக்குரிய நவராத்திரி ஆகும்.
*சியாமளா தேவி என்பவர் யார்?*

மாதங்கியே இராஜ சியாமளா என்றும் மஹா மந்திரினி என்றும் அழைக்கப்படுகிறாள்.

மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தமையால் மாதங்கி என்ற திருநாமம் கொண்டாள்.

இவள் தசமஹாவித்யாவில் ஒன்பதாவது வித்யா ஆவாள்.
வேத மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதை என்பதால் மந்திரிணி எனப்படுகிறாள்.

கல்வி, வித்தை, ஞானம் ஆகிய அனைத்திற்கும் இவளே ஆதாரம்.

லலதாம்பிகையின் கரும்பில் இருந்து தோன்றியவள்.

லலிதா திரிபுரசுந்தரியின் மஹா மேரு சாம்ராஜ்யத்தில் இவளே மந்திரி ஆவாள்.
அம்பிகையின் வலப்புறம் அமைச்சராக சியாமளாவும் இடப்புறம் படைத்தலைவியாக வராகியும் உள்ளனர்.

சியாமளாவின் திருவுருவை லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் மற்ற தாந்திரக புராணங்கள் வெவ்வேறு விதமாக விவரிக்கின்றன.
*மாதங்கியின் தோற்றம்*

இராஜ சியாமாளவின் தோற்றத்தை காளிதாசர் தன்னுடைய ஸ்யாமளா தண்டகம் என்ற நூலின் தியானத்தில் அழகாக வருணித்துள்ளார்.
“மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |

புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண – ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||”
மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும் விருப்பம் உடையவள்.

பச்சை நிறம் கொண்டவள்.

மதங்க முனிவரின் புதல்வி.

நான்கு திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள்.

சந்திர கலை தலையில் அணிந்தவள்.

குங்கும சாந்தை மார்பில் தரித்தவள் என்று
அம்பிகையின் தோற்றத்தை வருணிக்கிறார்.

அம்பிகையின் கையில் கிளியும் இடம் பிடித்திருகின்றது.

இது வாக்கு திறமையை குறிக்கிறது.

இவளின் நிறம் பச்சை ஆகும்.

பச்சை புதனுக்குரிய நிறம் இது ஞானத்தை குறிக்கிறது.
*சியாமளா உபாசனை*

சியாமளாவை உபாசிப்பவர்களுக்கு வாக்கு பலிதம், கல்வி, வித்தை, நுண்ணறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஞானம், மனதை ஒருநிலை படுத்தும் திறன், புத்தி கூர்மை, இசை, தேர்வில் வெற்றி போன்றவை தானாக வந்து சேரும்.
இவளை உபாசிப்பது கடுமையான விஷயம் என்று தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.

*மதுரை மீனாட்சியம்மன்*:

சியாமளாவின் அம்சமாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள்.

இவளை வழிபடுவதும் மாதங்கியை வழிபடுவதும் ஒன்றே ஆகும்.
இந்த சியாமளா நவராத்திரியில் “மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்” படிப்பது நற்பலன்களைத் தரும்.

சியாமளா நவராத்திரியானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சியாமளா நவராத்திரியின் 5- வது நாள் பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது.

எனவே இந்நாளில், வடநாட்டில் விஜயதசமி போன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர்.

எனவே இந்நவராத்திரியானது சரஸ்வதி தேவியின் அருளையும் பெற்று தரும்.
*சியாமளா நவராத்திரியில் எப்படி பூஜிக்க வேண்டும்*

தை அமாவாசை முடிந்து பிரதமை  அன்றில் இருந்து ராஜ  மாதங்கியை  ஸ்ரீ சியாமளா தண்டகம், ஸ்ரீ சியாமளா அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீ அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, 
இவற்றை பாராயணம் செய்யலாம்.
வீணை மீட்ட தெரிந்தவர்கள் அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம்.

மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.

அம்பிகைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை ஒன்பது நாட்களும் படைக்க வேண்டும்.
மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும்.

இவளை பூஜிக்கும் போது மனத்தூய்மை மிக முக்கியமான ஒன்றாகும்.

மனம் அலைபாய்வதைத் தவிர்த்து முழு மனதோடு வணங்கவேண்டும். 🙏🌹

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 24
#மிக_பெரிய_சிவலிங்கம் :

#விருத்தபுரீஸ்வரர்

தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக பெரிய சிவலிங்கம் திருவருள் புரிகின்ற திருக்கோயில்.

விநாயகப்பெருமானின் பல திருவடிவங்கள் உள்ள திருக்கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட திருக்கோயிலாக ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. Image
இந்தக் கோயில் இருக்கின்ற ஊர் திருபுனவாசல், திருப்புனவாயில் என்பது பண்டைய பெயர், காலப்போக்கில் திருப்புனவாசல் என்ற பெயர் வந்தது.

மிகப்பெரிய கோயில் ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது.

நீண்ட மதில்கள் உள்ளன, கிழக்கிலும், மேற்கிலும் வாயில்கள்.
கிழக்கிலே இரு வாயில்கள் கோயிலுக்கு வெளியே தென் பக்கத்தில் வல்லபை கணேசர் சன்னதி உள்ளது.

வடபக்கம் தண்டபாணி சன்னதி உள்ளது.

கோவிலின் உள்ளே ஐந்து விநாயகர்கள் உள்ளனர்.
Read 10 tweets
Jan 24
#அகல்_விளக்கு_தீபம்

அகல் விளக்கு தீபம் சிறந்தது என்பது ஏன்?

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. Image
அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன.

கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும்.
இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் ஏற்றி மேல் சொன்னது போல இந்த மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுமாம்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.
Read 7 tweets
Jan 23
#சந்திரமௌலீஸ்வரர்

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் 
திருக்கோயில் - முசிறி.

குழந்தைப்பேறு மற்றும் 

தொழிலில் அபிவிருத்தி 
அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

சந்திரனுக்கு ஈசன் சாப விமோசனம் அளித்த கோயில்.
கருவறையில் மூன்றாம் பிறை சந்திரனைத் தனது தலையில் சூடியவாறு, 

கிழக்குத் திசை நோக்கிய 
சன்னதியில் பக்தர்களுக்கு 
காட்சியளித்து வருகிறார் 
சந்திரமௌலீசுவரர்.

தன்னை நாடி வரும் 
பக்தர்களின்  சாப 
விமோசனங்களையும் நீக்கி 
அருளுபவராக 
சந்திரமௌலீசுவரர் 
திகழ்கிறார்.
ஒவ்வொரு மாத அமாவாசை 
முடிந்த மூன்றாம் நாளில் 

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர
சுவாமிக்கு பசும்பால் 
நைவேத்தியம் செய்து, 

பின் மூன்றாம் பிறை
சந்திரனைத் தரிசனம் செய்து வந்தால் 

தொழில், கல்வி, வியாபாரம் 
ஆகியவற்றில் சிறந்து 
விளங்கலாம்.
Read 4 tweets
Jan 23
#சோமாஸ்கந்தர்

பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர் :

சனாதன தர்மத்தில்

சைவம் (சிவன்),

வைணவம் (விஷ்ணு),

சாக்தம் (சக்தி),

கௌமாரம் (முருகன்),

சௌரம் (சூரியன்),

காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது.
இதில் சிவன், சக்தி, முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு.

சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம், நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது.
உண்மையாகிய சிவனும், அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்ற இன்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.

சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து,

பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க,
Read 6 tweets
Jan 23
#முற்பிறவி_வினை_தீர

முற்பிறவி வினை நீக்கும் திருக்கோயில்!

குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.

வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,

இந்திரன் அணிலாகவும்,

எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.

தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.

அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
Read 8 tweets
Jan 22
#திருவோண_விரதம்

*திருப்பங்கள் தரும் திருவோணம் :*_

*இன்று திருவோண விரதம்*

திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.

வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.

ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.

அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(