M.SivaRajan Profile picture
Jan 29 10 tweets 3 min read
#பீமேஸ்வரர்

*பீமனின் பசியாற்றிய சிவபெருமான்*

பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

அருள்மிகு திண்டிவனம் பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ பாலாம்பிகை ஸமேத ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில்.
பஞ்சபாண்டவர்கள் 14 வருடம் வனவாசத்தில் இருந்த காலத்தில் கடைசி வருட வனவாசத்தில் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பது கட்டளையாக இருந்தது.

அச்சமயம் தர்மருக்கு பசி ஏற்படவே பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச் சொன்னார்.
எங்கு தேடியும் உணவு கிடைக்காமல் தவித்த பீமன் இறுதியாக அந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு சென்று சிவனிடம் உணவு வழங்குமாறு வேண்ட உடனடியாக அவ்வழியே சென்ற ஒருவர் மூலமாக பால் கிடைக்க அதனை குடித்து பசியாறினார்.

பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
பீமனுக்கு பால் அளித்ததால் இத்தல அம்பாள் பாலாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோயிலின் கருவறை, இடைக்கட்டு அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவை எழில் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
விஜயநகர பேரரசர்களும், சம்போவராய மன்னர்களும் இந்த கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளனர்.

சதுரமான கருவறையில் ஐந்தடி உயரத்தில் லிங்க வடிவில் பீமேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.
கருவறையின் வெளிச்சூழலில் உள்ள தெற்கு புற தேவகோட்டங்களில் தாமரை மலர்களின் மேல் நர்த்தனமாடும் விநாயகர் பெருமான்,

கல்லால் மரத்தின் மீது அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் வழங்கும் தக்ஷணாமூர்த்தி,

கிழக்கே சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால்,
வடக்கே பிரம்மன் திருபங்க நிலையில் நின்ற கோணத்தில் அருள் பாலிக்கும் துர்க்கை ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

கருவறையின் வெளியே வலது புறம் பைரவர்த்தி, ராஜராஜேஸ்வரி, இடதுபுறம் சூரிய பகவான் தரிசனம் தருகிறார்கள், மகா மண்டப தூணில் ஆஞ்சநேயர் உருவம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் தென்மேற்கு பகுதியில் வரசித்து விநாயகர் சிலையும், வடமேற்கே வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகனும், வடமேற்கு திசையில் பாலாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.
கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தின் வெளியே தனி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தி பகவான் சாளரத்தின் வழியே சிவபெருமானின் தரிசிக்கிறார்.

அதனை ஒட்டி பலிபீடம் அமைந்திருக்கிறது வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 31
*#கட்டைவிரல்_இதயத்தில்_கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான்.

பெருமாள் சயனத்தில் இருந்தார்.

அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள். Image
பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.

பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள்,

பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை.
ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.

அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே,

சொல்...சொல்.

உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.
Read 12 tweets
Jan 31
#ரேணுகாதேவி_திருக்கோயில்

தங்கம் தழைக்கச் செய்யும் ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் கோவில் :
 
செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். Image
செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்ட நல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.
தல வரலாறு

விதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன்.

இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள்.

பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.
Read 15 tweets
Jan 30
முருகனின் 16 வகை திரு கோலங்கள் :*

1. ஞானசக்திதரர்:

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். Image
2.கந்தசாமி:

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி:

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்:

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர்.

நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
Read 14 tweets
Jan 29
#வழக்கறுத்தீஸ்வரர்

*வழக்குகளை தீர்க்கும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில்*

*காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்*

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் தொடக்கத்திலேயே வலது வலதுபுறமாக அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் உற்சவம் மண்டபத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்

அடுத்து வழக்கறித்தீஸ்வரரை தரிசிக்கலாம்.

இந்த இரு சுவாமிகளும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமர்ந்துள்ளனர்.
இதில் வழக்கறித்தீஸ்வரர் லிங்க திருவருட்கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாகக் காட்சியுடன் அருள் பாலித்து வருகின்றார்.

ஒரே திருத்தலத்தில் இரண்டு சன்னதி கொண்டுள்ள திருத்தலம் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உள்ளது.
Read 6 tweets
Jan 28
#ஸ்ரீ_ராஜ_மாதங்கி

சியாமளா நவராத்திரி சிறப்பு :*

அன்னை ராஜராஜேஸ்வரியின் கரும்பு வில்லிலிருந்து உதித்தவளும்,

லலிதாம்பிகையின் மந்திரிணியாக இருப்பவளும்,

அன்னை லலிதைக்கும் தனக்கும் எந்த ஒரு பேதமும் இல்லாதவளும்,

தேவி லலிதையை விட்டு ஒரு கணம் கூட பிரியாதவளும், Image
அன்னை லலிதா பராபட்டாரிக்கைக்கு பிரியமானவளுமான ராஜ சியாமளா தேவியை மாக நவராத்திரியில் (சியாமளா நவராத்திரி) பூஜிப்பது மிகவும் விசேஷம்.

மேலும் மாசி மகம் அன்று சியாமளா தேவியை பூஜிப்பது விசேஷம்.

அதிலும் 12 மாசி மகம் இடைவிடாது யார் ஒருவர் சியாமளா தேவியை பூஜிக்கிறார்களோ
அவர்கள் கீர்த்தி, பேர், புகழ், அரசு பதவி அடைவர்.

சியாமளா தேவிக்கு உகந்த மலர் வெண்தாமரை, செண்பகம்.

வஸ்திரம் - சிகப்பு மற்றும் பச்சை பட்டு.

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல், பால் பாயசம் ஆகும்.
Read 7 tweets
Jan 28
சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர் :

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.

1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது.

ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் Image
படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார்.

கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம்.

ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது.

மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.
ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது.

அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(