M.SivaRajan Profile picture
Jan 31 12 tweets 2 min read
*#கட்டைவிரல்_இதயத்தில்_கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான்.

பெருமாள் சயனத்தில் இருந்தார்.

அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.

பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள்,

பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை.
ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.

அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே,

சொல்...சொல்.

உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.
ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன்.

பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே!
உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.

பெருமாள் சிரித்தார்.

பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே! என்றார்.

சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது.

கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர்.
புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன்.

கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.

நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன.
எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.

பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான்.

இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல.

உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர்.

அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்!

அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ,
என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.

எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.
வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள்.

விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள்.

அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்? என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார்.

அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.

பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார், என்றார்.

பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.
பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரல்வாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன், என்றார்.

பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம்.

அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.

#ஓம்_நமோ_நாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 2
#தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

(தைப்பூசம் 5.2.2023 )

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். Image
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.

அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
Read 35 tweets
Feb 2
#வீணா_தட்சிணாமூர்த்தி

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர். Image
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன்
திருமால் காட்சி தருகிறார்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.

இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.
Read 11 tweets
Feb 1
#கண்ணப்ப_நாயனார்_குருபூஜை

வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர்.

ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

சிவன் மீது அன்பு பெருகியது. Image
அவரைத் தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார்.

தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தார்.

மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.
இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவாசரியார் மனம் வருந்தினார்.

இறைவனிடம் முறையிட்டார்.

கண்ணப்பரின் அன்பினை சிவாசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.
Read 8 tweets
Feb 1
ஸ்ரீ விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம் :

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும். Image
ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
Read 9 tweets
Feb 1
#ஸ்ரீ_கணபதி_சஹஸ்ரநாம_ஸ்லோகங்களும்_பலன்களும் :

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது.

அதைத் தினமும் கூற முடியாதவர்கள்,

சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.

இது அனுபவத்தில் கண்டது. Image
1.காரிய தடை நீங்க:-

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதை தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.

ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க :

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:
கனசண்ட ஸமாஸ்ரய :
ஜயோஜய பரீவார :
விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
Read 10 tweets
Feb 1
#வாமணபுரிஷ்வரர்

*கருவறையில் பள்ளியறை கொண்டிருக்கும் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர்*

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் எழுந்தருளி இருப்பது ஸ்ரீ அம்புஜக்ஷி ஸமேத ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் கோயில். Image
இத்தலமானது மகாவிஷ்ணுவிற்குப் பாவ விமோசனம் அளித்த ஸ்தலம் என்றும்,

18 சித்தர்களில் ஒருவரான அகத்திய முனிவர் இதனால் வரை இங்குக் காட்சி தருவதாகவும் கூறப்படுகின்றது.

சுயம்பு மூர்த்தியாக மூலவர் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் காணப்படுகின்றார்.
இத்தலத்தில் தனியாகப் பள்ளியறை சன்னதி கிடையாது மூலக்கருவரையில் பள்ளியறையாகக் காணப்படுவதால் எம்பெருமானை எம்பெருமானை சதாக்காலமும் தரிசிக்க முடியாது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(