✍️ #என்றென்றும்_அண்ணா வின் தமிழ் புலமைக்கு சிறிய எ.கா.

✍️ எப்படிப்பட்டக் காலத்தில் புத்தரும் புத்தமார்க்கமும் தோன்றிற்று என்பதற்கான அண்ணாவின் விளக்கம் இந்த இழையில்...👇

புத்த மார்க்கம், எளிதிலே கிடைத்ததல்ல - இந்த அறிவாயுதத்தைக் காணச் சித்தார்த்தர் பட்டபாடு கொஞ்சமல்ல.

1/N
📍 அரச மன்றங்களிலெல்லாம் ஆரியக் குருமார்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலம்

📍 காலாகாலத்தில் மழை பெய்யாவிட்டாலும், கொடிய நோய் ஏதேனும் ஏற்பட்டாலும், போர் மூண்டாலும், பூபதிக்குப் புத்திரபாக்கியம் இல்லை என்றாலும், வேள்விகளைச் செய்து, விசேஷ பலன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை

2/N
ஆழப்பதிந்திருந்த காலம் படைபலத்தைவிட அதிகமாக, பூஜாபலத்தை நம்பிக்கொண்டு, மன்னர்கள் இருந்த காலம்.

📍சோமதேவனுக்கும். இந்திரனுக்கும், வாயுவுக்கும், வருணனுக்கும், அக்கினிக்கும் மற்றும் பல தேவதைகளுக்கும், 'யாகம்' செய்யப்பட்டு, ஒவ்வோர் வகையான யாகத்தின் மூலமும் ஒவ்வோர் விதமான

3/N
"பலன்' கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நாடாள்வோர் இருந்த காலம். ஓம குண்டத்தருகே கிளம்பும் வேத மந்திர ஒலிக்கு ஈடான சக்தி வாய்ந்த குரல், வேறெதற்கும் இல்லை என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நாட்கள். வேள்வி நடத்தவும் வேத மோதவும் 'பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்புரிமை உண்டு

4/N
என்ற 'தர்மம்' எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருந்த காலம்.

📍 பிராமண மார்க்கம், ஈடு எதிர்ப்பற்று அரசோச்சி வந்த நேரம்.

📍 ஜாதி முறையைச் சந்தேகிக்கவோ, எதிர்க்கவோ, முடியும் என்ற எண்ணமே.ஏற்படாத நாட்கள்.

5/N
📍கடவுள், அவரவர்களுக்கென்று, குலத்தையும், ஒவ்வோர் குலத்துக்கென ஓர் தர்மத்தையும், ஏற்கெனவே அமைத்து வைத்து விட்டிருக்கிறார். எனவே, அந்தத் தர்மத்தைத் தவறினால் ஆண்டவனால் அழிக்கப்படுவர் என்ற அச்சம், எவர் உள்ளத்திலும் குடிகொண்டிருந்த காலம்.

6/N
📍வீராதி வீரனும் சாம்ராஜ்ய சிருஷ்டிக்கர்த்தாக்களும், பிராமன மார்க்கத்துக்கு அடிபணிந்தாலொழிய வாழமுடியாது என்ற அளவுக்கு, வைதீக மார்க்கத்துக்கு ஆதிக்கம் இருந்த காலம்.

📍விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிரம்மாண்டான கோயில்கள் கட்டப்பட்டு, வேந்தர்களின் காணிக்கைகள் குவிக்கப்பட்டு,

7/N
வேத மோதிகளின், ஆதிக்கத்தின் கீழ் விடப்பட்டிருந்த காலம்.

📍 ஆலய அதிபர்களாக ஆரியக் குருமார்கள் வீற்றிருந்த காலம்.

📍 அவர்களின் தாய்மொழியான. சமஸ்கிருதம், 'தேவபாஷை' என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த நாட்கள்.

📍 ஜெபமாலை, செங்கோலை ஆட்டிப் படைத்த காலம்.

8/N
📍பூஜாரியின் கண் செல்லும் வழி செல்ல - பூபதிகள் காத்துக் கிடந்த
காலம்.

📍வங்கம், கலிங்கம், துளுவம், பாஞ்சாலம், நேபாளம், கூர்ஜரம், மகதம், அங்கம் எனும் எந்த அரசிலும், வைதீக பிராமண மார்க்கமே, ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலம்.

9/N
📍வேதமார்க்கம், வேள்விமுறை, ஜாதி அமைப்பு, குலதா்மம், மந்திர உச்சாடனப் பலம், எனும் இம்முறைகளுக்கு. மேலானவைகளாகவோ இவைகளைப் போன்றவைகளாகவோ வேறு ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வியும் பிறக்காத காலம்.

📍வேதமார்க்கத்தின் பயனாக. ஜாதி முறையும், ஜாதி முறையின் பயனாக, பிராமண ஆதிக்கமும்

10/N
ஏற்பட்டிருக்கிறதே. இது சரியா, பயன் தருவதுதானா என்பதுபற்றி, எண்ணமும் எழாமலிருந்தது.

📍வேதமோதி வேள்வி நடாத்துவதன் மூலம், இகத்திலே, இடுக்கண் களைந்து கொள்ள முடிவதில்லையே. வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களும, பஞ்சம், பிணி, போர், கலகம். முதலிய பெரும் நாசப் புயல்கள் வீசாமல் தடுக்க

11/N
முடிவதில்லையே. இந்நிலையிலே, வைதீக மார்க்கம் என்ன சாதித்து விட்டது, என்று எவரும் கேட்கத் துணியவில்லை

📍சாந்தி இல்லை - சமர்கள் ஏராளம்! ராஜகோலாகலத்துக்குக் குறைவில்லை. ராப்பட்டினிகளுக்கும் குறைவில்லை! கண்டாரைக் கொல்லும் கட்டழகியருக்கும் காதல் வாழ்க்கை நடத்தும் சீமான்களுக்கும்

12/N
குறைவில்லை - கண்டுகொண்டிருக்கும்போதே, ஊன், உருகி, எலும்புக் கூடாகி, மடியும்,பஞ்சைகளுக்கும் குறைவில்லை!

📍இன்பத்துக்கு அருகே துன்பம்! செல்வத்துக்கு அருகே வறுமை! அரண்மனைக்கருகே அன்னக்காவடிகள்! சாந்தோபதேச மண்டபத்துக்கருகே பாசறைகள்! மாயப் பிரபஞ்ச உபதேசியாருக்குப் பக்கத்திலே

13/N
மண்டலம் பல ஜெயித்து, மணிமுடியின் ஜொலிப்பை அதிகப்படுத்திடும், கூர்வாள் ஏந்திய படைத்தலைவர்1 இப்படி இருந்தது - இவ்வண்ணமிருப்பது சரியா என்ற கேள்வியும் எழாமலிருந்தது.

📍மழை இல்லையா, வருண பூஜை செய்வோம்!
மாற்றானா வெல்ல வேண்டுமா, மற்றோர் யாகம் செய்வோம்!

14/N
ஆடுகள், பசுக்கள். (முக்கியமான நேரத்திலே நரபலியும் கூட) அறுத்துப் போட்டு. வேள்வி நடாத்துவோம் விசேஷ பலன் கிடைக்கும் என்று குருமார்கள் கூறக் கேட்டு, கோல்கொண்டோன் அதுபோலவே செய்திடும் காலம்.

📍அந்தக் காலத் திரையைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று. கதிரொளி கபிலவஸ்து நகரில்.

15/N
📍ஆரிய மார்க்கத்தின் கோட்டையாக விளங்கிய அரண்மனைக்
குள்ளிருந்தே கிளம்பிற்று. ஆரியத்தை ஒழிக்கும் அறிவொளி!!

📍அரச வம்சத்தை ஆட்டிப் படைத்த ஆரிய மார்க்கத்தை எதிர்த்திடும் ஆற்றலுள்ள ஆண்மகனொருவன். அதே அரச வம்சத்திலிருந்தே கிளம்பினான்!

16/17
📍ஆரிய மார்க்கத்தினர், எதிர்பார்த்திருக்கவே முடியாத
இடத்திலிருந்து கிளம்பிற்று, புத்தொளி - புத்த மார்க்கம்.

🎯 அறிஞர் அண்ணாவை ஆயுதமாக்குவோம்; ஆரியத்தை அழித்தொழிப்போம்!

🙏🙏🙏

17/17

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with குறள் நெறி

குறள் நெறி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arakkarperiyar

Dec 19, 2022
Thread...!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்து என்பது மனித வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில் தோன்றியது. பாதியில் உருவான அந்த எழுத்தை ஒப்பீடாக வைத்துத் தான் "தெய்வத்தால் ஆகாது" என்கிற கடவுளை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் அய்யன் திருவள்ளுவர்?

1/N
பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் தோன்றிப் பல நூறு ஆண்டுகள் வரை பேசும் வன்மையைப் பெற்றிருக்கவில்லை.

முதலில் விலங்குகளைப் பார்த்து பயத்தில் ஒலி செய்திருக்க வேண்டும்.

பின்னர்ச் சைகைகளின் மூலமாகவே ஒருவருக்கொருவர் தங்கள் உள்ளக்கிடக்கைகளை உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும்.

2/N
பின், நாளாக நாளாக ஒலி செய்தலும் சைகை காட்டலும் வளர்ந்துகொண்டே வந்திருக்க, அனுபவ அறிவு மிகுந்தோறுவதால் புதிய புதிய எண்ணங்கள் உள்ளத்தில் தோன்றுதல் இயல்பானதால் வாயைத் திறந்த மாத்திரத்திலேயே பிறக்கின்ற ஒலிகள் மூலமாகவே அவர்கள் தங்கள் பேச்சு சொற்களை முதலில் நடத்தியிருக்கலாம்.

3/N
Read 8 tweets
Dec 19, 2022
Thread...!

நம் வாழ் நாளில் அரசுக்கு கொடுக்கும் வரிகளை (tax) காட்டிலும், பார்ப்பானுக்கு அதிகமான வரிகளை கொடுக்கிறோம்.

பிறந்த தினத்திலிருந்து
இறக்கும் வரை ஒரு இந்து பார்ப்பானுக்கு வரி கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.
குழந்தை பிறந்தவுடன் பார்ப்பானுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

1/N
இல்லாவிட்டால் குழந்தை சுகமாய் வளராதாம்.

1. குழந்தை பிறந்து 16வது நாள் 'திட்டுக்கழியும்' சடங்கென்று ஒரு விழா நடத்தவேண்டும்.
அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை கொடுக்கவேண்டும்.

2. சிறிது நாள் கழித்து குழந்தைக்குப் பெயரிட வேண்டும். அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை உண்டு.

2/N
3.ஓராண்டு கழித்து ஆண்டு
நிறைவுவிழா வந்துவிடும். அப்பொழுது பார்ப்பானுக்குக் கொண்டாட்டந்தான்.

4.பின்பு குழந்தைக்கு சோறு ஊட்டவேண்டும்.அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை.

5.குழந்தை ஆண் குழந்தையாய் இருந்தால் குழந்தைக்கு குடுமி வைக்க வேண்டும்.அதற்கும் பார்ப்பானுக்கு தட்சணை உண்டு.

3/N
Read 10 tweets
Dec 17, 2022
இவ்வுலக வாழ்வில்
பட்டியல் பிரிவு மக்களைக் கொடுமைப் படுத்தும் கடவுள், அவர்களுக்கு மறுமையில் ஏதோ நல்லது தரவல்லது என்கிற நம்பிக்கை எப்படி வரும்? ஏன் வரனும்?

பக்தி மார்க்கத்தில் மூழ்கி ஆனந்தக் கூத்தாட அந்த பட்டியில் பிரிவு மக்களுக்கு நேரமில்லை - காலமில்லை - அவசியமும் இல்லை!

1/3
வயிற்றில் இருக்கும் கருக்குழந்தையும், தொட்டிலில் தூங்கும் கைக்குழந்தையும் போக, பட்டியல் பிரிவு மக்களின் குடிசையிலுள்ள ஒவ்வொரு ஜீவனும் காலை முதல், மாலை வரை காடு கரைகளில் திணறத் திணற உழைத்தால் தான் அரை வேளைக் கஞ்சிக்காகிலும் மார்க்கமுண்டு.

2/4
ஆதலின் அவர்களுக்கு கோயில்கள் வேண்டாம்; கோவில் உற்சவாதிகளும் திருவிழாக்களும் வேண்டாம்.

அவர்களுக்குப் பலமும், பணமும், நேரமும் ஏற்படும்போது அக்கோவில்களையும், அதிலுள்ள சாமிகளையும் கட்டி வைக்கும் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
அதைப் பற்றி யாரும் கவலைக் கொள்ளத் தேவையில்லை.

3/4
Read 4 tweets
Nov 22, 2022
தமிழ்நாட்டில் மறைந்து விட்டதாகக் கருதப்படும் பௌத்த - சமண சமயங்களின் சொல், தொடர், நம்பிக்கைகள் என்பன சமய எல்லைகளைத் தாண்டி இன்றும் வாழ்கின்றன.

உதாரணங்கள் சில...👇

1. ஆழ்வார் என்னும் பெயர், வைணவத்துக்கே உரிய சொல்லாகக் கருதப்படுகின்றன.

ஆனால்,
பௌத்த மரபில் 'ஆழ்வார்' என்ற சொல்

1/N
ஆசார்யர்களை (அறம் உரைக்கும் ஆசிரியர்களைக்) குறிப்பதாக வழங்கியிருக்கிறது.

"ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார்" ஒருவரை நீலகேசி உரையிலிருந்து அறிகிறோம் (மொக்கலவாதச் சருக்கம்). ஆழ்வார் என்ற பெயர் வழக்கிற்கு இதுவே காலத்தால் முற்பட்ட பயன்பாடு என்று தெரிகிறது.

2/N
இதற்கு மறுதலையாக 'ஆழ்வார்' என்ற சொல் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓரிடத்திலேனும் காணப்பட வில்லை என்பதையும் நோக்க வேண்டும். பிற்காலக் கல்வெட்டுக்களிலும் உரைகளிலும் இப்பெயர் திருமாலையும், அரச குடும்பத்துப் பெண்களையும் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது.

3/N
Read 11 tweets
Nov 20, 2022
பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் அவர்களின் "பேச்சும் எழுத்தும்" நூல், தொகுதி - 1.

பழங்குடிமக்களை நாகரிகம் உள்ளவர்களாக ஆக்கவும், கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களை வழிநடத்திச் செல்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்? இந்த வெட்கக் கேடான நிலைக்குக் காரணமென்ன?

1/N
பழங்குடியினர் பிறவியிலேயே மூடர்களாக அமைந்துவிட்டதுதான் அவர்களின் நாகரிகமற்ற நிலைக்குக் காரணம் என்று கூற இந்துக்கள் முற்படலாம்.

இந்தப் பழங்குடி மக்களை நாகரிகமுள்ளவர்களாக ஆக்கவும், மருத்துவ உதவிகள் செய்யவும், சீர்திருத்தவும், நல்ல குடிமக்களாக ஆக்கவும் இந்துக்கள் எவ்வித

2/N
முயற்சியும் மேற்கொள்ளாததுதான் அவர்கள் நாகரிகமற்றவர்களாக நீடிக்கக் காரணம் என்பேன்.

இதை ஏற்றுக்கொள்ள இந்துக்கள் மறுக்கலாம். ஒருவேளை கிறிஸ்தவ மிஷனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியாதா?

3/N
Read 9 tweets
Nov 18, 2022
1936ம் ஆண்டு மே மாதம் 30,31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாநாட்டில்
டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரையில் ஒரு சிறு பகுதி..👇

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது,

1/N
உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட.

மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய

2/N
எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான்.

3/N
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(