M.SivaRajan Profile picture
Feb 4 32 tweets 5 min read
சித்ஸபா பிரவேசம்.

ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடிய நன்னாள்.

தைப் பூச தாண்டவம்
ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 05.02.2023)
ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்

ஜடாதரம் பார்வதி வாமபாகம்

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம்

சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி

- பதஞ்சலி மஹரிஷி.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.
- திருமூலர் - திருமந்திரம்.
பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பௌர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.

சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது.

காசியில் உள்ள கங்கையை விட மேலானது.

மிகவும் புனிதம் வாய்ந்தது.

சிவசக்தி ரூபங்கள் இணைந்தது.

ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால்,
சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது.

இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது.

கௌடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.
இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.

ஸ்தலம் : சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம்.

உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம்.
உபநிஷதங்கள்4 உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம்.

தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது.

சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம்.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம்.

மரண பயம் போக்கும் ஸ்தலம்.
மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர்.

ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்)
பரமானந்த நடனம் ஆடுபவர்.

கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

வேதங்கள் போற்றும் வேதநாயகர்.

கலைகள் போற்றும் கலாதரர்.

சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர்.

தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர்.

பரதம் போற்றும் பரமேஸ்வரர்.

இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர்.
காப்பியங்கள்5 போற்றும் கனகசபேசர்.

ஞானம் அருளும் ஞானமூர்த்தி.

மக்கள் வணங்கும் மகேசர்.

வரங்கள் அருளும் வள்ளல்.

புராண விளக்கம் :
ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க,
விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க,

தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க,

விஷ்ணு அருள்பாலிக்க,

ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து,
நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று,

தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.
தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.

தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம்.
யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம்.

ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே,

ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய

நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.
தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க,

ஸகல தேவர்களும்,

அனைத்து கணங்களும் உடன் வர,

இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி,

மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.
அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன.

வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது.

இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது.

முகத்தில் புன்னக பூக்கின்றது.
தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை.

தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய,

மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய,

பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த
உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.

இந்திரன் புல்லாங்குழல் இசைக்க,

தும்புரு கீதம் ததும்ப,

பிரம்மா தாளம் போட,

சரஸ்வதி வீணை மீட்ட,

சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ,

ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட,
நந்தி மத்தளம் வாசிக்க,

விஷ்ணு முரசு கொட்ட,

லக்ஷ்மி மதுரகீதம் பாட,

பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும்,

ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர,

ஆனந்தத்தில் விநாயகராட,

மயிலோடு குமரனாட,

தேவ கன்னியராட,

நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை,
நெஞ்சம் உருக,

ஆனந்தக் கண்னீர் சொரிய,

பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி,

முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த நடனமாடிய அம்பலவாணர்,

தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ,
பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில்,

நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார்.
வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன.
உருவம் (ஸ்ரீ நடராஜர்),

அருவம் (சிதம்பர ரகசியம்),

அருவுருவம் (ஸ்படிக லிங்கம்)

என மூன்று வடிவங்களிலும் அமைந்து,

மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார்.

அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.
அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே.

பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன்.

எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு,
தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.

தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து,

பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க,

ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும்.
மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி,

ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து,

அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.
எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.
தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி,

ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும்,

பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.
குறிப்பெடுத்த நூல்கள் :

1. குஞ்சிதாங்கிரிஸ்தவம்

2. கோபால கிருஷ்ண பாரதி பாடல்

3. சிதம்பர ஸபாநாத புராணம்

4. சாந்தோக்ய உபநிஷத், கைவல்ய உபநிஷத்

5. சிலப்பதிகாரம் - ஸ்ரீ நடராஜரின் பாண்டரங்க, கொடுகட்டி நடனம்,
6. ஜோதிட சிந்தாமணி

7. ஸ்ரீ நடராஜ தத்வம்

8. மாணிக்கவாசகர் - திருவாசகம்

9. தேவாரம் - திருஞான சம்பந்தர்

ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ சித்ஸபேஸ்வர ஸ்வாமினே நமோ நமஹா.

#தைப்பூச_ஆனந்த_தாண்டவம்

#தில்லை_தைப்பூசம்

#தைப்பூசம்_அன்னப்பாவாடை

#சைவசமயம்

#சிவவழிபாடு

#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 5
#மயில்_வாகனம்

மயில் வாகனத்தைப் பற்றிய ஒரு அபூர்வ விஷயத்தினை பார்ப்போம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் ஒன்று உண்டு.

திருவாதிரை சிவபெருமானுக்கும்,

திருவோணம் மகாவிஷ்ணுவிற்கும் உரியவை.

முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம். Image
முருக அஷ்டோத்திரத்தில், "ஓம் விசாகாய நமஹ' என்று அவரது நட்சத்திரம் குறித்து வருகிறது.

ஆதிரையான் என்று சிவபெருமானையும்,

ஓணத்தான் என்று மகாவிஷ்ணுவையும் குறிப்பிடுவதைப் போல,

மயிலேறும் விசாகன் என்று முருகனை நட்சத்திரத்தின்
பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
"விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.
"மயிலேறிய வடிவேலன்' என்கிறார் அருணகிரிநாதர்.

அருணகிரி வாக்குப்படி, முருகப்பெருமான் மயில் மீது ஏறி சஞ்சரிப்பவர் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், மயில் வாகனத்திலேயே, பல மயில் வகை உண்டு.
Read 11 tweets
Feb 5
#சேந்தனார்

இன்று தைமாத பூச நட்சத்திரம் சேந்தனார் குருபூஜை :

ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய  அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார். Image
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.

உடன் பட்டினத்தடிகள்  “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
Read 17 tweets
Feb 4
#கோவிந்த_நாமம்

பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி
பெருமாளைத் தரிசிப்பார்.

ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை.

இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து

தம்பி ! உன் குடும்பம் நலமா?

ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா என்று கேட்டார்.

அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை என்றார்.

உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன்,
எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே!
அதைச் சொல்லேன்! என்றார்.

வந்தவர், கோவிந்தா! கோவிந்தா என்றார்.

பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன் இது தானா!

நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன்.

அதை விடவா இது பெரிது என்றார்.
Read 6 tweets
Feb 4
#தைப்பூசம்

முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!

தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!

தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.

பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!
Read 11 tweets
Feb 3
#பூபதி_திருத்தேர்

இன்று ஸ்ரீரங்கம் பூபதித்தேர்.

ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட் டுவந்த பிரசித்திப் பெற்ற திருவிழா தைத்தேர் விழா.

ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பூபதித்திருநாள் என்ற பெயரில் நடைபெறும்.
இது தனி விழா.

கொடியேற்றத்துடன் தொடங்கும்.

அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கொடியேற்ற மண்டபம் வந்தடைவார்.

பின்னர் கொடிப்பட்டம் புறப்பட்டு காலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழா  11 நாட்கள் நடைபெறும்.
நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைவார்.

பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை திருச்சிவிகையில் புறப்பட்டு கோயில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைவார்.
Read 6 tweets
Feb 3
#வைரக்_குஞ்சிதபாதம்

"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"

(பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்)

நன்றி - மகாபெரியவா புராணம்.

திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார்.
சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள்.

நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன்.
அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும்.
ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.

சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(