கீழடி அகழாய்வு தொடர்பான இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கை என்ன சொல்கிறது? #Exclusive
----------------------------
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். (1/7)
கீழடி குறித்து இந்த ஆய்வறிக்கை சொல்வதென்ன? பிபிசி வழங்கும் பிரத்யேகத் தகவல்கள்.
கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. (2/7)
இதில் முதல் காலகட்டம் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 5ஆம் நூற்றாண்டுவரை நிலவியிருக்கலாம். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் இங்கே வாழ துவங்கியிருக்க வேண்டும். 2வது காலகட்டம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். (3/7)
இந்தக் காலகட்டத்தில்தான் கீழடி, ஒரு முதிர்ந்த (mature period) வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில்தான், கீழடியில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. (4/7)
இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளம் செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. (5/7)
கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது.
கீழடியில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தாலும், அவை இலங்கையோடு தொடர்புடையவையே தவிர, வட இந்தியாவுடன் தொடர்புடையவை அல்ல. (6/7)
விரிவான தகவல்களைக் கொண்ட கட்டுரைக்கான இணைப்பு bbc.com/tamil/india-64…

(7/7)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Muralitharan K

Muralitharan K Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @muralijourno

Feb 9
துளசிதாஸர் 16ஆம் நூற்றாண்டில் அவதி மொழியில் எழுதிய ராம சரித மானஸ் வட இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் சில வரிகள் சாதிரீதியாக இழிவுபடுத்துபவையாக இருப்பதால் அவற்றை நீக்கவேண்டும் என்ற குரல்கள் வட இந்திய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. (1/11) Image
இந்த நூலின் பிரதியை கொளுத்தியதாக சிலரை உத்தரப்பிரதேச அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவரும் பிஹாரின் கல்வி அமைச்சருமான சந்திரசேகர். (2/11)
இந்த புத்தகம் "சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது" என்று சந்திரசேகர் (இவர் ஜாதி பின்னொட்டை தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்துவதில்லை) கூறியதால் பிரச்னை தொடங்கியது. பல்கலை கழக மாணவர்களின் கூட்டத்தில் பேசிய அவர் தனது கருத்தை நிரூபிக்க ராம்சரிதமானஸின் சில வரிகளை வாசித்தார். (3/11) Image
Read 11 tweets
Feb 9
விலங்குகளுடன் sex வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் Beastiality என்கின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. இது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு IPC 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். (1/5) Image
.
மிருகங்களை புணர்வதற்கான காரணம், பாலியல் ஏமாற்றம் (Sexual frustrations) மற்றும் பாலியல் கற்பனை (sexual fantasies) என இரண்டு வகைக்குள் அடங்கிவிடுவதாக சொல்கிறார் டாக்டர் ரெய்னா.
பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றன. (2/5)
பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் பெரும்பாலும் எல்லோருக்கும் அமைவதில்லை. இதுபோன்ற நேரங்களில் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கு பலியாவது விலங்குகளே என்பது வருத்தத்திற்குரிய விஷயம்" என்று சொல்கிறார் டாக்டர் ரெய்னா. (3/5)
Read 5 tweets
Feb 6
2005 நவம்பர் 13ஆம் தேதி. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பிஹாரின் சிறு நகரமான ஜெஹனாபாத். இரவு 9 மணி. ஊரடங்கி போயிருந்தது. திடீரென துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம். அங்கிருந்த CRPF முகாம், டவுன் காவல் நிலையம், ஜெஹனாபாதின் சிறை ஆகியவை ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாயின. (1/9) Image
மொத்தம் 400 - 500 நக்ஸல்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்பட்டது.
தாக்குதலில் ஜெஹனாபாத் சிறை தகர்க்கப்பட்டது. அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த நக்ஸல் தலைவரான அஜய் கானுவை விடுவிப்பதுதான் நோக்கம். (2/9) Image
அந்தச் சிறையில் இருந்த மூத்த நக்ஸல் தலைவர்கள் உட்பட 389 பேர் தப்பினார்கள். இந்தத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர்தான் சிறைக் காவலர்கள். அந்தச் சிறையில் இருந்த ரண்வீர் சேனாவைச் சேர்ந்த 9 பேரை கடத்திச் சென்ற நக்ஸல்கள் பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்றனர். (3/9) Image
Read 9 tweets
Feb 4
அதானியை வீழ்த்திய ஹிண்டன்பர்க் நிறுவனம்: எளிய விளக்கம்
--------------------------
இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியை இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான கௌதம் அதானி மறக்கவே மாட்டார். அவர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை அன்றைக்குத்தான் வெளியானது. (1/11)
அதானி குழுமம் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 88 கேள்விகளை முன்வைத்தது அந்த அறிக்கை. அறிக்கை வருவதற்கு முன்பு வரை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த கெளதம் அதானி இப்போது 21வது இடத்தில். அவரது குழும பங்குகளின் விலைகளும் பல மடங்கு சரிந்தன. (2/11)
இது தவிர ரூ.20,000 கோடி மதிப்பிலான FPO பங்கு வெளியீட்டையும் கெளதம் அதானி ரத்து செய்தார்.
இந்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் யார், இதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் பெயர் காரணம்.
1937ல் ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் இருந்த நேரம். (3/11)
Read 11 tweets
Feb 4
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமையகத்தில் ஒரு புத்தக விற்பனை நிலையம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏற்கனவே பல கோவில்கள் தனியாக புத்தகங்களை வெளியிடுகின்றன. தவிர, திருக்கோவில் என்ற மாத இதழும் வெளிவருகிறது. (1/6)
ஆனால், இந்தப் பத்தகங்களை அந்தந்தக் கோவில்களுக்குச் செல்லும்போதுதான் வாங்கும் நிலை இருந்தது. எந்தக் கோவில் எந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது என்பதும் அங்கே சென்றால்தான் தெரியும்.
தற்போது இந்து சமய அறநிலையத் துறையே நேரடியாக புத்தகங்களை பெரிய அளவில் வெளியிட்டுள்ளது. (2/6)
திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களின் மறுபதிப்பு, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, .... (3/6)
Read 6 tweets
Feb 3
சமீப மாதங்களில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராடுவது குறித்த படங்கள் ஒரு ட்ரெண்டாக மாறத் துவங்கியிருக்கின்றன. 'கார்கி', 'செம்பி' ஆகிய படங்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை பின்புலமாக கொண்டிருந்தன. (1/11)
அனல்மேலே பனித்துளி, ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடுவதை பின்னணியாகக் கொண்டிருந்தது.
இப்போது இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகிபாபுவை நாயகனாக வைத்து வெளிவந்திருக்கும் படமும் குழந்தை மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு நீதியைத் தேடும் கதைதான். (2/11)
ஆனால், பொம்மை நாயகி பல விதங்களில் முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் வேறுபட்டிருக்கிறது.
டீக் கடையில் மாஸ்டராக வேலை பார்க்கும் வேலு, தன் மனைவி கயல்விழி, மகள் பொம்மை நாயகியுடன் வறுமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார். (3/11)
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(