M.SivaRajan Profile picture
Feb 9 11 tweets 3 min read
#வெயிலுகந்த_விநாயகர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் - உப்பூர்.

ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம் தான்

"உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்".

சீதாவை மீட்க இலங்கை செல்லும் போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித் தான் சென்றார்.
தல வரலாறு :

தட்சன் தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான்.

சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான்.

இந்த யாகத்தில் கலந்து கொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது.
தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார்.

சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார்.

தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார்.

அவ்வாறே அருளினார் விநாயகர்.
அதன்படி தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது.

இதனால் இவருக்கு "வெயில் உகந்த விநாயகர்"என்ற பெயர் ஏற்பட்டது.

ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் ஒரு முக்கிய காரணம்.
ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் ஒரு முக்கிய காரணம்.

விழாக் காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு.

இது கோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரை இல்லாமல் வெயில் படும்படி அமைத்திருப்பது சிறப்பு.
கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.

எந்த ஒரு பெரிய காரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம் தான்.

ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.
கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்ட போதிலும் இத்திருக்கோவிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கர சேதுபதி ஆவார்.

1905ம் ஆண்டு இக்கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.
மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோவில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில்,

அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில் படும்படி கோவில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள விநாயகர் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.

உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
இக்கோவிலின் தென்புறம் உள்ள திருக்குளம், பாவங்கள் போக்கும் ராமேஸ்வரத்தின் தீர்த்தங்களில் ஒன்றாகும்.

நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரிய பகவான் வணங்கும் விநாயகரை நாமும் வழிபட்டு இந்தக் குளத்தில் நீராடும் போது நம் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அமைவிடம்

ராமநாதபும்,லதேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில், இந்த விநாயகர் கோவில் உள்ளது.

#வெயிலுகந்த_விநாயகர்

#ராமர்_வழிபட்ட_விநாயகர்

#காணாபத்யம்

#கணபதிவழிபாடு

#ஓம்கம்கணபதயேநமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 9
#விநாயகர்_சபை

விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம்.

அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார்.
அவரது ஆலோசனையின்படி திருப்பாசூர் வாசீஸ்வரர் தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு.
இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர்.

இதனை, "#விநாயகர்_சபை' என்கின்றனர்.
Read 5 tweets
Feb 6
#வெற்றிலை_மாலை

வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை!

ஜெயம் தருவார் ஜெய் அனுமன்!

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால்,

எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தந்தருள்வார் அனுமன்.
ஸ்ரீ ராமபிரானின் பக்தர்களில் முதன்மையான, முழுமையான பக்தர் என்று ஸ்ரீஆஞ்சநேயரைச் சொல்கிறது புராணம்.

ஆஞ்சநேயரும் இறைசக்தி ரூபம் தான்.

ஆனாலும் கைகூப்பிய நிலையில் ராம பக்த அனுமனாகவே காட்சி தருகிறார்.

அனுமன் ஜெய் அனுமன் என்று கொண்டாடப்படுகிறார்.
ஜெயிக்க வைக்கும் அனுமன் என்று போற்றப்படுகிறார்.

அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு சார்த்தி வேண்டிக்கொண்டாலோ வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்திக் கொண்டாலோ எடுத்த காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
Read 10 tweets
Feb 6
#காவடி

*தைப்பூசம் தினத்தன்று காவடி எடுப்பது ஏன்❓*

தைப்பூசம் தினத்தன்று முருகன் தலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் காவடிகளாக இருக்கும்.

அதற்கு காரணம், தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பது தான்.
இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து,

தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும் படி கூறினார்.
அகத்திரியின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.

பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான்.

பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.
Read 7 tweets
Feb 5
#மயில்_வாகனம்

மயில் வாகனத்தைப் பற்றிய ஒரு அபூர்வ விஷயத்தினை பார்ப்போம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் ஒன்று உண்டு.

திருவாதிரை சிவபெருமானுக்கும்,

திருவோணம் மகாவிஷ்ணுவிற்கும் உரியவை.

முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம்.
முருக அஷ்டோத்திரத்தில், "ஓம் விசாகாய நமஹ' என்று அவரது நட்சத்திரம் குறித்து வருகிறது.

ஆதிரையான் என்று சிவபெருமானையும்,

ஓணத்தான் என்று மகாவிஷ்ணுவையும் குறிப்பிடுவதைப் போல,

மயிலேறும் விசாகன் என்று முருகனை நட்சத்திரத்தின்
பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
"விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.
"மயிலேறிய வடிவேலன்' என்கிறார் அருணகிரிநாதர்.

அருணகிரி வாக்குப்படி, முருகப்பெருமான் மயில் மீது ஏறி சஞ்சரிப்பவர் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், மயில் வாகனத்திலேயே, பல மயில் வகை உண்டு.
Read 11 tweets
Feb 5
#சேந்தனார்

இன்று தைமாத பூச நட்சத்திரம் சேந்தனார் குருபூஜை :

ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய  அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.

உடன் பட்டினத்தடிகள்  “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
Read 17 tweets
Feb 4
#கோவிந்த_நாமம்

பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி
பெருமாளைத் தரிசிப்பார்.

ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை.

இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து

தம்பி ! உன் குடும்பம் நலமா?

ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா என்று கேட்டார்.

அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை என்றார்.

உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன்,
எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே!
அதைச் சொல்லேன்! என்றார்.

வந்தவர், கோவிந்தா! கோவிந்தா என்றார்.

பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன் இது தானா!

நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன்.

அதை விடவா இது பெரிது என்றார்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(