காலன் வழிபட்ட சிவலிங்கமும், ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு புகழினை உடையது #கோவில்பாளையம்_காலகாலேஸ்வரர் ஆலயம். கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் எழிலுறத் திகழ்கிறார் ஈசன். இத்தலத்தில் மூலவர் மணலும் நுரையும் கலந்த லிங்க
வடிவில் அருளுகிறார் என்கின்றனர் பக்தர்கள். பொதுவாக மணலால் ஆன லிங்கம் காலத்தில் நிலைத்து நிற்பது என்பது அபூர்வம். ஆனால் இத்தல இறைவன் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பேறு பெற்றவர் என்பது நம்பிக்கை. மிருகண்டு முனிவருக்கும் மருத்துவவதிக்கும் திருமணம் ஆகி நீண்ட நாள்கள் ஆகியும்
குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. எனவே, அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சிவபெருமானை மனதார வழிபட, அத்தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு #மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு ஒழுகினான்.
மார்கண்டேயனின் 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. ஆயுள் முடியும் நாளில் யமதர்மனின் தூதுவர்கள் அவனது உயிரை எடுக்க வந்தனர். மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரரை இறுகப் பற்றிக் கொண்டு சரணாகதி அடைந்தான். இதனால் கோபமடைந்த யமன்
பாசக்கயிறை சுழற்றி வீச, அக்கயிறு ஈஸ்வரன் மீது விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், யமனை சூலத்தால் குத்தி இடது காலால் எட்டி உதைத்து சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். யமனின் யமலோகப் பதவி பறிக்கப்பட்டு மானிடனாக பூலோகத்தில் உலாவினார். மீண்டும் யமபதவி வேண்டி கௌசிகாபுரி தலம்
சென்று (தற்போதய கோவில் பாளையம்) அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவபூஜை செய்ய லிங்கம், விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதும் கிடைக்கவில்லை. எனவே, செய்வதறியாது அங்கு கிடந்த குச்சியை எடுத்து மண் குவிந்த இடத்தில் குத்தினான். அதன் உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது.
மணலுடன் நுரையைச் சேர்த்து அழகிய சிவலிங்கம் வடித்துப் பூஜை செய்தான். யமனுக்கு அருகில் கௌசிக முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். முனிவரிடம் பாவ விமோசனம் கேட்டு யமன் இறைஞ்சினான். பரம்பொருள் யமனின் முன்பு தோன்றி, சாப விமோசனம் அளித்து மீண்டும் யமபதவி வழங்கி அனுக்கிரக மூர்த்தியாக
அருளினார். இதனால் யமதர்மன் மகிழ்ந்து யமலோகம் நோக்கிச் சென்றான். யமன் வழிபாடு செய்த மணலும் நுரையும் சேர்ந்த சிவலிங்கமே #காலகாலேஸ்வரர் என்கிறது தலவரலாறு. கரிகாலச்சோழன் தன்னை வருத்திய பிணி நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்கள் எழுப்பினான் என்பது வரலாறு. அவ்வகையில்,
காலகாலேஸ்வரருக்கு சிவாலயம் எழுப்பி வழிபட்டான். உள் நுழைந்தவுடன், கன்னி மூல கணபதி எழுந்தருளியுள்ளார். கணபதியை வணங்கி விட்டு வலதுபுறம் திருப்பினால் தட்சிணாமூர்த்தி அருளுகிறார். இடது புறம் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் நஞ்சுண்டேசுவரர் அருள் பாலிக்கிறார்.
மூலவருக்கு இடப் புறத்தில்
கருணாகரவல்லி அம்மன் அழகுற காட்சி அளிக்கிறார். சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே கால சுப்பிரமணியர் வீற்றிருப்பதால் இத்தலம் சோமஸ்கந்த அமைப்பு கொண்ட கோவிலாக விளங்குகிறது. தல விருட்சமாக வில்வ மரமும் தலதீர்த்தமாக காலபொய்கை நதியும் உள்ளது. யமனுக்கு அருள் செய்த தலம் என்பதால் இத்தலத்தில்
ஆயுள் ஹோமம், உக்கிரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் பூர்ணாபிஷேகம் போன்ற ஹோமங்கள் செய்வது சிறப்பு. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெறுகிறது. நெய், பஞ்சாம்ருதம், தயிர் மட்டும் சுவாமி
அபிஷேகத்தில் சேர்ப்பதில்லை. இந்த அபிஷேகத் தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இப்பிரசாதத்தை உண்போருக்கு உடலை வருத்திய பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. சூரசம்ஹாரம் இத்தலத்தில் விமர்சையாக நடைபெறுகிறது. மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற நந்திக்கு பிரதோஷ பூஜை
சிறப்பாக நடைபெறும். அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் காலகாலேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் ஆயுளும் ஆரோக்கியமும் பெறலாம்.
இடம்: சர்கார் சாமகுளம், கோவில்பாளையம் #அன்பேசிவம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்