அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏
#வெள்ளியங்கிரி மலை ஏற நடை நாளை முதல்
17 :02:2023அன்று திறக்கப்பட்டது.may 30 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டி செல்லும் பேருந்தில் செல்லலாம் . அல்லது ஈஷா செல்லும் பேருந்தில் செல்லலாம். Image
ஈஷா செல்லும் பேருந்தில் சென்றால் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கவேண்டும் அல்லது அங்கு இருக்கும் ஆட்டோவில் செல்லலாம்.
மலை ஏறுகிறவர்கள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் உணவு (புளி சாதம் சப்பாத்தி அல்லது விரைவில் கெடாத உணவு ஒரு நேரத்திற்கு),
கடலை மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.இரவில் செல்ல பேட்டரி அவசியம்.
குளிர் இருக்கும் எனவே குளிர் தாங்கும் சொட்டர் எடுத்துக் கொண்டு செல்லவும் குளிர் தாங்க இயலாதவர்கள்.

#குறிப்பு:சிவன் சொத்து குல நாசம் எனவே வெள்ளியங்கிரி ஆண்டவரின் சொத்தை காப்பது உங்கள் கடமை மலையின் தூய்மையை உங்கள் Image
கையில் தான் அவரவர் கொண்டு செல்லும் பொருட்களின்
குப்பையை அவரவர் திருப்பி கீழே எடுத்து கொண்டு வந்து விடுங்கள்.அங்குள்ள கடைகளில் வாங்கி நீங்கள் உபயோகிக்கும் பொருளின் குப்பையையும் கீழே எடுத்து கொண்டு வந்து விடுங்கள்

தனிமனித சுகாதாரத்தினால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும் 🙏 Image
ஆறாவது மலை திருநீறு மலையில் திருநீறு எடுக்கிறேன் என்ற பெயரில் அங்கே உள்ள மண்ணை எடுக்காதீர்கள்.அதனால் வழியில் சிறுகுழிகள் ஏற்படும் மழை பெய்யும் போது அரிப்பு ஏற்பட்டு அந்த இடம் பெரிய பள்ளமாக மாற்றம் பெரும் பிறகு பாதை அழிந்து விடும்.இதை புரிந்து கொள்வீர்கள். Image
உண்மையில் அது #திருநீறு இல்லை கால்சியம் சத்து அதிகம் கொண்ட மண் அவ்வாளவே.
அவசியம் மூங்கில் தடி வாங்கி செல்லுங்கள் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மூங்கில் தடி அடிவாரத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடையில் கிடைக்கும் அதன் விலை 30 ரூபாய் தான்.
பெண்கள் மலை ஏற அனுமதி இல்லை.10 வயது சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட அம்மாக்கள் மட்டுமே ஏற அனுமதி கிடைக்கும்
(பெண்கள் மலையேற அனுமதிக்காத காரணம் பெண் அடிமை தனம் இல்லை இந்த மலை அதிக உயரம் தூரம் மற்றும் மலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதே காரணம்)
வெள்ளியங்கிரி வரும் வெளிமாவட்ட நண்பர்கள் காண வேண்டிய திருக்கோயில்கள் வெள்ளியங்கிரி மலை ஏற்றம் காணும் முன்பே தரிசனம் செய்து விடவும்

கோயம்புத்தூர் அடையாளம் #கோனியம்மன் கோவில் டவுன்ஹால் மணிக்கூண்டு

#பேரூர்பட்டீஸ்வரர் கோயில் பேரூர்
மருதமலை முருகன் கோயில் பாம்பாட்டி சித்தர் குகை Image
மலைக்கு மேல் போதைப்பொருள் மற்றும் பீடி குட்கா போன்ற பொருட்கள் பாலித்தீன் பைகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை இதற்காக சோதனை நடத்திய பிறகு தான் நீங்கள் மலை ஏற அனுமதிக்கபடுவீர்கள்

மலைக்கு கொண்டு செல்லும் குப்பைகளை அவரவர் கீழே கொண்டுவந்து விட்டால் போதும் மலையின் தூய்மையை காக்க வேண்டும்
இந்த ஆண்டு நீங்கள் கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்களில் வனத்துறை சார்பாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது அதற்கு ரூபாய் 20 ரூபாய் வசூலிக்கப்படும் மலையிலிருந்து இறங்கி வந்தவுடன் அந்த பாட்டிலை கொடுத்து அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று வனத்துறை அறிவித்திருக்கிறது.
வெள்ளியங்கிரி சென்று
எம் தந்தை சிவபெருமானின் ஆசியும் பெற்று நல்ல முறையில் திரும்ப வருங்கால்
அனைவரும்

ஓம் நம சிவாய வாழ்க 🙏
சர்வமே சிவம் 🔥 சிவமே தவம்‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🇮🇳

🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Anbilshanmugam

Jul 4, 2023
எம் தந்தை சிவபெருமானின் ஆசியுடன் செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் 🙏🏻

திருவாசகம் எட்டாம் திருமுறை 29. அருட்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை

துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு

பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : துடிகொள் - உடுக்கை வடிவம் கொண்ட, நேர் இடையாள் - நுண்ணிய இடையினையுடையாளாகிய, சுரிகுழல் மடந்தை - சுருண்ட கூந்தலையுடைய உமையம்மையின், துணை -
இரண்டு, முலைக் கண்கள் தோய் - தனங்களின் கண்கள் அழுந்திய, சுவடு - தழும்புகள், பொடி கொள் - நீறு பூத்த, வான்தழல் - பெரிய நெருப்பின்மேல் உள்ள, இரண்டு புள்ளிபோல் - இரண்டு புள்ளிகளைப் போல், பொங்கு ஒளி தங்கும் - மிக்க ஒளி பொருந்திய, மார்பினனே - திரு மார்பையுடையவனே, செடிகொள் - செடிகள்
Read 6 tweets
Jun 30, 2023
எம் தந்தை சிவபெருமானின் ஆசியுடன் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கங்கள் 🙏🏻

திருவாசகம் எட்டாம் திருமுறை 29. அருட்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

நிருத்தனே நிமலா நீற்றனே நெந்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத்
திருப்பெருந் துறையிற்
செழுமலர் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : நிருத்தனே - கூத்தப்பெருமானே, நிமலா - மலமில்லாதவனே, நீற்றனே - திருவெண்ணீற்றையுடையானே, நெற்றிக் கண்ணனே - நெற்றிக்கண்ணையுடையானே, விண்ணுளோர் பிரானே - தேவர்
பிரானே, ஒருத்தனே - ஒப்பற்றவனே, ஓலமிட்டு அலறி - முறையிட்டு அரற்றி, உலகெலாம் தேடியும் - உலக முழுதும் தேடியும், உன்னைக் காணேன் - உன்னை நான் பார்க்கவில்லை, திருத்தம் ஆம் பொய்கை - தீர்த்தமாகிய பொய்கையையுடைய, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறை யின்கண், செழுமலர் - வளப்பமான
Read 6 tweets
Feb 17, 2023
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

எம் தந்தை சிவபெருமானின் இனிய ஆசியுடன் சிவ காலை வணக்கங்கள் 🙏

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
இப்பாடலில் ஐந்தொழிலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது

விடையேறி-படைத்தல்: விடை-அறக்கடவுள் சங்காரத்தில் அறக்கடவுள் இறைவனோடு இருந்து மீண்டும் உலகப்படைப்பின் போது உளதாகக் குறிப்பு

மதிசூடி-காத்தல்: மதி-சந்திரன்: தக்கனது சாபத்தால் அழியாமல் காத்த குறிப்பு

பொடிபூசி-ஒடுக்குதல்:-மாசங்காரம்
கள்வன்-மறைத்தல்,குறிப்பு-திரோபவம்

அருள்செய்த-அருளல்.

அருள்செய்த-அருளல்.

இந்தப் பாடலில் மொத்தம் 36 சொற்கள் உள்ளன.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் - 10
காடு உடைய சுடலைப் பொடிபூசிஎன் உள்ளங் கவர் கள்வன் - 9
ஏடு உடைய மலரான் முனை நாட் பணிந் தேத்தஅருள் செய்த - 9
Read 5 tweets
Feb 16, 2023
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

எம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

திருமூலா் அருளிய #திருமந்திரம்
#பத்தாம்திருமுறை

திருச்சிற்றம்பலம் 🙏

உடலில் புகுந்து நின்றனன் இறைவன்

குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்

நிறைந்துஅடை செம்பொனின் நோ்ஔி ஒக்கும்
மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லாா்க்குப்

புறம் சடம் செய்யான் புகுந்துநின்றானே.

சிவபெருமான் திருவடியில் மிக்க விருப்புடையவராய் அவன் திருவடி உணா்வால் தாழ்ந்தடைந்து அத்திருவடியினை அடைய விரும்புவாராக. அப்பெருமான் நிறைந்த செம்பொன்னின் ஔியைப் போன்றவன். வஞ்சனையால் மறைந்து
குறும்பு செய்யாது வாழ்த்தும் மெய் அன்பா்களின் உடலைப் புறக்கணிக்காது அதில் அப்பெருமான் புகுந்து நின்றனன்.

விளக்கம்:

குறைந்து அடைந்து- மிகத் தாழ்ந்து வணங்கி.
புறம் சடம் செய்யான் - உடலைப் புறக்கணியான். மறைந்தடஞ் செய்யாது- மறைந்து அடம் செய்யாது;
Read 4 tweets
Feb 15, 2023
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

எம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

அப்பனுமாய் அம்மையுமாய் இடரினும் தளரினும் நீயே கதி என் அப்பான் ஈசனே🌿
சர்வமே சிவம் 🔥
ஈசனே தவம் 🙏
ஓம் நம சிவாய 🌿🌿

#வெள்ளியங்கிரிஆண்டவர் Image
ஓம் நம சிவாய 🌿

திருச்சிற்றம்பலம்

"இணைஆர் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணைஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்துஒழித்தேன்
அணைஆர் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ!" Image
விளக்கம்:
சிவபெருமான் திருப்பாதங்கள் என் தலை மீது வைத்து அருள் புரிந்த நிலையில், எனக்குத் துணை போலும் சூழ்ந்திருந்த சுற்றங்கள் யாவற்றையும் துறந்து நீக்கினேன். மடைகளால் தடுக்கப்பட்டு நீர் வளம் விளங்கும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும்
Read 4 tweets
Aug 9, 2021
#மாயை
இதற்கான பல விளக்கங்களில் ஒரு விளக்கம் யாதெனில்...

நாம், காண்பவை அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க விளையும் போது அது விரிந்து கொண்டே செல்கிறது. அதற்கு உதாரணம் வானம். அதைப் பார்க்கும் போது அதன் எல்லைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருப்பதுதான்...1

நாம் தனியாக ஒரு பொருளை
மாத்திரம் எடுத்து அதை நுணுக்கமாக அறிய விரும்பி பொடித்துக் கொண்டே போனால், அணுக்களாகி, குவார்க்குகளாகி இன்னும் என்னவெல்லாமோ ஆகி, ஆகி, ஆகிக்கொண்டே இருக்கும்.2
ஆக,நாம் இந்த இரு extremeகளையுமே தொடர்ந்து விரட்டிக் கொண்டே போகும்போது..

"இந்தா புடிச்சிக்கோ"வென அவைகளும் விரிந்து கொண்டும்,
நுணுகிக் கொண்டும் செல்லும்.

இதுதான் "அடியையும்-முடியையும்" காணச்சென்று தோற்பது என்பது!

அதனால்தான் மாயைக்குப் பின்னால் ஓடப்பிடாது என்பது!

இருப்பது இறைவனாகிய ஆத்மன் ஒருவனே!

நம்மால் ஏதாகிலும் அடைய முடியும் என்ற ஒன்றிருந்தால்,

அது இந்த இறைவனாகிய ஆன்மா மாத்திரம்தான்!
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(