இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.
கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
ஆட்சியை நடத்த ;

சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?

மக்கள்தான்.

இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.

இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.
அவுரங்கசீபிற்குப் பின் எவனுக்கும், எவன் மீதும் அக்கறை இல்லை.

பணத்தை வட்டிக்கும், படைகளை வாடகைக்கும் விட்டுப் பிழைக்க வந்த வெள்ளைக்காரர்களை, நீங்க இனி ஆண்டாத்தான் என்ன என்று கோரியவர்களும் நாம்தான் !

அவன் 150 வருடங்கள் ஆண்டான். தீமைகளை விட நன்மைகள்தான் அதிகம் விளைந்தன.
பார்ப்பனியம் அழிந்துவிடுமோ என அஞ்சியக் கூட்டமொன்று கைகோர்த்து, முதல் இந்திய விடுதலைப் போர் என செம மாத்து வாங்கியது !

கல்வியும், வசதியும், அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தச் செய்தது. அதனால் விடுதலை வாய்த்தது !

ஊழல், சர்வாதிகாரம், அத்துமீறல், அராஜகம் என்றெல்லாம் சிற்சில
பிழைகள் இருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஏழை நாடு படிப்படியாக மெல்ல எழுந்தது.பொறுக்குமா பார்ப்பனீயத்திற்கு ?

மதக்கலவரங்கள், பிரித்தாளும் சூழ்ச்சி, மொழித்திணிப்பு, போலி தேசபக்தி என்று கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக செதுக்கி, ஓங்கி வளர்ந்த சிலையை சிதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மக்கள் வழக்கம் போல இந்தியாவுக்கு உதவும் நாடுகளிடம் கோரிக்கைகளை வைக்கவே ;

ஹிண்டன்பர்க், பிபிசி போன்றவை நமக்கு உதவ முன்வந்தன.

குஜராத்தின் அட்டூழியக் கலவரங்களைப் பற்றி ஏகப்பட்ட நூல்கள், கட்டுரைகள், குறும்படங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வந்துமே கூட படுகொலை செய்தவன்களை பெரிய
பெரிய பதவியில் வைத்து அலங்கரித்தார்கள். ஆனால், அவைகளை மட்டுமே தொகுத்து வந்த பிபிசி ஆவணப்படமோ, உலகளவில் பரவி, இவன்களையாடா திரும்ப திரும்ப உட்கார வைக்கிறீங்க என்கிற கேள்வியை நம்மை நோக்கி எழுப்ப வைத்துள்ளது !

மோடி, அமித்ஷா போன்றோர் எப்படி பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட போலி
பிம்பங்களோ, அவர்களுக்கு நிகரான சக குஜராத்தி பிம்பம்தான் அதானி.

மூன்றே வருடங்களில் பல தகிடுதத்தங்களைச் செய்து போலியாக இராட்சத பலூன் அளவுக்கு ஊதப்பட்ட அந்த பிம்பம், ஹிண்டன்பர்க் கட்டுரையால் தூள் தூளாக வெடித்துச் சிதறியுள்ளது !

சொறி சிரங்கைக் கண்ட குரங்கின் கைகள் சும்மா
இருக்காது என்பதைப் போல, BBC நிறுவனங்களில் 60 மணி நேர சோதனையை மேற்கொண்டது இந்திய வருமான வரித்துறை !

இந்த அதிரடி நல்லதற்குத்தான்.

அணையப் போகும் தீபம் அணையும் முன் கோடி பிரகாசத்துடன் எரிகிறது.

கரையில் மீன் கண்டபடி துள்ளுவதென்பது எதிரிக்கு பயத்தையா தரும் ?

இந்திய ஆட்சி தனக்கு
எதிரானவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ளும் என்பதை உலகம் முழுக்க காட்டியிருக்கிறது மோடியின் பீஜேபீ அரசு !

ஏமாளிகளுக்கு மதவெறி மது ஊற்றி, அவர்கள் போதையில் அளிக்கும் வாக்குகளைக் கொண்டு மீண்டும் மீண்டும் வென்றிடலாம், ஆனால், இந்திய மக்களின் குணமறியாத, வரலாறியாத மூடர்கள், தடம் தெரியாமல்
கரைந்து காணாமல் போகப்போவதென்பது உறுதி. அதன் முதற்படியாக இந்த வெற்று ரெய்டுகளைச் சொல்லலாம் !!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Feb 18
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் Image
கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது. Image
மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல்,மரண நெடி நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப் Image
Read 27 tweets
Feb 16
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
#9_தமிழ்மாணவர்மன்றம்
பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகள் புனையப்பட்டிருந்தது
கதர் சட்டை பார்த்து காங்கிரஸ் என நம்பி கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த கலைஞர் உண்மை அறிந்து தன் தலைமையில் உருவான மாணவர் சம்மேளனத்தை கலைக்க முடிவு செய்தார். Image
இனி கலைஞர் வார்த்தைகளில்..
கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார்.

என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார்.

நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகி விட்டது.
'இது நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?' என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீட்டது. 'தமிழ் வாழ்க! இந்தி வளர்க' என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!" என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர். Image
Read 12 tweets
Feb 15
#சின்னங்களின்_வரலாறு
#கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
Read 22 tweets
Feb 13
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது Image
இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். Image
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.

'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து Image
Read 11 tweets
Jan 30
#இந்தியபாசிச_வரலாறு 1

இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது

அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி
காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது

தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள்
கூடவே சில நூலிபான்களும்
சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம் வடக்கே மதன் மோகன் மாளவியா, மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது.
தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
Read 17 tweets
Jan 29
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்
பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(