#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு
செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் திரை மறைவு தகிடு தத்தங்கள் உதவின
ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து
நின்ற நடராஜன் மீது
ஜெயலலிதாவுக்கு நியாயப்படி நடராஜன் மீது மிகப்பெரிய மரியாதையும், நன்றியும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் 2003 ல் நடராஜன் நில மோசடி வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வெறுப்பு ஏற்பட எது காரணம்?
போயஸ் தோட்டத்து சுவர்கள் மட்டுமே தெரிந்த ரகசியம்.
பிற்காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராவார், தன் மனைவி நிழல் முதல்வரளவுக்கு உயர்வார்! அதன் மூலம் தன் மற்றும் தன் மனைவியின் சொந்த பந்த வகையறாக்கள் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் என நடராஜன் மிகப்பெரிய ஃபோர்விஷனுடன் திட்டமிட்டிருக்க வாய்ப்பில்லை! ஆனால் நடந்தது.
ஜெயாவால் நடராஜன் பெற்றது ஏராளம், இழந்தது தாராளம். கட்டிய மனைவியை இழந்தார். தங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டுமென்று கூட சசியும், நடராஜனும் திட்டமிட்டுக் கொள்ளவில்லை.
நடராஜனை காண சசி செல்லக்கூடாது, சசியின் பெயரில் நடராஜனை நீக்க வேண்டும் என்று கூட ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
தேர்தல் காலங்களில் நடராஜன் பெசண்ட் நகர் இல்லத்தை பெரும் படையே ‘சீட் வாங்கி தாங்க தலைவரே!’ என முற்றுகையிடும். நடராஜனுக்கென ஒரு கோட்டா ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுக்கப்படும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் அடி நாதமே நான் தான் என்று ஜெயா இருக்கையிலேயே நடராஜன் காலர் தூக்கி விட்டிருக்கிறார்
மனைவியை தாரை வார்த்து, கட்சியில் நடராஜன் ஆடிய ஆட்டங்கள் வழக்கம் போல ஜெயா காதுக்கு எட்டவே இல்லை. 1996 இல் அதிமுக மட்டுமல்ல ஜெயாவே பர்கூரில் பரிதாபமாக தோற்று சொத்து குவிப்பு வழக்கு கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாராவுக்கு ஊதுபத்தி உருட்ட சென்ற போது தான் தெரிந்தது நடராஜன் ஆட்டம்
மன்னார்குடி மாபியா கும்பல் ஆடிய ஆட்டத்தால் மனம் நொந்து நம்பிக்கை இழந்த கட்சி தொண்டர்களை மீண்டும் ஏமாற்ற ஜெயா நடராஜனை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலிகடா ஆக்கப்பட்ட நடராஜன் ஜெயாவை பழிவாங்கு திரை மறைவு வேலைகளை நடத்தவே சசியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் ஜெயா
2003 ஜுலை மாதம் திடீரென்று மதுரையைச் சேர்ந்த செரினா பானு என்கிற ஜனனி என்கிற பெண் கைது செய்யப்பட்டார்.   அவரோடு, அவர் தாயார் ரமீஜா மற்றும் அவர்கள் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் காரிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சென்னை நீலாங்கரையில் .
உள்ள அவர்கள் வீட்டிலிருந்து 1.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.   விமானப்பணிப்பெண் பயிற்சி பெற்றிருந்த செரினா எதற்காக கைது செய்யப்பட்டார், ஏன் கைது செய்யப்பட்டார் என்பன மர்மமாகவே இருந்தன.
ஆனால் செரினாவுக்கு ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா ?
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்து, 2022 ல் காங்கிரசை விட்டு விலகிய கபில் சிபல்.  உடனே ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமுமே பரபரப்பாகி இந்த வழக்கை உற்று கவனிக்கத் தொடங்கின. ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகள் இந்த வழக்கின் பின் உள்ள மர்மங்களை எழுதத் தொடங்கின.
அ.தி.மு.க-வின் அதிகார மட்டத்தில் இருந்த 'நர்த்தன’ நாயகனுக்குப் பிடித்த நாயகியாய் இருந்த செரீனா, அந்த ஹோல்டை வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தவும் தலைப்பட்டார். நாயகனோடு முப்பைபக்கம் சென்றிருந்தபோது, 'ஐயம் ஃப்ரம் போயஸ் கார்டன்’ என்று வடநாட்டு எம்.பி-க்களிடம் வாய் துடுக்காகப்
பேசுமளவுக்கு வளர்ந்தது இவரது அதிகார வரம்பு. இதை எல்லாம் தெரிந்துகொண்ட சசி வட்டாரம், செரீனாவுக்கு செக் வைக்க நினைத்தது. ஆட்சி அவர்கள் பக்கம் இருந்ததால் பாய்ந்தது #கஞ்சாவழக்கு. வழக்குப் போட்டாலும் ஆளும் கட்சியின் ஆசீர்வாதத்துக்கு உரிய மனுஷியாகவே பாதுகாக்கப்பட்டார் செரீனா
நீதிமன்றத்துக்கு வந்தபோதெல்லாம் ராணுவ பாதுகாப்பு...  ஏடாகூடமாக எங்காவது எதையாவது பேசிவிடக்கூடாது என்பதற்காக.
கஞ்சா வழக்குக்கில் சிறை சென்ற பிறகு, நடராஜனுக்கும் செரீனவுக்கும் இடையில் இருந்த உறவுப் பாலம் உடைந்துவிட்டது
16 சாட்சிகள், 42 சான்று ஆவணங்கள், 12 சான்று பொருட்கள்
இருந்தும் 'குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி செரீனாவை 2005-ல் விடுதலை ஆனார். ஜெயா சசி நடராஜன் உள் குத்துகளால் செரீனா மீது போடப்பட்ட #கஞ்சாவழக்கு அடுத்து பலி வாங்கியது தமிழ்நாட்டை திகைக்க வைத்த 100 கோடிக்கு திருமணம் செய்த ஜெயாவின் வளர்ப்பு மகன் #சுதாகரன் மேல் தான்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Feb 20
#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது Image
அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம் Image
என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர். Image
Read 26 tweets
Feb 18
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது.
மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல்,மரண நெடி நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப்
Read 27 tweets
Feb 17
இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.
கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
ஆட்சியை நடத்த ;

சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?

மக்கள்தான்.

இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.

இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.
Read 12 tweets
Feb 16
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
#9_தமிழ்மாணவர்மன்றம்
பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகள் புனையப்பட்டிருந்தது
கதர் சட்டை பார்த்து காங்கிரஸ் என நம்பி கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த கலைஞர் உண்மை அறிந்து தன் தலைமையில் உருவான மாணவர் சம்மேளனத்தை கலைக்க முடிவு செய்தார். Image
இனி கலைஞர் வார்த்தைகளில்..
கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார்.

என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார்.

நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகி விட்டது.
'இது நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?' என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீட்டது. 'தமிழ் வாழ்க! இந்தி வளர்க' என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!" என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர். Image
Read 12 tweets
Feb 15
#சின்னங்களின்_வரலாறு
#கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
Read 22 tweets
Feb 13
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது Image
இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். Image
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.

'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(