ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைந்த புனிதத் தலம், பூரி ஜெகந்நாதர் ஆலயம். இது மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் மிக முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது.
1
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையில், சென்னை புதிய மகாபலிபுரம் (கிழக்கு கடற்கரை சாலை), கானத்தூர்- ரெட்டி குப்பம் சாலையில் ஜெகந்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
2
2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம், பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பிரதி என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஆலயம் ஒடிசா கட்டிட பாணியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
3
மேலும் பூரியில் உள்ளது போலவே, சென்னை ஜெகந்நாதர் ஆலயத்திலும் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும், பூரியில் உள்ள தோற்றத்திலேயே அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோவிலின் மேற்பகுதியை அடைய 22 பளிங்கு கல்லால் ஆன படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
4
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மரத்தால் செய்யப்பட்டவை. அதுபோலவே சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் மூன்றும், வேப்ப மரத்தில் செய்யப்பட்டிருக்கின்றன.
5
காஞ்சிபுரத்தில் இருந்து கருப்பு கிரானைட், ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்கள் போன்றவை கொண்டுவரப்பட்டு, ஆலயத்தை முழுமைப் படுத்தியிருக்கிறார்கள்.
6
கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 1 ஏக்கர் பரப்பளவில் இயற்கையை ரசிக்கும் வகையில் தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மலர்ச் செடிகள் அனைத்தும் ஒடிசா பாணியில் நடத்தப்படும் பூஜைக்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் மலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7
இந்த சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் பல்வேறு சன்னிதிகளும் உள்ளன. சிவபெருமான், விநாயகர், தேவி கஜலட்மி, தேவி பிமலா எனப்படும் துர்க்கை அம்மன், நவக்கிரகம் ஆகியோருக்கு சன்னிதிகள் காணப்படுகின்றன. ஆலயத்தின் ஒரு ஓரத்தில் கற்பகத் தருவும் உள்ளது.
7
ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக, பிரதான நுழைவு வாசலில், கல்லால் ஆன கொடிமரம் ஒன்று காணப்படுகிறது. இது மிகவும் வித்தியாசமாக, பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கிறது.
8
இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவர்களிலும், ஆலயத்தின் பிரகாரங்களிலும், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
9
சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தின் முக்கிய திருவிழாவாக, ரத யாத்திரை திகழ்கிறது. இது பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை நடைபெறும் அதே நாளில் நடத்தப்படுவது விசேஷம்.
10
இந்த ரத யாத்திரையின் போது, முதன்மை தெய்வங்களான ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலதேவர் ஆகியோர், கானத்தூர் கிராமத்தைச் சுற்றிலும் வீதி உலா வருவார்கள். இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
11
இந்த ஆலயத்தில் உள்ள ரதமானது, துருப் பிடிக்காத எஃகு மற்றும் மரம், துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. துருப் பிடிக்காத எஃகு ரதத்தைக் கொண்ட ஒரே ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது.🙏
சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*
தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.
1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.
2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.
இறைவன்: நெல் மணிகளை வேலி அமைத்து காப்பாற்றியதால் சிவபெருமான், ‘நெல்லையப்பர்’ என அழைக்கப்படுகிறார்.
இறைவி: காந்திமதி அம்மன்.
காலம்: ஆலயத்தின் ஆரம்ப காலக்கட்டுமானங்கள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனால் (பொ.ஆ.7-ம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘சோழன் தலைகொண்ட வீர பாண்டியன்’ (பொ.ஆ.946-966) திருப்பணி பற்றிய கல்வெட்டு உள்ளது.
பின்னர் சோழர்கள் (10-12 ஆம் நூற்றாண்டு), ஹொய்சாளர்கள் (13 ஆம் நூற்றாண்டு), பிற்காலப் பாண்டியர்கள் (13-14 ஆம் நூற்றாண்டு) மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) பல பங்களிப்புகளைச் செய்தனர்.