#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது
அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்
என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.
அப்போது ஜெ. முதல்வர் செங்கோட்டையன் வனத்துறை அமைச்சர்
அதிமுகவினர் துணையோடு சந்தன மரம் கடத்தப்படுவது வெளியே கசிந்தது கொதித்த வனத்துறையினர், வாச்சாத்தி மக்கள் தான் சந்தன மரம் உள்ளிட்ட வனவளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று விவகாரத்தை திசை திருப்ப, அன்று ரெய்டு வந்திருந்தார்கள்.
முந்திய நாள், மரம் வெட்ட சொன்ன அதிகாரிகளுக்கு மறுப்பு தெரிவித்தவர்களுக்கும் வனத்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
பதிலடி கொடுக்க 300 போலீஸ் கொண்ட பட்டாலியனுடன் வந்திருந்தனர். அடுத்து நிகழ்ந்தது 150 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கூட நடக்காதது. தெலுங்கு சினிமாவில் கூட காணாதது
#நரவேட்டை_காவல்துறை
சக அதிகாரிகள் மீது கை வைத்தவர்களுக்கு தாங்கள் யாரென நிரூபிக்க துடித்தனர். வேட்டை நடத்துவதற்கான அரசு ஆணையை, போர்வாளைப் போல பிடித்திருந்தனர்.
ஊரில் உள்ள அத்தனை பேரும் தரதரவென இழுத்து வரப்பட்டு, ஊரின் மய்யத்தில் அமைந்திருக்கும் ஆலமரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.
பெண்கள், குழந்தைகள், வயதானோர் எனப் பாகுபாடின்றி அடித்து துவைத்து உட்கார வைக்கப்பட்டனர். வெறியாட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஆலமரத்தடியில் நின்றிருந்த பெண்களில் 18 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, வாகனத்தில் ஏற்றி ஏரிக்கரையை நோக்கிக் கொண்டு சென்றனர் அதிகாரிகள். பதுக்கி வைத்திருக்கும்
சந்தனக் கட்டைகளை எடுப்பதற்கு அழைத்துச் செல்வதாக நாடகம் அரங்கேறியது.
பெண் காவலர்கள் இருந்தும் அவர்கள் இப்பெண்களோடு செல்லவில்லை. ஏரிக்கரைக்கு சென்றதும், ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக இழுத்துச் சென்று மூவர் நால்வராகக் கூட்டு வல்லுறவு கொண்டனர். இதில் 13 வயதேயான சிறுமியும் இருந்தார்.
பருவமெய்தாத நிலையில் ரத்தம் கொட்ட அவர் அனுபவித்த கொடுமை, வக்கிரத்தின் உச்சம்.18 பெண்களையும் வன்கொடுமை செய்து, அரூர் வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். ஆலமரத்தடியில் குவிந்திருந்த உறவுகளைப் பார்த்து பெண்களும், உடைகள் கிழிக்கப்பட்டு நின்ற பெண்களைப் பார்த்து உறவுகளும் கதறி அழுதனர்.
இரவு முழுவதும் வீடுகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. கிணற்று நீர், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையால் பாழ்படுத்தப்பட்டது. வாழ்நாள் சேமிப்பாக இருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டன. கையில் சிக்கிய அத்தனை பேரையும் அடித்து நொறுக்கினர். ஊருக்குள் இருந்தவர்கள்
சிறைப்படுத்தப்பட்ட நிலையில், வெளியில் சென்றவர்கள் தகவலறிந்து மலைகளுக்குள்ளும் வேறு ஊர்களுக்கும் ஓடி ஒளிந்தனர். இதற்கிடையில், அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை விடிய விடிய அடித்துத் துவைத்தனர் அதிகாரிகள். தலைவரான ஊர் கவுண்டரை அழைத்து வந்து, அவரது ஆடைகளை பெண்களையும் பெண்களின் ஆடைகளை
அந்தப் பெரியவரையும் அவிழ்க்கச் சொல்லி அடித்தனர். ஊர் கவுண்டரை துடைப்பத்தால் அடிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர் பெண்கள்.
மறுநாளும் அரூர் வனத்துறை அலுவலகத்திலேயே அடைத்து வைக்கப்பட்டனர். வாச்சாத்தியில் இருந்து திருடிய உணவுப் பொருட்களையும், ஆடு கோழிகளை சமைத்து சாப்பிட்டனர் அதிகாரிகள்.
வாச்சாத்தி மக்கள் சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கவே, நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது என நியாயம் கற்பிக்க, அடுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகளின் முன்பு 18 பெண்களை நிறுத்தி படமெடுத்தனர். மாலை 5 மணியளவில் மாஜிஸ்திரேட் முன்நிறுத்தி பின்னர், சேலம் கிளைச் சிறையில் அடைத்தனர்
சூலை 20 தொடங்கி மூன்று நாட்கள் வாச்சாத்தியை மொத்தமாக சிதைத்து வெளியேறியது, அரச பயங்கரவாத கும்பல். இப்படியொரு கொடுமை நடந்ததற்கான சுவடு கூட வெளியுலகத்திற்கு தெரியவில்லை. வாச்சாத்தி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி அழக்கூட ஆளின்றி புழுங்கிக் கொண்டிருந்த நிலையில்தான்,
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சித்தேரி மலை மாநாடு கூடியது. சூலை 7 அன்று கூடிய மாநாட்டில் பங்கேற்ற மலைவாழ் மக்கள் சிலர், அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கியது.
ஊரே அழிக்கப்பட்டு,
வாச்சாத்தி ஒரு மயான பூமியாகவே மாறிப் போயிருந்த நிலையில், போரட்டத்தை எங்கு, எப்படி தொடங்குவதெனத் தெரியாமல் திணறியது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். மலைகளுக்கும் பிற ஊர்களுக்கும் ஓடிப் போயிருந்தவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடிப்பதற்குள் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.
ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனு அனுப்பப்பட்டது. பத்திரிகை அலுவலகங்களுக்கும் மனுவின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டது. இது உண்மையாக இருக்கும் என நம்ப, எந்த செய்தி நிறுவனமும் தயாராக இல்லை. அதே மனுவை சில நாட்கள் கழித்து மார்க்சிஸ்ட் கட்சியின்
அப்போதைய தலைவரான ஏ. நல்லசிவன் மூலம் முதலமைச்சருக்கு அனுப்ப, அதன் பின்னரே ஊடகங்கள் வாச்சாத்தி என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்கின.
இப்படியொரு கொடுமை நடந்ததை யாராலும் ஏற்க முடியவில்லை. அரசும் அதிகாரிகளும் உறுதியாக மறுத்துவந்த நிலையில், ஆதாரங்களைத் திரட்டுவதே பெரும் சவாலாக அமைந்தது.
வன்கொடுமை செய்யப்பட்ட பதினெட்டு பெண்கள் உட்பட 90 பேர் – 28 குழந்தைகள் – 15 ஆண்கள் என சிறையில் அடைக்கப்பட்ட 133 பேரையும் பிணையில் வெளியில் கொண்டு வருவது எளிதானதாக இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிபதி பத்மினி ஜேசுதுரை
வழக்கைத் தள்ளுபடி செய்ய சொன்னக் காரணம், வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது.
நீதிபதிகளின் சமூகப் பார்வையையும் நீதித்துறையின் நம்பகத் தன்மையையும் புரிய வைக்கப் போதுமானதாக அமைந்தன : “பொறுப்புள்ள அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.''
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வாச்சாத்தி மக்களின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 1995 ஆம் ஆண்டு வாச்சாத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை
தாக்கல் செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன்பின், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. முடிவில், 2011 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் 62 லட்சம் ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல; தாமதித்து வழங்கப்படும் இழப்பீடும் கூட பயனில்லாமல் போய்விடும் என்பதற்கு வாச்சாத்தி துயரம் ஓர் உதாரணம்
இதற்கான ஆதாரத்தோடு திரட்டிய பொழுது பத்திரிக்கை செய்திகளை காணவில்லை...

2011 தீர்ப்பு மட்டுமே செய்தித்தாளின் வலைத் கொண்டிருக்கிறது.

நீதி கிடைக்க முன் நின்று போராடிய மார்க்சிஸ்ட் இன் பிளாக்கில் கூட கொடூரத்தின் புகைப்படங்கள் கிடைக்க வில்லை..

ஃபேஸ் புக்ல கிடைத்த சில லிங்குகள் கீழே
m.facebook.com/photo.php?fbid…

தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய `உண்மையின் போர்குரல்-வாச்சாத்தி’ ஆவணப்படம் அந்த வரலாற்று உண்மையைப் பேசுகிறது. அதைப் பார்க்க பார்க்க நம் மனம் பதைபதைக்கிறது. அத்தனை கொடூரங்கள்.

m.facebook.com/photo.php?fbid…
19 ஆண்டுகள் சிறிது கூட தளர்ச்சி அடையாது போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரோ, தற்கால உதவியாக ரூ.15,000 வழங்கிய திமுக ஆட்சி பற்றியோ குறிப்பிடாத ஊடகங்கள்..
ஜெயாவின் கொடூரங்களை நிவாரண தொகையை கொட்டை இடத்தில் போட்டு மறக்கடித்தன

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Feb 19
#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு
செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் திரை மறைவு தகிடு தத்தங்கள் உதவின
ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து
Read 16 tweets
Feb 18
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது.
மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல்,மரண நெடி நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப்
Read 27 tweets
Feb 17
இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.
கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
ஆட்சியை நடத்த ;

சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?

மக்கள்தான்.

இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.

இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.
Read 12 tweets
Feb 16
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
#9_தமிழ்மாணவர்மன்றம்
பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகள் புனையப்பட்டிருந்தது
கதர் சட்டை பார்த்து காங்கிரஸ் என நம்பி கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த கலைஞர் உண்மை அறிந்து தன் தலைமையில் உருவான மாணவர் சம்மேளனத்தை கலைக்க முடிவு செய்தார். Image
இனி கலைஞர் வார்த்தைகளில்..
கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார்.

என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார்.

நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகி விட்டது.
'இது நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?' என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீட்டது. 'தமிழ் வாழ்க! இந்தி வளர்க' என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!" என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர். Image
Read 12 tweets
Feb 15
#சின்னங்களின்_வரலாறு
#கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
Read 22 tweets
Feb 13
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது Image
இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். Image
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.

'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(