சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).

பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.

#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
'இரவலர் வம்மினென விசைத்த துடி' எனத் தகடூர் யாத்திரை பாடல் சுட்டுகிறது.

#சாப்பண்பாடுதல் - சிறுவர்களும், துடியர்களும் பிணத்தைச் சுற்றி வந்து பறை கொட்டுவார்கள். அப்போது சாப்பண்ணைப் பாடினர் என்பதை (புறம்: 291) சுட்டும்.

கனல் முழங்கி விளரிப்பண் கண்ணினார் பாணர் எனப் புறப்பொருள்...
வெண்பாமாலை மேற்கோள் பாடல் சுட்டுவதால் இக்காலத்து விளரிப் பண்ணில் பாட்டிசைத்தனர் எனத் தெரிகிறது.

#அழகு_பார்த்தனர் - இறந்த மன்னனின் பிணத்திற்குப் பொன்னும் மணியும் அணிவித்து இறுதியாக அழகு பார்த்திருக்கிறார்கள்.

மணிமருள் மாலையையும், ஒற்றைவட மாலையையும் ஒரு அரசனுக்கு...
சூட்டியதாகப் புறம் 291-ஆம் பாடல் காட்டுகிறது.

'மார்பில் அறைந்து கொள்ளுதல்'

இக்காலத்து யாரேனும் ஒருவர் இறந்தால், பெண்கள் மார்பில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைப்பதைக் காண்கிறோம்.

அரசன் இறந்தஞான்று மகளிர் மாரடித்துக் கொண்டனர் என்பதை புறநானூறு - 237 ஆம் பாடல் சுட்டும்.
கைகளில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து 'வாழைப் பூ' போல் சிதறி விழும்படியாக மார்பில் அறைந்து கொண்டனர்.

அரசனின் பிணத்தைக் குளிப்பாட்டிப் பாடையில் (வெள்ளில்) வைத்துப் பின், சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ எடுத்துச் சென்றனர் (புறம்: 380).
#அடக்கம்_செய்தல் - பண்டுதொட்டு அரசனுடைய பிணத்தைச் சுடுதலும், தாழியில் கவிப்பதும், கழுகுகளுக்கு உணவாகப் பிணத்தை ஆல நீழலில் போட்டு வருவதும் மரபாக இருந்துள்ளது. (புறம்: 278, 238, 256).

#பெருங்காடு - சுடுகாடும், இடுகாடும் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப் புறத்திலேயே அமைந்திருந்தன.
இக்காட்டை பெருங்காடு (புறம்: 383), 'தனித்தலை பெருங்காடு' (தனி இடத்தை உடைய புறக்காடு (புறம்: 250) என இலக்கியங்கள் சுட்டுகின்றன.

பிணத்தை இட்டுப் புதைக்கப்பட்ட தாழியினது குவிந்த புறத்தே கழுகுடன், பொதுவல், அண்டங்காக்கை, கோட்டான் முதலியன தாம் விரும்பியபடி சுற்றித் திரியும்...
என்பதைப் புறப் பாடல்கள் காட்டுகின்றன.

#கைப்பலி - அரசனின் பிணத்தைச் சுடக் குறவனே விறகை வெட்டி வருகிறான் (புறம்: 231).

சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்ட பிணத்தைத் தர்பைப்புல்லில் கிடத்திக் கள்ளையும் பருக்கை உணவையும் புலையன் படைக்கிறான் (புறம்: 380)...
இதை 'வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையன் ஏவ' என்னும் அடிகளால் உணரலாம்.

இதையே 'உப்பிலிப் ழுக்கல் காட்டுப் புலைமகனு குப்ப வேகக் கைப்பலியுண்டு' என்று சீவக சிந்தாமணியடிகளும் (2994) தெளிவுபடுத்துகின்றன.
#பிண்டச்சோறு - இறந்துபட்ட அரசன் சொர்க்கம் புகுதல் வேண்டி அன்புக்குரிய மனைவி வீட்டை மெழுகிப் பிண்டச் சோற்றைப் படைக்கிறாள் (புறம்: 234).

பொதுவாகச் சங்க காலத்தில் இறந்துபட்ட ஆண்மகனின் உயிர் சுவர்க்கம் புகுதல் வேண்டித் தம் மக்களே பிண்டச் சோற்றை வழங்கினர் (புறம்:9)..
இவை தாம் இலக்கியம்வழி அறியப்படும் நீத்தார் சடங்குகள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Feb 22
மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை...!

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும், சிறப்புகளும் அதிகமாக அழிந்துவிடாமல்,

இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும். Image
அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு, சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்துவரும் ஓர் அறிய பண்டிகையாகும்.

இப்பண்டிகை, உழவர் திருநாளை உவகையுடன் தை மாதம் கொண்டாடி முடித்து உடன் நடக்கும் ஓர் பண்டிகை.

தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும்.
அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்.

தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கிவிடுவர்.

இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்.
Read 13 tweets
Feb 21
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)

மேனாட்டார்க் குறிப்பு:

அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.

அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.

இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.

உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.

இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
Read 16 tweets
Feb 12
உணவும் - சமூகமும் - பண்பாடும்! (3).

புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.

அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.

இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.

நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.

பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.

புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...
Read 7 tweets
Feb 11
உணவும் - சமூகமும் - பண்பாடும்! (2).

விழாக்கால உணவுகளில் குறிப்பிடத்தக்கன தைப் பொங்கலன்று சமைக்கப்பெறும் பால்பொங்கலும், படைக்கப்பெறும் கிழங்கு வகைகளும் ஆகும்.

இதுவன்றித் திருக்கார்த்திகைக்குச்
செய்யப்பெறும் அரிசிப் பொரிக்குக் 'கார்த்திகைப் பொரி' என்றே பெயர்.
சித்திரை மாதம் புதுமணப் பெண்ணுக்கு அரிசி அவலும், கருப்புக்கட்டியும் சீர்வரிசையாகத் தருவது மரபு. இவையனைத்தும் வைதீக எழுச்சிக்கு முன் உருவான வழக்கங்கள்.

'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது மார்கழித் திருவாதிரையில் (சிவனுக்குரிய நாள்மீன்) சைவர்கள் ஆக்கும் உணவாகும்.
பிள்ளையார் சதுர்த்தியில் (ஆவணி) செய்யப்பெறும் கொழுக்கட்டையும், தீபாவளிக்கான எண்ணெய்ப் பலகாரங்களும், மார்கழி 27ஆம் நாள் செய்யப்பெறும் அக்கார அடிசிலும் வைதீக எழுச்சியில் பிறந்த உணவு வகைகளாகும்.

ஆடி ‘அறுதியில்' (இறுதி நாளில்) 'புலால் சோறு' உண்பது இன்றளவும் தமிழ்நாடு...
Read 14 tweets
Feb 10
உணவும் - சமூகமும் - பண்பாடும்!

#உள் என்ற வேர்ச் சொல்லிலிருந்தே #உண், #ஊண், #உணவு ஆகிய சொற்கள் பிறந்தன.

தாய்ப்பாலாகிய நீர் உணவே மனிதனின் முதல் உணவாக அமைந்தாலும், தண்ணீரை ஓர் உணவாகத் தமிழர் கருதுவதில்லை.

தாய்ப்பாலுக்கு முன்னதாகத் தந்தையின் உடன்பிறந்தாள் குழந்தையின் நாக்கில்..
தொட்டு வைக்கும் இனிப்புத் திரவமே அதன் முதல் உணவாகும். இதற்குத் #சேனை என்று பெயர்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியிலும் தமிழ் மொழி பேசுவோரிடமும் இப்பழக்கம் இன்று வரை உள்ளது.

காய், பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்த காரணத்தாலேயே மண்ணைத் #தாய் என மனிதன் கொண்டாடினான்.
காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும், தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்களாகும்.

மனித மிருகம், மனிதனாக மலர்ந்தபொழுது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் "கூட்டு உண்ணலும்" நடந்தேறியுள்ளது.
Read 20 tweets
Feb 8
புலம்பெயர்ந்தோர் சமையல்...!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையினின்று குடிபெயர்ந்த இவர்களின் வாழ்விடம் இலங்கையில் #மலையகம் மட்டுமின்றி,

இலங்கையின் மையப்பகுதியாக இருந்தாலும் தற்போது எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இருநூறு குடும்பங்களாக இலங்கையினின்று இடம்பெயர்ந்த இவர்கள், தாயகம் திரும்பியவர்களே அன்றி இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்.

ஆயினும் இடப்பெயர்ச்சியை ஏற்றுக் கொண்ட இவர்கள், இன்றளவும் தங்கள் குடியிருப்பிற்கு "ஏதிலிகள் குடியிருப்பு" எனப் பெயரிட்டுள்ளதே...
இவர்கள் தம் வருத்தங்களின் வார்த்தைக் கோர்வைகள்தாம்.

தங்களுடைய பண்பாட்டு அடையாளங்களை இழந்து பரிதவிக்கும் இவர்கள் ஏனோ பழங்கதை பேச மறப்பதில்லை.

பண்பாட்டுப் பழங்கதைகளில் இவர்கள் பத்திரமாக வைத்திருக்கும் பழம் பொக்கிஷங்களில், உணவுக்கு ஓர் உன்னத இடமளித்துள்ளனர்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(