Skm Profile picture
Feb 26 12 tweets 4 min read
கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''

எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..சிவாஜி படங்களில்
நடித்த போது,
அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
எங்கே போனது..
அந்த வாழ்வும் வளமும்..!

3) #மூன்றாவது_நபர்.

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
ஒரு நடிகை.
ஒரு காலத்தில்,
தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.
பல பெரிய தயாரிப்பாளர்கள்
அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில் காத்திருந்த
காலம் உண்டு.

என்னைப்பார்க்க வந்தவர்,
'"வாலி சார்..
எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
4) #நான்காவது_நபர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை.

நான் கவனித்து விட்டேன்.
ஓடிப்போய் அவரருகே சென்று,
"நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்.
இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.
என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு,
அவரை வணங்கினேன்.
'ஓ நீங்கதான் வாலியா..?’ என்று
என் கைகளை பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த
காலம் ஒன்று உண்டு.
இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
நான் சிலிர்த்துப் போனேன்.

"அவர் தொட்டதால் அல்ல".

எந்த ரயில் நிலையத்தில்..
ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..
அதே ரயில் நிலையத்தில்,
இன்று கவனிக்க ஆளில்லாமல்..
தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.
காலம் எப்படியெல்லாம்..
தன் ஆளுமையைக் காட்டுகிறது.
அந்தப் பழைய நிகழ்வுகளை
எண்ணிப்பார்க்கிறேன்.

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்
திரு.#இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..
திரு.#சந்திரபாபு அவர்கள்
3)நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...
நடிகையர் திலகம் திருமதி.#சாவித்திரி அவர்கள்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..
எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..
திரு. எம்.கே.#தியாகராஜ_பாகவதர்.
இவர்களை விடவா நான் மேலானவன்.*

அன்று முதல் நான்,
#நான்
இல்லாமல் வாழப்பயின்றேன்.

எதுவும் மரணம் வரைதான்...
இதுதான் மனிதன் வாழ்க்கை.

வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..
மரணத்தை விட கொடூரமானது...

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SivanThiruveng1

Feb 27
அப்படி என்ன பெரிதாய்ச் செய்துவிட்டார் ராமானுஜர்?

கேளுங்கள்....

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தார்.

1/ Ramanujan
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,
தேவகி,அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----

2/
என்ன செய்தார் ராமானுஜர்?

ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே,

3/
Read 19 tweets
Feb 26
#ஹிந்து_தர்மம்

#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு....

1.உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்துக் கோவில்...
இது கட்டப்பட்டு 11,000 ஆண்டுகள் ஆகிறது..
2.உலகிலேயே பெரிய கோவில் அங்கோர் வாட்( angkor watt) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்..
கம்போடியாவில் தாய்லாந்து எல்லையருகே உள்ளது

3.உலகிலேயே மிகப் பெரிய குடைவரைக் கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்...
இது கட்ட 5 லட்சம் டன் பாறையை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது...

4.உலகத்திலே பணக்காரக் கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவில் ..
Read 10 tweets
Feb 25
1.காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திமுக..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டனி..!

2.காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த தெலுங்குதேசம் (சந்திரபாபு நாயுடு)..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டனி..!

1/
3. காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த ஆம்ஆத்மி (கெஜ்ரிவால்)..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!

4. காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த சமாஜ்வாதி..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!

2/
5. காங்கிரசை எதிர்த்து ஆதரம்பித்த பகுஜன் சமாஜ்வாதி..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!

6. காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ்..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!

3/
Read 4 tweets
Feb 23
ஈஷாவை பத்தி தெரிஞ்சா பேசுங்க, இல்லன்னா அமைதியா இருங்க.

எவனோ மதமாற்ற குரூப் அடிச்சு விடுறது தூக்கிட்டு ஆடாதீங்க. அப்படிபட்ட செய்திகளுக்கு உண்மையாவே ஆதாரம் இருந்திருந்தா,

மதமாற்ற குரூப்...
நம்மள மாதிரி பேஸ் புக்லயும், சத்திரம் சாவடி திண்ணலயும் Image
வதந்தி பரப்பிட்டு உக்காந்திருக்க மாட்டான். நேரா கோர்ட்டுக்கு போய், ஈஷாவ ரெட்டை தாழ்பாள் போட்டு இழுத்து பூட்டியிருப்பான்.

கோர்ட்டுக்கு போயும் ஒன்னும் வேலை ஆவலன்னுதான், நம்ம ஆளுங்கள வெச்சே ஈஷாமேல புரளி கிளப்பிட்டு திரியுறாங்க.
ஈஷா மேலான புரளிகளுக்கு, மீடியா துணை போறதுகூட வழக்கமா மத்த நிறுவனங்கள் மாதிரி கவர் குடுக்கும் பழக்கம், ஈஷாகிட்ட இல்லேன்றதால தான். தப்பு செய்றவன்தான பயக்கணும். நியாயம்தான ?

இவங்க சொல்ற வனப்பகுதி ஆக்கிரமிப்பு பத்தி பேசுவோம்.
Read 13 tweets
Feb 16
இந்திய மக்கள் போர் குணம் இல்லாதவர்கள் .அதனால்தான் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நம்மை 600 ஆண்டுகள் ஆண்டனர் என்று சிலர் சொல்கின்றனர் .

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஆதிமதங்கள் அப்படியே இருக்க, கிறிஸ்தவமும் இஸ்லாமும் புதிதாக தோன்றியது.
மெக்காவில் ஆரம்பித்து காலிபாக்களால் இஸ்லாம் வெகு வேகமாக பரவியது .

மெசபடோமியா முழுவதையும் வெறும் 50 ஆண்டுகளில் முழுவதுமாக இஸ்லாமாக்கி தொடந்து நகர்ந்து ஆப்கான் வரை இஸ்லாமை பரப்பினார்கள் இஸ்லாமியர்.. எங்கும் வாள்தான் பேசியது .
ஐரோப்பா அமெரிக்கா முழுவதையும் 200 ஆண்டுகளில் கிறிஸ்தவத்துக்கு மாற்றினார்கள் கிறிஸ்தவர்கள்.

உலகின் பெரும் மக்கள் தொகைகொண்ட பாரத துணைக்கண்டத்துக்கு இருவருமே வந்தார்கள் .இருவருமே பாரதத்தை ஆண்டார்கள் . ஆனால் அவர்களால் பாரதத்தை இஸ்லாமாகவோ கிறிஸ்தவமாகவோ மாற்ற முடியவில்லை .
Read 9 tweets
Feb 16
சற்றே இளைப்பாறுதல்...

சம்பளம் உயர்த்திக் கேட்ட ஊழியருக்கு மேனேஜர் வைத்த test..

மேனேஜர் :நீ ப்ளைட்ல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு., அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?

ஊழியர்: 49 இருக்கும்

ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது?
ஃப்ரிட்ஜை திறக்கணும். மானை உள்ள வைக்கணும், ஃப்ரிட்ஜை மூடணும்

அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள், எல்லா விலங்கும் வந்துருச்சு, ஒன்னு மட்டும் வரல, அது என்ன?

மான், ஏன்னா அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு

முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க?
தாராளமா கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சுங்க

ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி?

குளத்தில் மூழ்கிட்டாங்க

அதான் இல்ல, முதல்ல ஃபிளைட்ல இருந்து ஒரு செங்கலை தூக்கிப் போட்டேல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(