#ஶ்ரீவைஷ்ணவம்
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் பத்துவிதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
அவை:
1. அத்வேஷி.
2. அனுகூலன்
3. நாமதாரி
4. சக்ராங்கி
5. மந்திரபாடி
6. வைஷ்ணவன்
7. ஸ்ரீ வைஷ்ணவன்
8. ப்ரபந்நன்
9. ஏகாந்தி
10. பரம ஏகாந்தி

#அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும்
துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி
#அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது
இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.
#நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹா விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்து இருப்பவன்.
#சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹா விஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆசார்யன்
மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.
#மந்திரபாடி
முன் சொன்ன நான்கோடு, சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்திரமான திருஎட்டெழுத்து மந்திரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியசித்தி பெறுபவன்.
#வைஷ்ணவன்
மேலே சொன்ன ஐந்தையும்
மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.
#ஸ்ரீவைஷ்ணவன்
முன் சொன்ன ஆறையும் கடைபிடித்து, ஒழுகுகின்ற எண்ணையானது பிசிறு இல்லாமல் ஒழுகுவது போல, சிந்தனையானது வேறு நினைவு
இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனத்தில் நிலை நிறுத்தி, அவனை தியானிப்பவன்.
#ப்ரபந்நன்
மேலே சொன்ன ஏழு தகுதிகளோடு,
பகவானை அடைவதற்கு பிரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று பிரபத்தியை கடைபிடிப்பவன்.
வேதசாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள
கர்ம ஞான பக்தி யோகங்களை
கடைபிடிப்பது கடினமானது, அப்படியே கடை பிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்க வேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.
#ஏகாந்தி
முன்சொன்ன எட்டு தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே
உபாயமாகப் பற்றிக் கொள்ளுபவன்.
#பரம_ஏகாந்தி
மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாக பற்றிக் கொள்ளுவதும் கூட கடினமானது தான். ஆகவே நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து, அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று
முடிவு எடுப்பவன். மேலே சொன்ன பத்து விதமான வைஷ்ணவத் தகுதிகளில், முதல் ஆறு தகுதிகளை ஆச்சார்யனிடம் பஞ்சசம்ஸ்காரம் பெறுவதின் மூலமாக அடைந்து விடலாம், ஆச்சார்யனிடம் சங்க சக்கர முத்திரைகளை பெறுவதன் மூலமாக சக்ராங்கி ஆகலாம், தாஸ்யநாமம் பெறும்போது நாமதாரி ஆகலாம் .
ரகஸ்யத்ரயம் பெறும் போது
மந்திரபாடி ஆகலாம். இதன் பிறகு மற்ற தேவதைகளை வழிபடுவது தானாகவே நின்று போவதால் வைஷ்ணவனாக ஆகலாம் . மீதமுள்ள நான்கையும் நாம் முயற்சி செய்து அடைந்துவிடலாம், மேலோட்டமாக பார்த்தால் சுலபமாகத் தோன்றும். ஆனால் உண்மையாக கடை பிடிப்பதுதான் முக்கியம். ஶ்ரீவைஷ்ணவத்தை கடைபிடிப்பவர்கள், இது வரை
பஞ்ச சம்ஸ்காரம் பெறாதவர்கள், நல்ல முமுக்ஷுவாக இருக்கும் ஆச்சார்யனை சரணம் அடைந்து பஞ்சசம்ஸ்காரம் உடனடியாக பெற்றுக் கொள்வது நல்லது. பிறகு பார்ப்போம் என்று தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள். இனி வரப் போகும் கலிகாலம் கொடுமையாக இருக்கும். ஆகவே
எம்பெருமானார் சம்பந்தமுள்ள நல்லதொரு ஆச்சார்யனிடம் உடனே சரணம் அடைந்து பரமபதத்திற்கு செல்லும் வழியைப் பார்க்க வேண்டும். முதலில் பிரமச்சாரியத்தில் தவறவிட்ட சாஸ்திரங்களை வர்ணஸ்ரமத்தில் பிடிப்பது வயோதிகம், ஞாபககுறைவு, உச்சரிப்பு தவறு போன்றவற்றால் கடினம். நாம ஸ்மரணமும் சரணாகதியே
முக்திக்கு வழி. இதைத் தவிர 11வது பிரிவும் உள்ளது. பிள்ளை லோகாசார்யர் சாஸ்த்திரத்தின் சாரத்தை ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் மூலம் வெளியிட்டருளினார். இதன் முடிவில், “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்”, அதாவது சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி என்பதை
அருளியுள்ளார். இந்தக் கொள்கையை பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (மணவாள மாமுனிகளின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவர்) தன்னுடைய திவ்ய க்ரந்தமான அந்திம உபாய நிஷ்டையில், பல உதாரணங்களுடன் அழகாக விளக்கியுள்ளார். அந்திம=சிறந்த/எல்லையான, உபாய=வழி, நிஷ்டை=நிலைத்து நிற்றல். இதன் பொருள் ஆசார்யனிடத்தில
முழுமையாக அடி பணிந்து இருத்தல். இந்த ஆசார்ய நிஷ்டை மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வாரிடத்திலும், ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரிடத்திலும், தெய்வவாரி ஆண்டானுக்கு ஆளவந்தாரிடத்திலும், வடுக நம்பிக்கு எம்பெருமானாரிடத்திலும் இருந்தது. இந்த நிலைக்குச் #சரம_பர்வ_நிஷ்டை என்றும் ஒரு பெயருண்டு.
பகவானிடம் முழுமையாக அடிமை கொண்டிருத்தல் ப்ரதம் பர்வ நிஷ்டை (முதல் நிலை) என்றும் ஆசார்யனிடம் அவ்வாறு இருப்பது சரம பர்வ நிஷ்டை (முடிந்த நிலை) என்றும் சொல்லப்படுகிறது . ஈஶ்வர ஸம்பந்தம், பந்தமோக்ஷங்கள், இரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே காரணமாயிருக்கும்.
உதாரணம்: வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்.
ஆழ்வார் ஆசார்யர் எம்பெருமானார் ஜீயர் தேசிகன் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 4
#மகாபெரியவா
சொன்னது புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்.
இந்துசமய மன்றம்.

மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. பல காலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான Image
ஆடிட்டராக இருந்தார் பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.
அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம்
காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில் தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும் மகாபெரியவா திருநாமத்தைச்
Read 13 tweets
Mar 3
#எது_பக்தி_? ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத் கீதையும் பாராயணம் செய்வது வழக்கம். எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார். இது தினமும் நடந்தேறும். ImageImage
பலரும் இவரின் காதுபடவே எடுத்து உரைப்பார்கள். இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது. ஒரு நாள் அவ்விடத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக செய்தி வந்தது. உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள். மஹாப்பிரபு வரும் போது இந்த
பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத் கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம். குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல
Read 13 tweets
Mar 3
#FoodForThought There was a woman named Subhadra who lived with her hunter husband in the forest. They did not have children for many years. They offered a lot of prayers and did austere penance and finally they were blessed with a son. They brought him up with so much love and Image
care. Unfortunately one day a snake stung their son and he was struggling for his life. The wife was distraught and called to her husband. The husband searched for the snake which stung his child, brought it and told his wife that he would slay its head immediately. The wife said Image
That is not going to bring back our son’s life. But the hunter said, by killing this I can prevent it from stinging others and killing them. The wife said but there are so many other snakes in the forest, what are you going to do about them. As they were arguing the snake said
Read 10 tweets
Mar 3
#இராமன்_மகிமை #சஹஸ்ரநாமம்
வனவாசம் சென்ற ராமன் 14 வருடஙகளுக்குப் பின் பட்டாபிஷேகம் செய்து கொண்டான் என்பது நாம் அறிந்ததே. பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின், அயோத்தியில் வாழ்ந்த சில பண்டிதர்கள் வசிஷ்டரிடம் சென்று, “14 வருடங்களுக்கு முன் தசரதச் சக்கரவர்த்தி ஏற்பாடு செய்த பட்டாபிஷேகம் ஏன் Image
நின்று போனது?” என்று கேட்டார்கள். அதற்கு வசிஷ்டர், “அப்போது ‘ராம பட்டாபிஷேகம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்தார்கள். அதனால் நின்று போனது. இப்போது ‘சீதா ராம பட்டாபிஷேகம்’ என்று பெயரிட்டு நடத்தியபடியால், வெகு சிறப்பாக நடந்தேறி விட்டது. வெறும் பெருமாளை விடப் பிராட்டியோடு கூடிய
பெருமாளுக்கே ஏற்றம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளுங்கள்!” என்றார். வசிஷ்டரின் இந்த விளக்கத்தின் ஒரு பகுதியை அந்தப் பண்டிதர்கள் ஏற்றபோதும், அவர்கள் மனத்தில் மற்றோர் ஐயம் இருந்தது. அதை வசிஷ்டரிடமே அவர்கள் கேட்டார்கள் “மாமுனியே! எங்களது ஐயம் இன்னும் தீரவில்லை. இளவரசுப்
Read 12 tweets
Mar 3
#மகாபெரியவா #காரடையான்_நோம்பு_ஸ்பெஷல்
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
ஒருநாள் கோவில் வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக் கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே Image
பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை
சுழல விட்டாள். பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்! அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய ஊர் மருத்துவரோ அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ
Read 13 tweets
Mar 2
#மஹாபெரியவா
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி
மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒரு முறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சி மடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டு இருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால்,
காஞ்சி மடத்தில் பாட வேண்டி இருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு 20 நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலை விழாவில் முதல் நாள் பாடவேண்டிய பாலக்காடு
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(