#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு
#Passing_Clouds

சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?

வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்
தேர்தல் அரசியலின் சித்தாந்தம் இதுதான்.

தேர்தல் Addict கொண்டோர் சிலர் உண்டு. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பதோ, கட்டுத்தொகை திரும்ப வரவில்லையே என்கிற வருத்தமோ துளி கூட இருக்காது. மாறாக தேர்தலில் வேட்பாளராக பங்கு கொள்வதன் மூலம் மீடியா வெளிச்சம் தன் மீது படும், தன் பெயரை
செய்திகளில் சொல்வார்கள். தான் வாங்கிய வாக்குகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகப் பதியும். இதற்காகவே ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பிலும் குஷியாவார்கள் !

இன்னொரு கேஸ் உண்டு.

அது, தேர்தல் என்றாலே தனக்கான வரவாக மட்டுமே பார்ப்பது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலா ? திரட்சி நிதி 20 லட்சத்தை
கொண்டாடா தம்பி எனத் துண்டு விரிப்பது.

நாம்தான் வெல்வோம், மக்கள் பூரா நம்மாளுகளா மாறிப்புட்டாய்ங்க, கூடுற கூட்டத்தைப் பார், வர்ற லைக்கைப் பார், தன்னை விட மூத்தவர்களையும் தம்பி, நீ வா போ என ஒருமையில் பேசுவது, அடா புடா என சீன் போடுவது, கேட்டா அதெல்லாம் உரிமையா பேசறதுடா குண்டா மவனே
என உருட்டுவது ...

முக்கியமாக, தாம் யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என உருட்டுவதுதான் மகா உருட்டல் !

அதாவது இவர்கள் மட்டுமே பரிசுத்தமானவர்களாமாம். இவர்கள் கூட்டணி வைக்குமளவுக்கு பிறர் எவருக்குமே தகுதி இல்லையாம். இது பத்தினி வாழும் வீடுன்னு ஒருத்தி எழுதி வச்சாளாம், தெரு பூரா
திருதிருன்னு முழிச்சதாம்.

ஆஹஹா, என்னா போல்டா எழுதி வச்சிருக்காப்பா, அப்ப அவ யோக்கியமாகத்தான் இருப்பான்னு ஒரு சின்ன கூட்டம் நம்புச்சாம். அவர்கள்தான் நம் தம்பிகள் !

மக்களாட்சியில் கூட்டணி என்பது பல நல்ல காரியங்களுக்கும் உதவும். சான்றுக்கு ஹிட்லர் போன்ற ஆட்களை வீழ்த்த
வேண்டுமானால், எதிர் நிலைப்பாடுகள் உள்ளவரும் கூட்டணி வைத்து அவரை அகற்ற முயல்வதே நாட்டுக்கு நலம்பயக்கும் !
ஹிட்லருக்கு உதவுவது போல், சதிகாரர்களுக்கெதிராக விழும் வாக்குகளை சிதற அடித்தால் ? கூட்டணி வைப்பது எங்கள் கலாச்சாரம் அல்ல என்ற பெயரில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் சீமான்
இன்றையத் தேர்தல் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. எங்களுக்கு முன் தோன்றிய, அதிலும் எதிர்கட்சியாக இருந்த ஒரு கட்சியே, எங்களை விட மிகக் கீழே இருக்கிறது என்பார் சீமான்.

ஆனால், பதிவான வாக்குகளில் 6 - 7% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது நா த க. அதாவது
முதலிடம் பெற்ற கட்சி 65% இரண்டாமிடம் பெற்ற கட்சி 25% இவர்கள் வாங்கியிருப்பது 7% ற்குள். இதுதான் அந்த மூன்றாம் இடம் !

ஒருவேளை அதிமுக இன்று 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் கூட, இவர்களின் இந்த ஏழு விழுக்காட்டால் ஏதோ விளைந்தது எனப் பெருமை படலாம்.
2009 முதல் ஈழம், 2 G யில் பிறர் சொன்ன அவதூறுகளை, அப்படியே வழிமொழிந்து ஏற்ற இறக்கத்துடன் பேசி திமுகவின் நற்பெயரை முற்றிலும் பாழ்படுத்த முயன்றவர்களில் தலையானவர் சீமான். அவர் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தவுடன் 3% வாக்குகளை பெற்றார். அது 5% ஆனது. சமயங்களில் 7 - 10% வரை,
தொகுதிக்கேற்ப மாறியது. ஆனால் சராசரி அந்த 5% மட்டுமே !

இந்தச் சராசரியால், அதாவது தமிழ்நாடு முழுக்க விரவியிருக்கும் இந்த 20 - 30 இலட்சம் வாக்குகளால், என்ன விளையும் ?

எதுவுமே ஆகாது.

சீமான் வீங்குவார். சீமானின் கார் வீங்கும். வங்கி இருப்பு வீங்கும். சீமானைப் போல் எடக்கு
மடக்காகப் பேசுவதால் வசமாகச் சிக்கிய தம்பிகளின் மண்டை வீங்கும். வேறு எந்த மாற்றமுமே நடக்காது !

13 வருடங்களில் இவர் வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், இன்று 50 - 60 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். 2026 ன் ஆட்சி இவர்களுடையது என மக்கள் பேச வேண்டும் !
சான்றுக்கு, திமுக 1957 ல் 12 MLA, 1962 ல் 50 MLAக்களுடன் எதிர்கட்சி, 1967 ல் ஆளுங்கட்சி. இதை நீங்கள் MGR, ஜெயலலிதா வளர்ந்த வரலாற்றோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், இவருக்குத்தான் அத்தகைய எண்ணமே இல்லையே ?

ஒரு மேகக்குவியலால், பலத்த மழை பொழிந்து காடே செழிக்கப் போகிறது பார்
என்றுதான் இவருக்கு ஆதரவாளர் கூட்டம் உருவாகிறது. ஆனால் சிறு துளிகளைப் பெய்துவிட்டு கலைந்து விடுகின்றன அந்த பொய் மேகங்கள். மீண்டும் மேகம் கூடுகிறது, கலைகிறது. காரணம் ?
திமுகவை மட்டும் பலமாக எதிர்த்துக் குரைக்க வேண்டும் என்று வளர்க்கப்படும் ஒரு வேட்டை நாயின் வேலைதான் இவருடையது.
அப்படித்தான் சில பிரபலக் கைகள் இவரை ஆட்டுவிக்கின்றன !

சமூக வலைத்தளங்களில் நடத்தப்படும் தேர்தல்கள், கணிப்புகளில் ஏமாற்று வேலை செய்து தாங்கள் மிக பிரபல்யம் என இவர்கள் நிறுவ முனைவது அத்தனையும் யூரோ, டாலர், பவுண்ட்களுக்குத்தான். இத்தனை மாபெரும் டம்மி பீஸை, ஒவ்வொரு தேர்தலிலும்
எவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு கூட்டம் கட்டமைக்கிறது ?

இதை அறிந்துக் கொண்ட அடுத்த நொடி, அந்த மேகக் கூட்டம் சிதறிவிடுகிறது. அதனால்தான் அந்த fixed average 5%

சமூக வலைத்தளங்களில் அவருடைய ஆட்கள் பலர் தொடர்ந்து இயங்குவதால் மட்டுமே, இத்தகைய விளக்கங்களைச் சொல்ல வேண்டி வருகிறது.
இளைஞர்கள்தான் இவர்கள் வலையில் எளிதாகச் சிக்குகிறார்கள்.
பிள்ளைகள பிடிக்கும் பூச்சாண்டி வருவான், வெளிய போகாத என்று குழந்தைகளை முன்பு எச்சரிப்பார்கள். சீமான் பேச்சைக் கேக்காதடா, மூளைய கலக்கிவிட்டுப் போவான் என்கிற புது எச்சரிக்கையைத் தருவது பெற்றோர்களுக்கு இன்று அவசியமாகிறது !!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Feb 26
#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா?
2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்
ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக்
Read 21 tweets
Feb 24
#என்நிம்மதிக்கு_வந்தசோதனை

"இப்படித்தான் என்னையும் மிரட்டினார்கள்.. தியானத்தில் இருக்கும் ஓபிஎஸ் இன் மணக் குமுறல் புரிகிறது

- கங்கை அமரன் பேட்டி

ஓபிஎஸ் சசி கும்பலால் விரட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தும் வரை கங்கை அமரனுக்கு நிகழ்ந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமலே இருந்தது Image
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய
வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லு எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்றனர். இதனால் பயந்து. ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக சசிகலாவிடம் போனில் பேசினேன். Image
Read 13 tweets
Feb 20
#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது
அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்
என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.
Read 27 tweets
Feb 19
#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு
செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் திரை மறைவு தகிடு தத்தங்கள் உதவின
ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து
Read 16 tweets
Feb 18
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது.
மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல்,மரண நெடி நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப்
Read 27 tweets
Feb 17
இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.
கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
ஆட்சியை நடத்த ;

சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?

மக்கள்தான்.

இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.

இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(