1971 ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலம்
அவரைப் பற்றி ஒரு மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது.
அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப்பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி (ராசகோபாலச்சாரி),என்ற ஒரு மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் பதவியிலிருக்கும் #கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் கலைஞர் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். #கலைஞர் செய்யவில்லை.
ஆனால் கடற்கரையில்
👉👉தந்தை பெரியார் கூட்டம் போட்டு ராசகோபாலாச்சாரியை மிகக்கடுமையாக கண்டித்தார்.
ராசகோபாலாச்சாரியின் சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்,
“இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல;
தெருப்பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல;
இந்த ராசகோபாலாச்சாரிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து,👇👇
சம்பளம் கொடுத்து வவுச்சரில் (பற்றுச் சீட்டு) கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த பழைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ராமசாமி (நான்) கேட்கிறேன்.
நீ “எனக்குப் பதில் சொல்.. பிறகு கருணாநிதியைக் கேள்வி கேட்கும்
அருகதை இருக்கா என்று பார்ப்போம்.
“ஒரு தமிழன் சூத்திரன் (#கலைஞர்) தொடர்ந்து முதலமைச்சராய் இருக்கிறானே.. அவனை அவமானப் படுத்தத்தானே இப்படிசெய்கிறாய்?
நான் (பெரியார்) ஒருவன் உயிரோடு இருக்கும் வரை அது நடக்குமா? #ஒடுக்கிப்போடுவேன்! ஜாக்கிரதை! ” என்றார்.
அன்றைய பெரியாரின் பேச்சில் அனல் பறந்தது! புயலடித்தது! பூகம்பம் நிகழ்ந்தது! ஆனால் எதுவும் அவருக்காக அல்ல!தலைவர்கலைஞருக்காக வரிந்து கட்டி பேசினார்.
மேற்சொன்ன கூட்டம் நடந்த பல ஆண்டுகள் பின்னர் சென்னையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து #கலைஞர் அவர்களுடன் மகிழுந்தில் 👇👇👇
மகிழுந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பெரியாரின் மேற்கண்ட பேச்சை அப்படியே சொன்னேன்.
எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல் கேட்டுக் கொண்டே வந்த #கலைஞரின் ஆலிவர் சாலை பழைய இல்லத்தில் போய் இறங்கினோம்.
#கலைஞரின் முகம் இறுக்கமாய் இருந்தது. எதுவும் பேசவில்லை அப்போது அணிந்திருந்த ஒரு அரக்கு வண்ணக் கம்பளி மேல் துண்டை இரு கைகளாலும் இறுகப்பிடித்துக் கொண்டு சுற்றிலும் நின்றிருந்த யார் முகத்தையும் பார்க்காமல் வெட்ட வெளியைப் வெறித்து சிறிது நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார்.
“எனக்காகப் – பொது நன்மைக்காகப் பேசிய அப்படிபட்ட தலைவர்கள் எல்லோரும் போய்விட்டார்களே” என்றார் தனக்குத்தானே சோர்வான குரலில் உடைந்து போய் பேசினார்
வழக்கம்போல “மாலையில் பார்ப்போம்” என்று கூடச்சொல்லாமல் மெதுவாக நடந்து உள்ளே போய்விட்டார்.
அண்ணாநகர் போகும் வழியில் என்னைத் தன் மகிழுந்தில் புரசவாகம் கெல்லிஸ் முனையில் இறக்கி விட்டுப் போகும்போது ஆர்க்காடு வீராசாமி,
“இன்றைக்கு மதியம் தலைவர் தூங்க மாட்டார், எதையோ சொல்லி அவர் தூக்கத்தைக் கெடுத்து விட்டாய்” என்றார்.
அன்று மாலை அறிவாலயத்திற்கு வழக்கத்தை விடச் சற்று முன்னதாகவே கலைஞர் வந்துவிட்டார். சிறிது நேரம் யாருடனும் பேசவில்லை.அந்த நிகழ்வுகள் நிழலாடிக்கொண்டே இருந்தது போலும்
“நீலம் டீ கொண்டு வரச் சொல்லுங்க என்றார் அதே சோர்வான குரல்! “என்னண்ணே உடம்பு ஏதும் சரியில்லையா” என்றார் ரகுமான்கான்.
“இல்லைய்யா.. மதியம் தூக்கம் வரலே… தூங்கலே. ஒரு மாதிரி இருக்கு..!” என்றார் #கலைஞர்.
“ஆமாஆமா! அதே தான்! பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு…
நமக்காகத் எதையும் தான் ஏத்துக்கிட்டு பேசினத் தலைவர்கள் எல்லாம் போயிட்டாங்களே
என்னவோ தனியா இருக்கிறமாதிரி ஒரு உணர்வு. புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கம் வரலே” என்றார் தலைவர்கலைஞர்.
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE
இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*
இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார். அதுதான் F,
F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
ஒரு கடவுளின் சிலையை இன்னொரு கடவுளின் சிலை என்று ஏமாற்றி அர்ச்சனை செய்வது ஆகம மீறல். அந்த வரிசையில் சபரிமலை, திருப்பதி உள்ளிட்ட பல பிரபல கோவில்களில் நடப்பது ஆகம மீறல்.
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோவிலில் பூசை செய்வது ஆகம மீறல்.
பிள்ளையார் முதல் சாய்பாபா வரை திருடப்பட்ட கடவுள்கள் பலருக்கு இன்னும் ஆகமமே இல்லை, சமஸ்கிருத மந்திரங்களும் இல்லை. இவர்களுக்கு பிற கடவுள்களின் மந்திரங்களை ஓதுவது ஆகம மீறல்.
#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?
காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.
இவரிடம் என்ன சிறப்பு?
Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.
சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....
1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநர்கள் (ஆட்டுதாடிகள்) மீது உச்சநீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு!👏👏👏
ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக,
மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. 3.3.2023 அன்று மாநில சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது.
நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்துவதற்கான அறிவிக்கை வழங்குமாறு சட்டமன்றம் சார்பாக மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார். "நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக,
'விஜயபாரதம்' பதில் சொல்லுமா?
குஜராத் முதல் அமைச்சர் மோடி நீட்டை எதிர்த்தாரா ஆதரித்தாரா?
‘நீட்’ பற்றி தி.மு.க.வை நோக்கி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்‘ சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன் ‘விஜயபாரதத்தை’ நோக்கி நாம் (தி.க.) சில கேள்விகளை ஆதாரத்துடன் முன் வைக்கிறோம் - பதில் கிடைக்குமா? எங்கே பார்ப்போம்!
‘நீட்’ தேர்வால் பலன் பெறுவோர் யார்? பாதிக்கப்படுவோர் யார்? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகள் நடைபெற்ற ‘நீட்’டால் பலன் பெற்றவர்கள் யார் யார்? எத்தனைப் பேர்? பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? எத்தனை விழுக்காடு என்பதுபற்றி எல்லாம் பல முறை ஆதாரத்தோடு எழுதியிருந்தோம்.
‘நீட்’ ஆதரவாளர்களுக்கும் உண்மை தெரியத்தான் செய்கிறது.