#போலிதகவல்_கூலிப்படை 2
21 ம் நூற்றாண்டு அறியாமையின் நூற்றாண்டு. ஒரு பக்கம் மனிதகுலம் இதுவரை சந்தித்திராத தொழில்நுட்ப வளர்ச்சி. இன்னொரு பக்கம் பல நூறு ஆண்டு பழமைத்தனங்களோடு மனிதர்கள். அவர்கள் கைகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய அதிஉயர் சாதனம் வந்துவிடுகிறது, இந்த அதி உயர்
சாதனங்களை கையாள்வது குறித்து அதில் வரும் தகவல்களின் நிதானமாக நுங்குவதற்கான நேரமும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் எப்போதுமே ஒருவிதப் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் நின்று நிதானமாக தர்க பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் நிலை இல்லை.
திடீரென்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் செய்திகள் எந்த நாட்டில் இருந்து எந்த நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றன தவறான தகவலோடு மக்களின் பண்பாட்டு உணர்வை தூண்டி அந்த நாட்டின் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய வலிமையான இந்த வீடியோக்களை செய்திகளை உருவாக்குபவர்கள் யார்?
கார்டியன் இதழ் அப்படி ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தை அணுகி ஆப்பிரிக்காவிலிருந்து அந்த நாட்டுத் தேர்தலை தாமதப்படுத்துவதற்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்பது போல நடித்து ஆறு மாத காலமாக பேசி அந்த நிறுவனம் செயல்படும் விதம் அவர்கள் என்னென்ன நாடுகள் எல்லாம் வேலை செய்திருக்கிறார்கள் என்பது
போன்ற விஷயங்களை ஒரு ஸ்டில் ஆபரேஷனாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது
2022 ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த தேர்தலுக்கு முன்பு இடதுசாரி கட்சி முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பரப்பப்படுகிறது.
இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்
சர்ச்சுகளை மூடி விடுவார்கள், லெஸ்பியன் ஹோமோசெக்ஸ் வரை கொண்டு வந்து விடுவார்கள் ரீதியில் ஆன வீடியோ அது. கடுமையான கத்தோலிக்க மதப் பற்றாளர்களான பிரேசில் மக்களுக்குமிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி,தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது. வலதுசாரி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் நாட்டில் இந்த வலதுசாரிகளின் ஊடகங்கள் பரப்பிய வீடியோக்கள் தேர்தலுக்கு முன் சில நாட்களில் மட்டும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து அது என்றால் இது மாதிரியான செய்தி நிறுவனங்களின் வீச்சை கற்பனை செய்து பாருங்கள்..

இந்த செல்போனும் வாட்ஸப்பும் youtube
யும் கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மக்களின் கைகளில் கிடைக்கும் போது சர்ச்சை மூடிருவாங்கன்னு சொன்ன உடனே அவர்கள் பதட்டம் ஆகி தேர்தல் முடிவை மாற்றி விடுகிறார்கள்
இதே மாடலை இங்கே உள்ள பெருமாள் கோவிலுக்கு பொருத்தி பாருங்கள், பள்ளிவாசல் முன்பு பன்றிக்கறியை வீசும் வீடியோவை பரப்பினால்
என்ன ஆகும், இந்துக்களுக்கு துரோகம் முஸ்லிமுக்கு துரோகம் இந்த ஜாதிக்கு துரோகம் அந்த மதத்திற்கு துரோகம் என்று இதுபோல பரப்பப்படும் வீடியோக்களுக்கு எந்த அடிப்படை இருக்கும் என்பது குறித்த எந்த சிந்தனையும் இந்த வீடியோக்களை பார்க்கும் பகிரும் மக்களுக்கு தோன்றப் போவதில்லை.
பதட்டத்தோடும் அறியாமையிடனுமே அதை பரப்பி இந்த மூலதனத்துக்கு பலியாகி விடுவார்கள்.

பல நூற்றாண்டு காலமாக இந்த ஆண்டை அடிமை மனநிலையை ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிட்ட இந்திய சூழலில் ஒரே ஜாதியில் அவர்கள் மட்டும் எப்படி பணக்காரர்கள் நாம் எப்படி ஏழை என்றோ அல்லது ஒரே மாதத்தில் அவர்கள்
மட்டும் எப்படி உள்ளே நாம் ஏன் வெளியில் என்றோ சிந்திக்கும் மனநிலையே இல்லாமல் அதை ஊழ்வினையாக மறுபிறப்பின் விளைவாக நம்பக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய சமூகமாகவே இங்கு நாம் இருக்கிறோம்.
இந்த சமூக அறியாமையை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
நமக்குள்ளாக இருக்கும் பண்பாட்டுப்
பலகீனங்கள் , காந்தி மீது நமக்கு இருக்கும் பொது அன்பின் உள்ளாக கொண்டு வந்து அண்ணா ஹசாரேவை நிறுத்தி பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள் காந்தி என்று சொன்னதால் கேள்வி கேட்காமல் நம் மனமும் ஏற்றுக் கொள்கிறது இங்கே கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஊழல் கருத்துக்களை அவரும் பேசுவதால் நம் ஆளாகவே
மாறிவிடுகிறார் அவர் எவ்வளவு ஆபத்தான ஒரு ஆட்சியை ஏற்படுத்தி விட்டு இந்த எட்டு ஆண்டுகளாக உறங்குகிறார் என்று பாருங்கள் நம் அறியாமையின் விலை என்னவென்று புரியும்.
திடீரென்று ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் என்பது இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது அதற்கு திமுக தான் காரணம் என்பதும்
இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது 2ஜி ஊழலை அறிந்த அளவுக்கு அந்த வழக்கின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் பட்டியல் தெரியாது. அறிந்து கொள்ளும் நிதானமும் மக்களுக்கு வாய்க்காது.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் என்ற எண்ணை நம் எல்லோர் மனதுக்குள்ளும் ஒட்டி வைத்து விட அவர்களால் முடியும்
அதே சமயம் சித்ரா ராமகிருஷ்ணன் போன்ற சுமார் 350 லட்சம் கோடி புழங்கக்கூடிய பங்கு சந்தையில் நடைபெற்ற ஊழல் குறித்த கைது செய்யப்பட்ட அந்த நபரின் புகைப்படமும் கூட நம் பார்வைக்கு வந்து விடாது. கனிமொழி கைது செய்யப்பட்ட புகைப்படம் இருக்கிறது சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட புகைப்படம்
எங்கே என்ற தர்க்கபூர்வமான கேள்விகளுக்குள் நாம் செல்லும் வாய்ப்பே நமக்கு வாய்க்காது.
இந்த அறியாமையை பண்பாட்டு பலகீனங்களை ஊழல் பற்றிய முழுமையற்ற கருத்துக்களை மத இன ஜாதி உணர்வுகளை மூலதனமாகக் கொண்டுதான் பல நாடுகளில் தேர்தல் முடிவுகளை ஆட்சியாளர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது திடீரென்று வடக்கர்கள் குறித்தான செய்திகள் நமக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பேச்சுக்கு திடீரென்று தேர்தல் சமயத்தில் ஐந்து வடக்கர்கள் ஒரு தமிழ் பெண்ணை இழுப்பது போன்ற வீடியோ பரவுகிறது எனில் அது தேர்தல் சமயத்தில் பரவினால் எம்மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் ?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Mar 6
#போலிதகவல்_கூலிப்படை 3
பீகார் சம்பவத்தை தொடர்ந்து ஒரு வழியாக சமூக ஊடக போலி தகவல் மெர்சனரி (கூலிப்படைகள்) குறித்த பேச்சு மையத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறது. வலதுசாரிகள் இந்த விஷயத்தில் எவ்வளவு அட்வான்ஸ்ட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இப்போது அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருக்கும்
40,000 டிவிட்டர் அக்கவுண்ட் பற்றிய தகவல்களே சாட்சி..

சமூக ஊடகங்களை பல நாடுகளில் தேர்தல்களுக்கும் வலதுசாரிகளின் நலன்களுக்கும் பயன்படுத்த சர்வதேச அளவிலான நிறுவனங்கள் வந்துவிட்டது குறித்து கார்டியன் இதழ் செய்திருந்த stink ஆபரேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தோம்.
சமூக ஊடகங்களை கையாளும் நம்முடைய பண்பாட்டு பலவீனங்களை வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கி நம்மை எப்படி வலதுசாரிகளின் நலன்களுக்கு அணிதிரட்டுவார்கள் என்பது குறித்தும் சிறுக சிறுக வட மாநில தொழிலாளர் பற்றிய செய்திகளை முதன்மைப்படுத்துவதை வைத்து இன மோதல் வீடியோக்களை உருவாக்குவார்கள்
Read 22 tweets
Mar 4
#நிழல்_யுத்தம்
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் பல போலி வீடியோக்களை பரப்பி இருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் தமிழர்களை தாக்குவதாக தொடர்ந்து வீடியோக்களை பரப்புகிறார்கள் இதெல்லாம் தற்செயலாக நடப்பதா?

ஒரு கற்பனையாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில Image
வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை சீண்டுவது போல ஒரு வீடியோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது அந்தத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசில் நடைபெற்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு Image
ஒரு வீடியோ அங்கு பரப்பப்பட்டது இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சுகளை பார்களாக மாற்றி விடுவார்கள் என்றும் லெஸ்பியன் ஹோமோ ச***** எல்லாம் சர்ச்சில் நடக்கும் என ஒரு வீடியோ பரப்பப்பட்டது 20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் சில நாட்களில் அந்த வீடியோ 10 கோடி மக்களை சென்றடைந்திருந்தது Image
Read 19 tweets
Mar 3
#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு
#Passing_Clouds

சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?

வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்
தேர்தல் அரசியலின் சித்தாந்தம் இதுதான்.

தேர்தல் Addict கொண்டோர் சிலர் உண்டு. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி என்பதோ, கட்டுத்தொகை திரும்ப வரவில்லையே என்கிற வருத்தமோ துளி கூட இருக்காது. மாறாக தேர்தலில் வேட்பாளராக பங்கு கொள்வதன் மூலம் மீடியா வெளிச்சம் தன் மீது படும், தன் பெயரை
Read 18 tweets
Feb 26
#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா?
2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்
ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக்
Read 21 tweets
Feb 24
#என்நிம்மதிக்கு_வந்தசோதனை

"இப்படித்தான் என்னையும் மிரட்டினார்கள்.. தியானத்தில் இருக்கும் ஓபிஎஸ் இன் மணக் குமுறல் புரிகிறது

- கங்கை அமரன் பேட்டி

ஓபிஎஸ் சசி கும்பலால் விரட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தும் வரை கங்கை அமரனுக்கு நிகழ்ந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமலே இருந்தது Image
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய
வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லு எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்றனர். இதனால் பயந்து. ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக சசிகலாவிடம் போனில் பேசினேன். Image
Read 13 tweets
Feb 20
#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது
அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்
என்பதால், அப்போதைய ஆளுங்கட்சி அதிமுக வி.ஐ.பி.க்கள், வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர். முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(