#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில்#சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில்
அழைக்கப்பட்டுள்ளது. #மதுரை திருப்பாற்கடலைத் கடைந்த போது, நாகம் உமிழ்ந்த விஷத்தை, இறைவன் 'மதுரம்' (அமிழ்தம்/தேன்) ஆக்கியமையால், இத்தலம் 'மதுரை' என்று பெயர் பெற்றதென்பர். #நான்மாடக்கூடல் மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் சடையிலிருந்து
விடுத்த நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாகக் கூடி, மதுரையைக் காத்ததால் 'நான்மாடக்கூடல்' என்ற பெயர் மதுரைக்கு வந்தது. #ஆலவாய் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு, வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு, இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், 'ஆலவாய்' என்ற பெயர் இத்தலத்திற்கு
ஏற்பட்டுள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32
கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், பொ.யு 1570-ல் கட்டப் பெற்று, பொ.யு. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், பொ.யு. 1570 ஆம் ஆண்டில்
கட்டப் பட்டு, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் உள்ளது.
இதுவரை சென்று தரிசித்ததில்லை என்றால் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் இது.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பக்த_பானுதாசர்
பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைடன் என்னுமிடத்தில் 1370- ல் பிறந்தவர். இதற்கு பிரதிஷ்டாபுரம் என்று பெயர். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார், எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டி இருந்தது. ஒரு
நாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி 2 நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப் பிரகாசமாக வந்த ஒரு பெரியவர், சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு 5 நாட்கள் பால் அருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத் பக்தி, பஜனை,
ப்ரவசனம் என்று நாட்கள் நகர்ந்தன. இளைஞரானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரம் ஆனது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்துவிட்டுத் திரும்பிய அவர், அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே, சக வியாபாரிகளிடம் உடமைகளை
அக்ஷதை (அட்சதை) மகிமை
க்ஷதம் என்ற வார்த்தைக்கு குத்துவது அல்லது இடிப்பது என்று பொருள். அக்ஷதம் என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி அக்ஷதை எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு அக்ஷதை தயாரிப்பது உசிதமல்ல. பூமிக்கு மேல் விளையும்
பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய். சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும்
என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப் படுகிறது. அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் சொல்கிறார்கள். இப்படி
#திருக்கடையூர்_அபிராமி_கோவிலின்_ஹோமங்கமள்_அவற்றின்_பலன்கள்:
அறுபதாம் கல்யாணம் என்ற உடனே நம் எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது திருக்கடையூர்தான். சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் தை அமாவாசையை முழு பௌர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச்
செய்த தலம். எமன் வீசிய பாசக்கயிற்றின் தடத்தை இன்றும் அமிர்தகடேஸ்வரர் மேல் பால் அபிஷேகம் செய்யும் போது பார்க்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஹோமங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை.
உக்ரரத சாந்தி பூஜைகள்
59 முடிந்து 60
வயது ஆரம்பம்.
ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் 120 ஆகும். இதில் பாதிவயதான 60 வயதில்தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்கள் ஆயுளை நீட்டிக் கொள்வார்கள்.
#புன்னைநல்லூர்_கோதண்டராமர்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். மூலவர்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் சுக்றிவன் விக்ரகங்கள்
சாளக்கிராமக் கல்லால் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், புனிதமான சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட அனைத்து மூலவர்களையும் கொண்ட ஒரே ராமர் கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம
கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். சாளக்கிராமம் என்பது நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் சம்பந்தியானார்கள். அப்போது, நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு
ஸ்ரீமதே ஸ்ரீவன் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் (46வது அழகியசிங்கர்)
ஜூன் 23, 1955, மன்மத வருஷம் ஆனி மாதம், திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகத்தில் கௌண்டினிய கோத்திரத்தைச் சேர்ந்த வைதீக குடும்பத்தில் விசேஷமான நாளாகும். பக்தவத்சல ஆச்சாரியார் மற்றும் ஸ்ரீமதி ராஜலட்சுமி
ஆகியோருக்கு 4வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரங்கராஜன் என்று பெயர் சூட்டப்பட்டு உரிய நேரத்தில் முறையான வேத சம்ஸ்காரம் செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் தந்தை ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (பேஷ்கர்) இருந்தார். குழந்தை தாய்வழி
மற்றும் தந்தைவழி வைதீகர்களின் அசாதாரண பரம்பரையைச் சேர்ந்தது. தந்தை வழி தாத்தா, திருமக்கோட்டை இச்சம்பாடி கிருஷ்ணமாச்சாரியார் புகழ்பெற்ற ப்ருஹஸ்பதி & பிரயோகங்களில் முன்னணி அதிகாரியாக இருந்தார். தாய்வழி தாத்தா பருத்திச்சேரி வெங்கடாச்சாரியார் 40 மற்றும் 41 ஆம் அழகியசிங்கர் காலத்தில்
#பூரி_ஜெகன்னாதர்_கோவில்_மகாபிரசாதம்
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை 7 ஜூலை 2024
ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம் எனவே இங்கு மதிய உணவு மிகவும் தடபுடலான விருந்தாகசமைக்கப்
படும். இங்கு சமைக்கும் முறையே வித்தியாசமானது. பூரி ஜெகநாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. அத்துடன் பாரம்பரியம் மிக்கது. கோயிலின் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது. இங்கு 56 வகையான சைவ உணவுகள் சமைக்கப் படுகின்றன. கங்கா, யமுனா
எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு மண் பானைகளில் சமையல் செய்யப்படுகிறது. இங்கு விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக 7 மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. அப்படி