சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துவந்துள்ளனர்.
2
நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து *குஜிலியம்பாறை* என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் *ராமகிரி*
என்ற ஊர் உள்ளது.
3
இங்கு *1,200 ஆண்டுகள்* பழமை வாய்ந்த *ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள்* கோயில் உள்ளது.
4
இங்கே பெருமாள், நரசிம்மர் என்ற பெயரில் இருந்தாலும், பெருமாளின் நரசிம்ம வடிவம் இங்கே கிடையாது. மூலஸ்தானத்தில், சங்கு சக்கரத்துடன் அபய வரத முத்திரைகள் காட்டியபடி, ஸ்வாமி திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.
5
நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், ஸ்ரீநரசிம்மர் ஸ்வாமி கிருபையால் திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.
திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்மர் மூர்த்தியை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்.
6
தனி சன்னதியிலுள்ள *கமலவல்லி தாயாரை* வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
7
*பிரகலாதன்* கதை அனைவரும் அறிந்ததே.
இரண்யனை வதம் செய்த பிறகும் நரசிம்மர் உக்ரம்(கோபம்) தணியவில்லை. நரசிம்மர் ஸ்வாமியின் கோபத்தை தணிக்க அவரை குடும்பஸ்தராக்க வேண்டும் என்பதால் அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி இரு தேவிகளையும் திருக்கல்யாணம் செய்து வைத்தார்கள்,
8
சிவபெருமானும், பிரம்ம தேவரும். அதன்படி, நரசிம்மரின் ஆவேசம் தணிந்து திருக்கல்யாணம் நடந்த இடம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமகிரி என்ற இந்த இடத்தில்தான்.
9
இத்திருமண விழாவை சிவபெருமான், ஈஸ்வரி, பிரம்ம தேவர், சரஸ்வதி, மற்றும் அனைத்து தேவர்கள், ரிஷிகள் அனைவரும் வந்திருந்து 15 நாள் விழாவாக கொண்டாடினர். ஆஞ்சநேயர் ஸ்வாமி, கல்யாண விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 4 திசைகளிலும் ஓடி, ஓடி வரவேற்பு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
10
இங்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத *ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாளாக* காட்சி தருகிறார்.
மேலும், சன்னதி முன் மண்டபத்தில் சிவபெருமானின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இக்கோவிலில் ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் என நம் இரு தெய்வங்களின் தரிசனம் பெற்று மகிழலாம்.
11
இக்கோவில் குடகனாற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
இங்கு ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.
12
*துர்க்கை அம்மன்*
ஸ்ரீ தேவியும், பூதேவியும்
பெருமாளின் தங்கையான *ஸ்ரீ துர்கா தேவியிடம்* சென்று உங்கள் சகோதரரின் கோபம் தணிந்தாலும் நீங்களும் எங்களுடன் இங்கு எழுந்தருளவேண்டும்
என்று கேட்டுக் கொண்டனர்.
13
ஸ்ரீதேவி , பூதேவி தாயார் களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீ துர்கா தேவியும் தன் சகோதரரான ஸ்ரீ நரசிம்ம பெருமாள் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திலேயே
*விஷ்ணு துர்க்கை அம்மனாக* தங்கி விட்டாள்.
14
விஷ்ணு துர்க்கையை ராகு காலத்தில் விளக்கேற்றி வணங்கினால் செய்த பாவங்கள்,
தோஷங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும்.
15
*வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி*
வாசலில் தெற்கு நோக்கி உள்ள ஆஞ்சநேயர் ஸ்வாமியை வடை மாலை, துளசி மாலை சாற்றி வழிபட்டால் எக்காரியமும் தடையின்றி வெற்றியடையும்.
16
இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர் அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.
17
இந்த ஆலயத்தில் நாம் வந்து பெருமாளை சேவித்தாலே போதும். கல்யாண நரசிங்க பெருமாளின் கருணையால், அருளாசியால், தடைபடும் சுபகாரியங்கள் அனைத்தும் இனிதே நடக்கிறது
என்கிறார்கள் பக்தர்கள். 🙏
மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்தார்...
அதற்காக வீட்டில் 12 டாக்டர்களை வேலைக்கு அமர்த்தினார். தினமும் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவர்கள் ஜாக்சனைப் பரிசோதிப்பார்கள்...
கண்டிப்பாக பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கான உணவு வழங்கப்படும்...
தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்காணிக்க இன்னொரு 15 நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்...
ஆக்சிஜன் லெவலை சமன்படுத்திக் கூடிய டெக்னாலஜி அவர் படுக்கையில் இருந்தது...
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா... தேவைப்பட்டால் உடனடியாக உறுப்புகளை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆர்கன் டோனர்ஸ் தயாராக வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த டோனர்களுக்கான தினப்படி செலவுத் தொகையை ஜாக்சனே வழங்கி வந்தார்...
சென்னை-வேளச்சேரி பகுதியில், மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். மற்றொன்று, யோக நரசிம்மர் கோயில், மூன்றாவது, பிடாரி செல்லியம்மன் கோயில்.
1
இந்த கோயிலை பற்றி இந்த
பதிவு..
இந்த மூன்று கோயில்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
மூன்று கோயில்களும் அருகருகே இருப்பதும், ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன.
2
வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன், ``அருள் மிகு பிடாரி செல்லியம்மன்’’ திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்தமாதர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
சாஸ்திரத்தின் படி, கன்று குடித்த பின்னர், அதன் வாய் எச்சில் பசுவின் மடியில் (காயாமல்) இருக்கும் முன்னரே கறக்கப்படும் பால் புனிதமானது. இறைவனின் திருமஞ்சனத்திற்கு இந்த பால் உகந்தது. எனவே, "கன்றின்" எச்சில் புனிதமானது.
வாந்தி பரிசுத்தம் (தேன்):
தேன் என்பது தேனீ உண்ட உணவு, பாதி செரித்த பிறகு அது உமிழும் மீதம் (அதாவது வாந்தி). இதுவும் பூஜைக்கு உகந்ததே.
தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்.
கோடை காலத்தையும், கோடை கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.
வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால்....
ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது.
இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.
இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
*தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையில் *தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி கோயில்* உள்ளது.
இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற, சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும்.
1
இக்கோயிலின் இடப்புறத்தில், தஞ்சைநாயக்கமன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது.
2
களஞ்சியத்தின் உள்பகுதி மற்றும் வெளிபகுதி பூசப்படவில்லை என்பது இந்த களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. இந்த அதிசய குதிர் 36 அடி உயரம் உள்ளது. இதன் சுற்றளவு 80 அடியாகும். களிமண் மூலம் செய்யப்பட்ட 5 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களை சுட்டு சுற்றுச்சுவரை கட்டி உள்ளனர்.