வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார் விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார் கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார் அகலிகா கல்லின் மேல் அவர் பாத துளி பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை
#அத்ரி_மகரிஷியின் அயோத்யா காண்டம்
ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில்
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில், அதை
கைகேயி புத்திக்குள் திணித்தாள்
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள்
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள்
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால்
உன் ராமன் காடாள வேண்டும்
என் பரதன் நாடாள வேண்டும்
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார்
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார்
#பரத்வாஜ_மகரிஷியின் ஆரண்ய காண்டம்
தந்தை சொல் காக்க மனம் உகந்தார்
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார்
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார்
வேடன் குகனின் நட்பை அடைந்தார் மரவுரி சடை முனி போல தரித்தார்
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார்
காண வந்த பரதனை அணைத்தார் தந்தைக்கான
ஈமக்கடன் முடித்தார்
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார்
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார்
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும்
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும்
அபயம் என்றார்
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார்
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார்
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார்
வானர தலைவன் வாலியை வதம் செய்தார்
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார்
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார்
#கௌதம_மகரிஷியின் சுந்தர காண்டம்
ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார்
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார்
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார்
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார்
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார்
இலங்கையை நெருப்பால் எரித்தார்
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக
பறந்தார்
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார்
#ஜமதக்னி_மகரிஷியின் யுத்த காண்டம்
ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார்
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார்
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார்
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார்
இலங்கை
அரசை விபீஷணன் தலையில் முடிந்தார்
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார்
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார்
#வசிஷ்ட_மகரிஷியின் உத்தர காண்டம்
சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார்
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார்
அவர் ஆட்சியில்
அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார்
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார்
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார்
தம் புதல்வரான லவ குசரை
அவற்றுக்கு அரசனக்கினார்
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார்
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார்
#பாராயண_பலன்
அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர்
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர்
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர்
தேவர்கள் விஷ்ணுவை
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்