*திருப்பிரையார் ராமர் கோவில்*
*கேரளா*

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது.
இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.
*ஆலய அமைப்பு*

திருப்பிரையார் ராமர் கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான ராமர் திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ராமருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன்? என்பதற்கு இங்கிருப்பவர்கள் ஒரு விளக்கம் சொல்கின்றனர்.
கேரளத்தில் புகழ்பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள், ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார்.

அப்போது அவர் ராமர் சன்னிதி முன்பாக நின்றிருந்த போது, கோவிலின் மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் இங்கு கோவில் கொண்டிருக்கும் ராமரை வழிபடுவதற்காக வந்ததைக் கண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், அவர்களிருவரும் திரும்பிச் செல்ல முடியாதபடி கோவிலின் மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம்.
அதன் பின்னர் ராமருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இருக்கச் செய்துவிட்டுச் சென்றாராம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆலயத்தின் மேற்கு வாசல் இன்றும் மூடியே கிடக்கிறது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, தெற்கு வாசலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றின் தென்பகுதியில் சாஸ்தா, வடக்குப் பகுதியில் கோசாலை கிருஷ்ணர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோவிலின் கிழக்குப் பகுதியில் திருப்பிரையாறு எனும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
*விழாக்கள்* 

இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா முக்கியமானதாகும்.

இத்திருவிழா காலத்தில், இக்கோவிலில் ‘ஆன்கியக் கூத்து’ எனும் இசை நாடகம் நடத்தப்படுகிறது.
கார்த்திகை ஏகாதசிக்கு இரு வாரங்களுக்கு முன்பிருந்தே, தினமும் கோவில் முழுக்க அதிகமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதனை ‘நிறை மாலை’ என்று அழைக்கின்றனர். அவ்வேளையில் கோவிலில் லட்சதீபம் ஏற்றுகிறார்கள்.
பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் கொண்ட திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. பங்குனி பூரம் நாளில் சிறப்பு ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவடைகிறது.
இது போல் தசமி நாளில் சாஸ்தாவும், ஏகாதசி நாளில் ராமரும் கோவிலில் இருந்து ஊர்வலமாகச் செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் யானைகளின் அணிவகுப்பும் உண்டு.
ஆலயம் அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்படுகின்றன.
தினமும் மூன்று வேளைகளில், கருவறையில் இருக்கும் மூலவரைப் போன்ற உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலம் நடக்கிறது.

நாலம்பலப் புனிதப் பயணத்தின் முதல் வழிபாடாக இக்கோவிலின் அதிகாலை வழிபாடு அமைந்திருப்பதால், அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கோவிலின் கிழக்கே ஓடிக்கொண்டிருக்கும் திருப்பிரையாறு எனும் ஆற்றில், அதிக அளவில் மீன்கள் உள்ளன.

இந்த மீன்களுக்கு அவல், செவ்வாழை போன்ற உணவுப் பொருட்களைப் போட்டுப் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இதனை ‘மீனூட்டு’ என்று அழைக்கின்றனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த ராமர் மற்றும் அவரது சகோதரர்களின் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை
நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் விதமாக, பக்தர்கள் இந்த ‘மீனூட்டு’ நடைமுறையைச் செயல்படுத்தி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
*ஆஞ்சநேயர் மண்டபம்*

இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னிதி எதுவும் இல்லை. சீதையைத் தேடி இலங்கை சென்று திரும்பிய ஆஞ்ச நேயர், இந்தக் கோவில் இருக்கும் இடத்தில்தான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் சொன்னதாகச் கூறப்படுகிறது.
இதனால், இக்கோவில் கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் வழிபாட்டு மண்டபத்தில் ஆஞ்சநேயர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த மண்டபத்தை ‘ஆஞ்சநேயர் மண்டபம்’ என்றே அழைக்கின்றனர்.
*வெடி வழிபாடு*

இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, வெடி வழிபாடு. சாஸ்தா சன்னிதிக்கு அருகில் குழாய் ஒன்றில் வெடி
மருந்திட்டு, அதை வெடிக்கச் செய்து வழிபடுகின்றனர்.
ஒரு வெடியில் இருந்து ஆயிரம் வெடி வரை, அவரவர் வேண்டு தலுக்கேற்ப வெடிக்கச் செய்யப்படுகிறது. வெடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த வெடி வழிபாடு முக்கியத்துவம் பெறுவதற்கு அனுமன்தான் காரணம் என்கின்றனர்.
ராமனின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து, ராமனிடம், ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வெடியைப் போட்டுச் சொன்னது போல் சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம்.
அதன்படி, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காக, பக்தர்களும் அதிர் வெடி போட்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்கின்றனர்.
வெடி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதலைக் கேட்கும் இறைவன், அவர்கள் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
*அமைவிடம்*

திருச்சூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூர் மற்றும் குருவாயூருக்கு இடையில் திருப்பிரையார் ராமர் கோவில் அமைந்திருக்கிறது.
இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.🙏

#ஜெய்_ஸ்ரீராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 30
பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்.

ராமனை பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது நீலகண்டனால் உமையம் மைக்கு எடுத்துரைக்கப்பட்டதாகும். Image
அதை உச்சாடனம் செய்வதால் ஜெயமேற்படும், மங்களம் உண்டாகும், பிறவி பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம்.
அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
Read 18 tweets
Mar 30
*திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயில்*

சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது. Image
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
Read 11 tweets
Mar 30
*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்

‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார். Image
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
Read 23 tweets
Mar 30
*கம்பனையும் ராமனையும் பாடிய கண்ணதாசன்*

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?

கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். Image
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;
Read 64 tweets
Mar 30
*ராமர் பிறந்த அயோத்தியின் சிறப்பு*

*மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது.*

இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன.

வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. Image
*அவற்றில முக்கியமானது அயோத்தி.மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி.*

எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும்
*அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியது இருந்தது.*
Read 16 tweets
Mar 30
*ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு*.

1. ஏக (1) பத்தினி விரதன்

2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்

3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்

4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன் Image
5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்

6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
7 ஸ்ரீ ராமாயண ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.

8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(