அன்பெழில் Profile picture
Mar 30 11 tweets 5 min read Twitter logo Read on Twitter
#ஶ்ரீராமநவமி_ஸ்பெஷல் #வடுவூர்கோதண்டராமர்
ஶ்ரீராமநவமியை ஒட்டி இன்று தொடங்கி 10 நாட்கள் இங்கு பிரம்மோத்ஸவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடுவூர் #தெட்சிண_அயோத்தி என்னும் பெருமையை உடையது. முன்மண்டபத்தில் ருக்மணி சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் பிரதிஷ்டைக்கு
முன்பு இவரே மூலஸ்தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் #புஷ்பக_விமானம் எனப்படுகிறது. ராமரிடம் வேண்டிக் கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள்
பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்கு பக்தர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்து
இருக்கிறார். ராமரின் நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் நடக்கிறது. அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார். ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவத்தில் 7ஆம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. 5ஆம் நாளில், இவர் நாச்சியார் திருக்கோலத்தில்
எழுந்தருளுவது விசேஷம். #அட்சயதிரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.
வனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமர், மறுநாள் அவர்களைச்
சந்திப்பதாக சொன்னார். தன் உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அதைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், "ராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக் கொள்ள
விரும்புகிறோம்” என்றனர்.
ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, "அப்படியா! அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள்போலும்!'' என்றார். விக்ரகத்தின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அதைத் தரும்படி கேட்டனர். அதன்படி ராமர் அவர்களிடம்
விக்ரகத்தை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த விக்ரகத்தைப் பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் விக்ரகம் வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இவற்றை தலைஞாயிறு
என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டு வந்த போது, ஒரு நாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்ரகங்களை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச்
சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே விக்ரகங்களௌ பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள் விடுத்தனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு
8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
கண்டிப்பாக சென்று சேவிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம் இது.
ஜெய் ஶ்ரீராம்
ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஜெய்
சர்வம் ஸ்ரிகிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 1
#நம்மை_திருத்தும்_நவக்கிரகங்கள்
எவர் ஒருவர் தங்கள் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய Image
ஸ்தானத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றால் திருமணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்
கட்டாயம் அவரின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவர். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை
Read 12 tweets
Apr 1
#தியாகராஜரும்_ஶ்ரீராமரும்
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி. அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலில் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''ஸ்வாமி, Image
நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு, காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும்” மெல்லிய குரலில், பேசினார் அவர். வயதான
அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவற்றை தாண்டி அம்மூவரின் முகலாவண்யமும் தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதான
Read 16 tweets
Mar 31
#சீதாராம_சாம்ராஜ்ஜிய_பட்டாபிஷேகம்
இலங்கையில் இருந்து திரும்பிய அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், "தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான Image
வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக" என்றார். பிறகு பரதன் அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், "பரதரே, முடி சூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது”எனக் கேட்டான். பரதன், “ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை
கொண்டு வரத்தான் தாமதத்திற்கு காரணம்.”என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான். அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, "குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்.
Read 24 tweets
Mar 31
#நற்சிந்தனை ஒரு வியாபாரி, தரமான குதிரை விற்பனைக்குத் தயாராக இருப்பதை சந்தையில் பார்க்க நேரிட்டது. வாங்க முற்படுகையில் கடுமையான பேரம் ஆரம்பித்தது. தன் திறமையை பயன்படுத்தி, தான் முடிவு செய்த நல்ல விலைக்கே குதிரையை விற்றார் அதன் சொந்தக்காரர். குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு Image
வந்தவுடன், அந்த வியாபாரி தன் பணியாளரை அழைத்து, குதிரை மேலுள்ள சேணத்தை எடுக்கச் சொன்னார். அந்த கனமான சேணத்தை தான் ஒருவரே எடுப்பது, அந்த பணியாளருக்கு மிக கஷ்டமாக இருந்தது. சேணத்திற்கு அடியில், ஒளித்து வைக்கப் பட்ட ஒரு சிறிய வெல்வெட் பை ஒன்றை அந்தப் பணியாளர் கண்டு பிடித்தார். Image
அதைத் திறந்து பார்க்கும் போது, பை நிறையை விலைமதிப்பற்ற நகைகள் இருப்பதை கண்டுபிடித்தார். அந்தப் பணியாளர் மிகவும் உற்சாகம் அடைந்தார்! “எஜமானரே, நீங்கள் குதிரை வாங்கி வந்தீர்கள். ஆனால், அதனுடன் இலவசமாக வந்திருக்கும் இவற்றைப் பாருங்கள்!” என்றார்.
பணியாளரின் உள்ளங்கையில்
Read 9 tweets
Mar 31
#மகாபெரியவா
மகா பெரியவா தர்சன அனுபவங்களில் இருந்து:

“எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல இருக்கிற விஸ்வநாதன் பொண்ணு அபர்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு தெரியறது. எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல வேலை பார்க்கிற வைத்தியநாதன் பையன் ஸ்ரீனிவாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல தெரியறது. Image
இப்படி இதெல்லாம் எனக்கு தெரிய வரும் போது சதாசர்வகாலம் நானே கெதினு இருக்கிற என் குழந்தளேக்கு என்ன தேவைபடறது என்ன நடந்துன்டு இருக்கு நல்லது கெட்டது நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா. என் குழந்தேளுக்கு ஒரு கஷ்டம்னா கை விட்டருவேனோ கல்யாணம் ஆகல, குழந்தை இல்ல, வேலை இல்ல, நல்ல மார்க்
வரனும், நல்ல வரன் வரனும், சொத்து பிரச்சனை, பணம் பிரச்சனை, வறுமைல இருக்கேன், இப்படி எதாவது ஒன்ன தலைல போட்டுன்டு ஓடி வரேளோ இல்லியோ அவா அவா தேவைக்கு நன்னா பிராத்தனை பண்ணின்டு நமஸ்காரம் பண்ணி பாரத்தை என் தலைமேல போட்டுரேள். நான் அதை நன்னா நடத்தி தரவேண்டாமோ நிச்சயம் நடத்தி தருவேன்
Read 22 tweets
Mar 30
#chardham சார்தாம் எனப்படும் நான்கு முக்கியமான திருத்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் பூரி ஜெகந்நாதரும், வடக்கில் ஸ்ரீபத்ரி நாராயணரும், மேற்கில் துவாரகையில் துவாரகாநாதரும் இந்திய தீபகற்பத்தை நான்கு திசைகளிலும் இருந்து பாதுகாக்கின்றனர் என்று புராணங்களும் Image
இதிகாசங்களும் தெரிவிக்கும் செய்தி. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம் பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றாவது மிக சிறப்பானதாகும். இத்தகைய ராமநாதசுவாமி கோவிலின் க்ஷேத்திர பாலகாரகர்களாக #சேதுமாதவ பெருமாளும் பாதாள பைரவரும் இருக்கின்றனர். காசியில் பிந்து மாதவராகவும், Image
அலகாபாத்தில் வேணி மாதவராகவும் (வேணி என்றால் தலை முடி இதனால் தான் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வேணி தானம் செய்ய வேண்டும் அதாவது நமது அகந்தையை இறக்கி விடுகிறோம் என அர்த்தம்), ஆந்திர பிரதேசத்தில் உள்ள பித்தாபுரத்தில் குந்தி மாதவராகவும், ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும் Image
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(