M.SivaRajan Profile picture
Mar 30 7 tweets 3 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீ_ராம_நவமி

சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீராமன் அவதரித்தார்.

அந்த வகையில் நவமி திதியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. Image
*ராம நவமி விரத முறை :*

ராமனை நினைத்து, அவனின் அருளைப் பெறும் வண்ணம் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து ராமனை பூஜித்து வழிபடலாம்.

ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது அவசியம்.
ஸ்ரீ ராமருடன் சேர்ந்து, சீதாதேவி, லட்சுமணன், ராம பக்தரும் போர்ப் படைத் தலைமைப் பொறுப்பாளர் அனுமன் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

ஆலயத்திற்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தால்,

நாம் வீட்டிலேயே ராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெறலாம்.
*வீட்டில் ராம நவமியை கொண்டாடும் முறை:*

1. ராமபிரானின் சிலை வீட்டில் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து விட்டு, பின்னர் அழகாக அலங்கரித்து மலர்களை சூடுங்கள்.
2. உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்களை எல்லாம் உச்சரிக்கவும்.

எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற எளிய மந்திரத்தை உச்சரித்து இறை அருளைப் பெற்றிடுங்கள்.
3. ராமாயண கதைகளைப் படிக்கலாம், ராம கீர்த்தனைகளைப் பாடலாம்.

4. ராமனின் கீர்த்தனைகள், கதைகளைப் படிக்கும் போது அருகில் ஒரு சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள்.

அங்கே அனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார், நமக்கு ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.
5. ராமனின் சிறிய சிலை இருந்தால், அதை தொட்டிலில் போட்டு ஆட்டலாம்.

ராமரின் பெருமையை உணர்த்தும் ராமாயணம் படிக்கலாம்.

#ஸ்ரீ_ராம_நவமி

#ஸ்ரீ_ராம_நவமி_சிறப்புகள்

#ஸ்ரீ_ராம_நவமி_மகிமைகள்

#ஸ்ரீ_ராம_நவமி_விரத_முறை

#ஜெய்_ஸ்ரீராம்

#ஜெய்_சீதாராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 2
#குளியல்_பரிகாரங்கள்

நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்கள்

தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த கிரகத்தின் தோஷங்களை நீக்கிக் கொள்ள முடியும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். Image
சூரிய தோஷம் :

குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும்.

நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும்.

அதன் பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம்.

இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திர தோஷம் :

குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
Read 12 tweets
Apr 1
#பஞ்ச_சம்ஸ்காரம்

பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.

1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம். Image
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல்
#புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.

3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல்
#நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
Read 13 tweets
Mar 31
#அதிர்ஷ்ட_தேவி_வழிபாடு

பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்த வேண்டும். Image
அதிர்ஷ்ட தேவி புகைப்படம் இல்லை என்றால் காமாட்சி அம்மன் அல்லது மஹாலக்ஷ்மி புகைப்படம் வைத்து பூஜை செய்யலாம்.

தவறு ஏதும் இல்லை.

நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூற வேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
Read 13 tweets
Mar 30
#16_வார்த்தை_ராமாயணம்

"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்

மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்

இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்

துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார். Image
விளக்கம்:

1. பிறந்தார்:

ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்:

தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது.

3.கற்றார்:

வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:

வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்:

ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர் - சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
Read 12 tweets
Mar 29
#சிங்கீஸ்வரர்

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

ஒரே கோயிலில் பல அதிசயங்களைக் காண வேண்டும் என்று விருப்பினால் நீங்கள் இந்த ஆலயத்துக்குத் தான் வரவேண்டும்.

நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர்.
பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம்.

அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு மப்பேடு’ என்று மருவியதாகச் செல்வார்கள்.
வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள்.

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறது புராணம்.
Read 9 tweets
Mar 13
#புஷ்பங்கள்

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;

புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.

வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,

சிவந்தவை ரஜசம்,

கருநிற புஷ்பங்கள் தாமசம்,

மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(