வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டுத் துவக்கம் இன்று. இதனைத் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தற்போது இணைந்து கொண்டாடவிருக்கின்றன. காங்கிரஸ்காரராக பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை கேரள தலைவர்களுடன் பெரியார் முன்னின்று நடத்தினார். (1/19)
இந்தப் போராட்டம் குறித்து மிக விரிவான ஒரு நூலை, "வைக்கம் போராட்டம்" என்ற பெயரில் பழ. அதியமான் எழுதியிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்திலிருந்து பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன:
(2/19)
1. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோராகக் கருதப்பட்ட ஈழவர், புலையர் ஆகியோர் நடக்கவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற மதத்தினர் செல்லலாம். (3/19)
2. மார்ச் 30ஆம் தேதி கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் ஈழவரையும் புலையரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்போவதாக கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி. கேசவ மேனன் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். (4/19)
3. மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். காவல்துறை தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. குஞ்சப்பா, பாஹுலயன் ஆகிய இருவரும் தடையை மீறி அந்தத் தெருவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது. (5/19)
4. இந்தப் போராட்டத்தை டி.கே. மாதவன் துவங்கி நடத்த, கே.பி. கேசவமேனன் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். வைதீகர்கள் காந்தியிடம் முறையிட்டதால் சில நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு ஏப்ரல் 7 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. (6/19)
பல தலைவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நிலையில்தான் பெரியார், வைக்கத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தந்திகள் அனுப்பப்பட்டன. 5. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் ஏன் அழைக்கப்பட்டார் என்பது இதில் முக்கியமான கேள்வி. (7/19)
"பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள். (8/19)
ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்" என்கிறார் வைக்கம் போராட்டம் நூலாசிரியர் பழ. அதியமான். ஆனால் வெளியிலிருந்து ஆட்கள் செல்வது ராஜாஜிக்கு உடன்பாடானதாக இல்லை. (9/19)
6. பெரியாரின் மனைவி நாகம்மையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சத்திகிரகம் செய்தார். பெரியாரின் உரைகளும் ஏனைய நடவடிக்கைகளும் வைக்கத்தில் அமைதியின்மைக்குக் காரணமாகக்கூடும் எனக் கருதுவதால், அவர் கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. (10/19)
7. ஆனால், பெரியார் தடையை மீறியதால் மே மாதம் ஒரு முறையும் ஜூலை மாதம் ஒரு முறையும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதம் 18ஆம் தேதி பெரியாருக்கு 4 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் பேசுவதற்கும் பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. (11/19)
8. போராட்டம் துவங்கி ஒரு ஆண்டு நெருங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகாத்மா காந்தி வைக்கம் வந்தார். சத்தியாகிரகிகள், வைதீகர், மகாராணி, நாராயண குரு, தேவஸ்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். பெரியாருடனும் பேசினார். (12/19)
9. ஜூன் மாத வாக்கில் கோவிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் மூன்றில் தீண்டாதார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பெரியார் கோவில் நுழைவை வலியுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. மக்களின் மனம் தயாராகும்வரை அதனை வலியுறுத்தப்போவதில்லை எனப் பெரியார் கூறினார். (13/19)
10. கிழக்குத் தெருவைத் தவிர, பிற தெருக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில்,போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த வெற்றிவிழாவில் கோவில் நுழைவையே இறுதி லட்சியமாக பெரியார் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். (14/19)
11. இந்தப் போராட்டத்தில் பெரியார் இரு முறை சிறை சென்றார். வைக்கத்தில் இருந்த 141 நாட்களில் சிறையில் மட்டும் 74 நாட்களைக் கழித்தார். காந்தி ஒரே ஒரு முறை மட்டும் வைக்கத்திற்கு வந்தார். 12. பிற்காலத்தில், வைக்கம் போராட்ட காலத்தில் காந்தியும் ராஜாஜியும்... (15/19)
நடந்துகொண்ட முறை குறித்து கடுமையான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தார். சத்யாகிரகத்தை பல்வேறு வகைகளில் காந்தி முடக்க முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார். 13. இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் பழ. அதியமான். (16/19)
"ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். (17/19)
பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்" என்கிறார் அவர்.
விரிவான கட்டுரைக்கு: bbc.com/tamil/articles…
பழ அதியமான் பேட்டிக்கு: bbc.com/tamil/india-51… (18/19)
வைக்கம் போராட்டம் குறித்து விரிவாக அறிய படிக்க வேண்டிய நூல், "வைக்கம் போராட்டம்". ஆசிரியர்: பழ. அதியமான். பக்கங்கள்: 646; விலை: ரூ. 325/-. வெளியீடு: காலச்சுவடு. (19/19)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிந்துச் சமவெளி குறித்த புதிய புத்தகமான Ahimsa: 100 Reflections on the Harappan Civilization குறித்த முந்தைய பதிவில், 25 தொடர் பதிவுகள் இருந்தாலும், 15க்கு மேல் அவை பதிவாகவில்லை. அதன் தொடர்ச்சியை இன்னொரு தொடர் பதிவாக இடுகிறேன்.
(1/15)
வன்முறை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு நாகரீகம் நிலைத்திருந்தது எப்படி? "ஒட்டுமொத்த நாகரீகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
(2/15)
இவர்கள் வன்முறையை நாடாத, சமூக ரீதியான கட்டுப்பாடுகளில் சிக்காதவர்களாக இருந்திருக்கலாம்" என்கிறார் தேவ்தத்.
சுமேரிய நாகரீகத்திலும் எகிப்திய நாகரீகத்திலும் செல்வத்தைக் குவிப்பதன் மூலமாக அதிகாரம் கிடைத்தது. ஹரப்பாவில், அவற்றைத் துறப்பதன் மூலம் ஒரு அதிகாரம் கிடைத்திருக்கலாம்.
(3/15)
4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்களும் சுமேரியர்களும் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன.
(1/25)
அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பெர்ஷிய வளைகுடா வழியாக, எகிப்தையும் மெசபடோமியாவின் கோவில்களையும் சென்றடைந்ததற்கு ஒரே காரணம்தான் இருந்தது. அது ஹரப்பா நாகரீகம்.
ஹரப்பா நாகரீகத்தால் இதை எப்படி சாதிக்க முடிந்தது?
(2/25)
அதற்குக் காரணம், அந்த நாகரீகம் போர்த் தளபதிகளாலோ, மன்னர்களாலோ வழிநடத்தப்பட்ட ஒரு சமூகமல்ல; மாறாக செல்வச் செழிப்பை வெளிக்காட்டாத, கட்டுப்பாடான வர்த்தகர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சமூகம் என்கிறது சமீபத்தில் வெளிவந்த Ahimsa: 100 Reflections on the Harappan Civilization நூல்.
(3/25)
நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளிவந்த பழங்கால Docudramaகளில், அலெக்ஸாண்டர்: தி மேக்கிங் ஆஃப் எ காட், குயின் க்ளியோபாட்ரா ஆகியவை மிக முக்கியமானவை. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் மற்றொரு docudrama தொடர்தான் Testament: The Story of Moses.
(1/8)
பாரோக்கள் ஆளும் எகிப்தில் துவங்குகிறது கதை. மோசஸ் பிறந்தது, பாரோக்களின் அரண்மனையில் வளர்ந்தது, பிறகு தனது எகிப்தியர் ஒருவனைக் கொலைசெய்ததால் தேடப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேறி மீடியான் என்ற இடத்தில் வசிப்பது, அங்கே சினாய் மலையில் கடவுளைச் சந்திப்பது,...
(2/8)
கடவுளின் ஆணையால் பாரோவிடம் அடிமையாக உள்ள தனது மக்களை விடுவிப்பது என்ற கதையை மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆபிரஹாமிய மதங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவர் மோசஸ். டோரா, விவிலியம், குரான் ஆகிய மூன்று புனித நூல்களிலும் மோசஸின் கதை இருக்கிறது.
(3/8)
சிந்துச் சமவெளி குறியீடுகள் சொல்வது என்ன? விடுபடும் புதிர்
-------------------------------
சிந்துச் சமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருந்த நிலையில், ஆய்வாளர் ஒருவர் அந்த குறியீடுகளைப் படித்துள்ளார்.
(1/10)
சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளைப் பொறுத்தவரை அவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இவை வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.
(2/10)
இது தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை 'Semantic scope of Indus inscriptions comprising taxation, trade and craft licensing, commodity control and access control: archaeological and script-internal evidence' நேச்சர் குழும இதழில் வெளியாகியுள்ளது.
(3/10)nature.com/articles/s4159…
ஜவஹர்லால் நேரு: இந்திய வானின் துருவ நட்சத்திரம்
---------
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 30 லட்சம் பேரைக் காவுகொண்ட பஞ்சத்தின் நினைவுகூட ஆறவில்லை. 1950. முதல் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தார் முதல் பிரதமர் நேரு.
(1/25)
மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது: 1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1949ல் அமெரிக்காவில் உள்ள...
(2/25)
மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு விஜயம் செய்த நேரு, அதே போன்ற உயர்கல்வி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க நினைத்தார். இதில் மௌலானா ஆஸாத்தின் ஊக்கமும் சேர்ந்துகொள்ள ஐஐடிக்கள் பிறந்தன. நேருவின் காலத்திலேயே காரக்பூர், பம்பாய், மெட்ராஸ், கான்பூர்,...
(3/25)
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது.
(1/9)
இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(2/9)
அந்த அளவுக்கு அந்த பட்ஜெட் பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது.
வி.பி. சிங் தலைமையிலான அரசு, சந்திரசேகர் தலைமையிலான அரசு என இரு அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்திருந்தன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது.
(3/9)