Muralitharan K Profile picture
Mar 30 19 tweets 7 min read Twitter logo Read on Twitter
வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டுத் துவக்கம் இன்று. இதனைத் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தற்போது இணைந்து கொண்டாடவிருக்கின்றன. காங்கிரஸ்காரராக பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை கேரள தலைவர்களுடன் பெரியார் முன்னின்று நடத்தினார். (1/19)
இந்தப் போராட்டம் குறித்து மிக விரிவான ஒரு நூலை, "வைக்கம் போராட்டம்" என்ற பெயரில் பழ. அதியமான் எழுதியிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்திலிருந்து பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன:
(2/19)
1. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோராகக் கருதப்பட்ட ஈழவர், புலையர் ஆகியோர் நடக்கவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற மதத்தினர் செல்லலாம். (3/19)
2. மார்ச் 30ஆம் தேதி கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் ஈழவரையும் புலையரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்போவதாக கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி. கேசவ மேனன் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். (4/19)
3. மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். காவல்துறை தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. குஞ்சப்பா, பாஹுலயன் ஆகிய இருவரும் தடையை மீறி அந்தத் தெருவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது. (5/19)
4. இந்தப் போராட்டத்தை டி.கே. மாதவன் துவங்கி நடத்த, கே.பி. கேசவமேனன் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். வைதீகர்கள் காந்தியிடம் முறையிட்டதால் சில நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு ஏப்ரல் 7 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. (6/19)
பல தலைவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நிலையில்தான் பெரியார், வைக்கத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தந்திகள் அனுப்பப்பட்டன.
5. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் ஏன் அழைக்கப்பட்டார் என்பது இதில் முக்கியமான கேள்வி. (7/19)
"பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள். (8/19)
ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்" என்கிறார் வைக்கம் போராட்டம் நூலாசிரியர் பழ. அதியமான். ஆனால் வெளியிலிருந்து ஆட்கள் செல்வது ராஜாஜிக்கு உடன்பாடானதாக இல்லை. (9/19)
6. பெரியாரின் மனைவி நாகம்மையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சத்திகிரகம் செய்தார். பெரியாரின் உரைகளும் ஏனைய நடவடிக்கைகளும் வைக்கத்தில் அமைதியின்மைக்குக் காரணமாகக்கூடும் எனக் கருதுவதால், அவர் கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. (10/19)
7. ஆனால், பெரியார் தடையை மீறியதால் மே மாதம் ஒரு முறையும் ஜூலை மாதம் ஒரு முறையும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதம் 18ஆம் தேதி பெரியாருக்கு 4 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் பேசுவதற்கும் பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. (11/19)
8. போராட்டம் துவங்கி ஒரு ஆண்டு நெருங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகாத்மா காந்தி வைக்கம் வந்தார். சத்தியாகிரகிகள், வைதீகர், மகாராணி, நாராயண குரு, தேவஸ்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். பெரியாருடனும் பேசினார். (12/19)
9. ஜூன் மாத வாக்கில் கோவிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் மூன்றில் தீண்டாதார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பெரியார் கோவில் நுழைவை வலியுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. மக்களின் மனம் தயாராகும்வரை அதனை வலியுறுத்தப்போவதில்லை எனப் பெரியார் கூறினார். (13/19)
10. கிழக்குத் தெருவைத் தவிர, பிற தெருக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில்,போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த வெற்றிவிழாவில் கோவில் நுழைவையே இறுதி லட்சியமாக பெரியார் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். (14/19)
11. இந்தப் போராட்டத்தில் பெரியார் இரு முறை சிறை சென்றார். வைக்கத்தில் இருந்த 141 நாட்களில் சிறையில் மட்டும் 74 நாட்களைக் கழித்தார். காந்தி ஒரே ஒரு முறை மட்டும் வைக்கத்திற்கு வந்தார்.
12. பிற்காலத்தில், வைக்கம் போராட்ட காலத்தில் காந்தியும் ராஜாஜியும்... (15/19)
நடந்துகொண்ட முறை குறித்து கடுமையான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தார். சத்யாகிரகத்தை பல்வேறு வகைகளில் காந்தி முடக்க முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
13. இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் பழ. அதியமான். (16/19)
"ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். (17/19)
பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்" என்கிறார் அவர்.
விரிவான கட்டுரைக்கு: bbc.com/tamil/articles…
பழ அதியமான் பேட்டிக்கு: bbc.com/tamil/india-51… (18/19)
வைக்கம் போராட்டம் குறித்து விரிவாக அறிய படிக்க வேண்டிய நூல், "வைக்கம் போராட்டம்". ஆசிரியர்: பழ. அதியமான். பக்கங்கள்: 646; விலை: ரூ. 325/-. வெளியீடு: காலச்சுவடு. (19/19)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Muralitharan K

Muralitharan K Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @muralijourno

Mar 31
சில மாத இடைவெளிக்குள் ஜெயமோகன் எழுதிய இரண்டு சிறுகதைகள் படமாக வெளிவந்திருக்கின்றன. ஒன்று கைதிகள், மற்றொன்று துணைவன். கைதிகள் கதை, ரத்த சாட்சியாகவும் துணைவன் விடுதலையாகவும் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த இரு கதைகளையும் படித்துவிட்டு, படத்தைப் பார்த்தால்,... (1/8) Image
நாம் வேறு படத்தைப் பார்க்கிறோமோ என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
விடுதலை படத்தைப் பொறுத்தவரை, 80கள் - 90களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் நிலவிய சூழலை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. வாச்சாத்தியை நினைவுபடுத்தும் இறுதிக் காட்சியையும் கதை நடக்கும் இடமாக... (2/8) Image
தர்மபுரியைப் போன்ற ஒரு மாவட்டம் காட்டப்படுவதையும் விட்டுவிட்டால், இது முழுக்க முழுக்க 80களின் மத்தியில் தமிழ்நாட்டின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிரமாக செயல்பட்ட தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அந்தப் படையைச் சேர்ந்தவர்களை பிடிக்க... (3/8) Image
Read 8 tweets
Mar 31
1980களின் மத்தியில் தமிழ் தேசியக் குழுக்கள் தீவிரமாக இயங்கிய காலகட்டத்தை மையப்படுத்தி வெளிவந்திருக்கிறது வெற்றிமாறனின் விடுதலை.
விடுதலை படத்தின் முதல் காட்சியில் ரயில் விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. (1/10)
இது 1987ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்வுதான்.

1987 காலகட்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பு அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டது. (2/10)
அந்தத் தருணத்தில் இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியப் படை இலங்கைக்குச் செல்லும் எனப் பேச்சுகள் அடிபட்டு வந்தன. ஆகவே, தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ரயில் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் குழு முடிவு செய்தது. (3/10)
Read 10 tweets
Mar 30
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழாவை முன்வைத்து பெரியார் குறித்த பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலை இசையமைத்து, பாடியவர் டி.எம். கிருஷ்ணா. பாடலை எழுதியிருப்பவர் பெருமாள் முருகன். இந்த வீடியோவிற்கு சிறப்பான முன்னுரையை வழங்கியிருக்கிறார் ஆய்வாளர் பழ. அதியமான். (1/5) Image
பாடலைக் கேட்க இந்த லிங்க்கிற்கு செல்லுங்கள்:

பெரியார் - Periyar
--------------
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் தந்தை பெரியார்
சொந்த புத்தியைக் கொண்டே எதையும்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் தந்தை பெரியார் (சிந்திக்கச்)
(2/5) Image
முந்தைய காலத்தின் முறைகளையே
முழுவதும் புரிந்து கொள்வதற்கே
சிந்தையை நன்றாய்த் தெளிவாக்கிச்
சீருடன் பகுத்து ஆராய்ந்து (சிந்திக்கச்)

சாதிப் பிரிவினைகள் ஏன்
சாத்திர விதிமுறைகள் ஏன்
ஆதிக்க நடைமுறை ஏன்
அநீதித் தீண்டாமை ஏன்? (3/5) Image
Read 5 tweets
Mar 27
மருத்துவக் காப்பீடும் அரசு மருத்துவமனைகளும்
-----------------
இன்று The Hinduவின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. பொது சுகாதாரத் துறை காப்பீட்டிற்கு இந்த அளவுக்கு பணம் செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ள சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
1. தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பில் 19,866 மருத்துவர்கள் இருக்கிறார்கள். 38,027 செவிலியர்கள் இருக்கிறார்கள். 60,181 பிற மருத்துவப் பணியாளர்கள் இருக்கிறார்கள்.
38 மருத்துவக் கல்லூரிகளும் 97 ஆயிரம் படுக்கைகளும் உள்ளன. 18 மாவட்ட மருத்துவமனைகள், 278 தாலுகா மருத்துவமனைகள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 462 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 5,76,174 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Read 10 tweets
Mar 26
காந்தி சட்டப்படிப்பு படிக்கவில்லையென ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சொல்வது சரியா?
-----------
ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “மகாத்மா காந்தி எந்தப் பல்கலைக்கழக பட்டமும் பெறவில்லை, சட்டக்கல்வி பட்டம் பெற்றவர் இல்லை” என்று வியாழக்கிழமையன்று தெரிவித்தார். (1/6)
BBCக்கு கிடைத்த ஆவணங்களின்படி, காந்தி லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட சட்டக் கல்லூரியான இன்னர் டெம்பலில் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றார். காந்திக்கு 1891ல் சட்டத்தரணியாக (Bar-at-Law) சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்னர் டெம்பலில் அவர் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணம் உள்ளது. (2/6)
அந்த ஆவணத்தின் எண் 7910. அதில் இன்னர் டெம்பல் சட்டக்கல்லூரியில் அவரது சேர்க்கைக்கான அறிவிப்பு, சேர்க்கைக்கான செலவு, பதிவுக் கட்டணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
லண்டனில் சட்டம் படித்த பிறகு, காந்தி இந்தியாவுக்குத் திரும்பினார். (3/6)
Read 6 tweets
Mar 26
மலையாளத்தில் Purusha Predham என்ற டைட்டிலோடும் ஆங்கிலத்தில் The Male Ghost என்ற பெயரோடும் வெளிவந்திருக்கும் இந்தப் படம், ஒரு அபத்த காமெடி. அல்லது ஒரு neo-noir investigative காமெடியாகவும் பார்க்கலாம்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் செலநல்லூர் காவல்நிலைய எஸ்.ஐ. செபாஸ்டியன். (1/13) Image
இவருக்கு சூப்பர் செபாஸ்டின் என்ற இன்னொரு பெயரும் உண்டு. காரணம், வடிவேலுவைப் போல வெட்டி உதார் விடும் ஆசாமிதான் இந்த செபாஸ்டின். அவருடைய காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் கால்வாயில் ஒரு ஆணின் சடலம் கிடைக்கிறது. ஆள் யார் என அடையாளம் தெரியவில்லை. (2/13) Image
இரண்டு, மூன்று நாட்கள் பார்த்துவிட்டு அதனை ஒரு சுடுகாட்டில் புதைத்துவிடுகிறார்கள். அதற்கு அடுத்த நாள், தன் கணவனைக் காணோம் என்றும், தற்போது புதைக்கப்பட்ட சடலம் அவருடையதுதான் என்றும் அதனைத் தான் பார்க்க வேண்டும் என்றும் கூறி சூசன்னா என்ற பெண் வருகிறாள். (3/13) Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(