*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்

‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார்.
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
வேதங்களால் தேறத்தக்கவரும், வேதத்தை உணர்ந்த பிரம்ம ஞானிகளால் வணங்கத்தக்க வருமான அந்த பரம்பொருள்தான் இராமனாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறான் என்பது
சத்தியமானால், இந்த அர்த்த சந்திர பாணமானது, இந்த அரக்கனைக் கொல்லட்டும் என்று சங்கல்பம் செய்து பிரயோகிக்கிறான்.
அந்த சங்கல்ப பலத்தினாலே இந்திரஜித்தை வெல்கிறான். இப்படிப்பட்ட பெருமைமிக்க ராமனுக்கு ஏராளமான திருக்கோயில்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அதில் சில கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள்.
பல சரித்திர சம்பவங்களோடு தொடர்புடைய கோயில்கள். பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தேறிய கோயில்கள்.

அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
முட்லூர் முக்கூடல் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீராமஅனுமார் திருக்கோயில். ஸ்ரீராமரும், அனுமனும் அமைந்த சந்நதிதான் இந்த ஸ்ரீராமஅனுமார் கோயில். மிக எளிமையான கோயில். இங்கே 127 அடி உயரத்திற்கு தியானம் செய்யும் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீராம ஹனுமான் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
பக்கத்திலேயே தனியாகப் பத்தடி உயரத்தில் நின்ற கோலத்தில் கையில் ராமரையும் சீதையையும் ஏந்திய வண்ணம் நிற்கக்கூடிய அற்புதமான ஸ்ரீராம அனுமான் திருவுருவம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் எளிய மக்கள் வந்து பஜனை பாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி காலம் திருமஞ்சனம் நடை பெறுகிறது.
ஏராளமான கிராம மக்கள் இந்த திருமஞ்சனத்தில் கலந்து கொள்கிறார்கள். மிகச் சிறந்த வரப்பிரசாதி. திருமணத் தடைகள் நீங்கவும், திருமணமான தம்பதிகள் விரைவில் தங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறார்கள்.
அவர்கள் வேண்டுதல்களை எல்லாம் ஸ்ரீராம அனுமனும் ஸ்ரீபட்டாபிஷேக ராமரும் நிறைவேற்றிக் கொடுப் பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம நாமம் கோடிக் கணக்கில் எழுதிய சுவடிகளை, தங்கள் தலையில் வைத்துக்கொண்டு, இங்கு வந்து பிரதிஷ்டை செய்வது இந்த ஆலயத்திற்கு உரிய ஒரு விசேஷம். தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.
ஸ்ரீஆஞ்சநேயருக்கு வலது பக்கத்திலே ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பட்டாபிஷேக கோலத்தில் பல திருக்கோயில்களிலும் அவர் காட்சி தருகிறார். என்றாலும், இங்கே என்ன விசேஷம் என்று சொன்னால், பரத சத்ருக்கனனும் இந்த பட்டாபிஷேகத்தில் இருப்பது விசேஷம்.
அதைப்போலவே ராமாயண தத்துவங்களை பரப்பிய ஸ்ரீராமானுஜரின் கோலம் பார்க்கப் பார்க்க கண்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். முக்கோல் ஏந்தி அஞ்சலி செய்த வண்ணம் அவர் கருணை விழிகளோடு நம்மைப் பார்க்கின்ற காட்சி பரவசப்படுத்தும்.
ஒரு திருக்கோயிலுக்கு உள்ள பெருமை அங்குள்ள மூர்த்தி விசேஷத்தால் மட்டுமல்ல. அந்தத் திருக்கோயிலை அபிமானித்து வருகின்ற மக்கள், மக்களின் நம்பிக்கை, வழிபாடு முதலியவற்றையும் சார்ந்து இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர வைபவம் கொண்டாடப்படும்.
ஆவணி மாதத்தில் கோகுலாஷ்டமி. கிட்டத்தட்ட 600-700 பசு மாடுகளுக்கு மேல், கன்றுகளோடு கோயிலுக்கு முன்னால் வந்து நிற்கும் காட்சி மகத்தான காட்சி. சுற்று வட்டாரத்தில் இருந்து பல கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு பசுமாட்டுக்கும் தனித்தனியாக கோ பூஜை நடைபெறுவது வேறு எங்கும் காண முடியாத ஒரு விசேஷம். புரட்டாசியில் நவராத்திரி வைபோகம், கொலுவோடு விசேஷமாக நடக்கும். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் காலையில் திருப்பாவை நடைபெறும்.
திருப்பாவையில் இங்கு உள்ள 12 - 13 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு திருப்பாவையை ஓதுவார்கள். நிறைவு நாளில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ஆடைகள் ஆபரணங்கள் கொடுத்து ஆண்டாளைப் போலவே நினைத்து வணங்கும் நிகழ்ச்சி அற்புதமாக இருக்கும்.
அடுத்து பிரம்மோற்சவமாக ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு அந்த உற்சவம் 30.3.2023 அன்று தொடங்கி 9.4.2023 விடிகாலை வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் விசேஷ பூஜைகளும் நடைபெறும்.
ஸ்ரீராம நவமி கொடி ஏற்றி துவக்கி வைக்கப்படும் இந்த விழாவில் பல அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள். பட்டிமன்றங்கள் நடைபெறும். இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு முக்கியமாக கிராம மக்களே பங்கு கொண்டு நடத்துகின்ற இராமாயண நாடகம் ஐந்து நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும்.
இரவு பத்து மணிக்கு துவங்கும் ராமநாடகமானது விடியவிடிய நடைபெறும். அதுவும் பட்டாபிஷேக நாளன்று சூரிய உதயத்திற்கு முன் ஊர் மக்கள் எல்லாம் திரண்டு இருப்பார்கள். மங்கல வாழ்த்தோடு கோலாகலமாக பட்டாபிஷேக வைபவம் நடைபெறும்.
இன்னும் திருப்பணிகள் நடைபெற வேண்டிய நிலையில்தான் ஆலயம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அந்த எம்பெருமான் மனது வைக்க வேண்டும். அவன் மனது வைக்கும்படியாக நமது பிரார்த்தனை இருக்க வேண்டும்.
இந்த சந்நதி முன்பு ஒரு நிமிடம் தியானித்து அவன் அருளாசி பெறாமல் போவதில்லை. எல்லா ஜெயத்தையும் விட ஸ்ரீராமஜெயம் முக்கியமல்லவா.... வெற்றியைத் தரும் மூர்த்தியை தரிசிக்காமல்..
கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலயம் அமர்ந்திருப்பதால், வாகனத்தில் செல்லுகின்ற யாராக இருந்தாலும், இந்த ராமனையும் அனுமனையும் வணங்காமல் செல்வதில்லை.

#ஜெய்_ஸ்ரீராம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 30
பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்.

ராமனை பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது நீலகண்டனால் உமையம் மைக்கு எடுத்துரைக்கப்பட்டதாகும். Image
அதை உச்சாடனம் செய்வதால் ஜெயமேற்படும், மங்களம் உண்டாகும், பிறவி பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம்.
அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
Read 18 tweets
Mar 30
*திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயில்*

சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது. Image
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
Read 11 tweets
Mar 30
*கம்பனையும் ராமனையும் பாடிய கண்ணதாசன்*

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?

கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;
Read 64 tweets
Mar 30
*ராமர் பிறந்த அயோத்தியின் சிறப்பு*

*மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது.*

இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன.

வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன.
*அவற்றில முக்கியமானது அயோத்தி.மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி.*

எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும்
*அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியது இருந்தது.*
Read 16 tweets
Mar 30
*ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு*.

1. ஏக (1) பத்தினி விரதன்

2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்

3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்

4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன்
5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்

6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
7 ஸ்ரீ ராமாயண ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.

8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்
Read 4 tweets
Mar 30
16 வார்த்தை ராமாயணம்

"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்
விளக்கம்:

1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(