*திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயில்*

சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
ஏரியின் கரை உடைந்து அடிக்கடி வெள்ளம் ஊரை அழித்தபோது, அவ்வூரில் இருந்த ஆங்கிலேய ஆளுனர் மதுராந்தகம் வரலாற்றினைக் கேள்விப்பட்டு, ராமபிரானை வேண்ட, ஏரியின் வெள்ளம் கரைக்குள் அடங்கிற்று என்று இவ்வூர் ஸ்தல புராணம் கூறுகின்றது.
வாக்களித்தபடி ஆங்கிலேயரும் ராமபிரானுக்குத் தனிக் கோவிலை நிர்மாணித்துக் கொடுத்தாராம். இங்ஙனம் பிற மதத்தினரையும் அரவணைக்கும் கருணை வள்ளல் கடல் வண்ணனான ராமரல்லால் வேறெவர் உள்ளனர்?
இந்தக் கோவிலும் மதுராந்தகம் போன்றே '' ஏரிகாத்த ராமர் கோவில் '' என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரிக்கு வருணபுஷ்கரிணி என்று பெயர். ராம லஷ்மண்ர்களை சுமந்தபடி காட்சி தருகிறார் அனுமன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரிகாக்கும் எம்பிரானும் கோதண்டராமராக கம்பீரமான தோற்றத்தில் நெடிது உயர்ந்து 6 அடிக்கும் மேலாகக் காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் ஸீதாதேவியும், இடப்புறம் லக்ஷ்மணனும் உள்ளனர், மூலவராக. உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
ஆஞ்சனேயர் ஸந்நிதி பக்தவத்ஸலப் பெருமாளுக்கு எதிரில் உள்ளது. நின்ற வண்ணத்தில் இந்த ராமபிரான் தைலத் திருகாப்புத் திருமேனியாகத் திகழ்வது விசேஷமாக உள்ளது. பெரும்பாலும் தைலகாப்பு திருமேனி கிடந்த வண்ணருக்கே.
'' காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

ஆராவமுதனைப் பாடிப்பற ! அயோத்தியர்

வேந்தனைப்பாடிப் பற !''

என்ற பெரியாழ்வாரின் '' உந்திப் பறத்தல் '' பாசுரமே நினைவுக்கு வருகிறது.
எல்லையற்ற கடலினையே அடைத்து இலங்கை சென்று பிராட்டியைச் சிறைமீட்ட ராமபிரானுக்கு இந்த ஏரியைக் கரைக்குள் அடைத்துக் காத்தல் என்ன கடினமான தொழிலா என்ன?
இந்த ஏரி காத்த ராமனை மழையில்லாத நாட்களில் வேண்டினால் மழை பெய்யும்;அதிகமழை பெய்து துன்பங்கள் ஏற்படும் போது, அவை பகலவனைக் கண்டபனிபோல் விலகி ஓடும் என்பது இவ்வாலயம் உணர்த்தும் உண்மை.

#ஜெய்_ஸ்ரீராம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 1
*ஏழு அடுக்குகுகள் 400 டன் எடை நடமாடும் கோவில் திருவாரூர் ஆழி தேர்...!* 🙏

ஆரூரா தியாகேசா.....!

இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். Image
பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு தேர் உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் அதாவது கடல் போன்ற தேர் என்று பேரானது.
* 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடைகொண்ட அந்த பிரமாண்டத் தேர் பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. அஷ்ட திக் பாலகர்களும் அந்த தேரின் குதிரைகளாக மாறினர். தேர்க்கால் அச்சாக தேவர்களும், தேரின் அடித்தட்டாக காலதேவனும் அமர்ந்தார்கள்.
Read 25 tweets
Apr 1
சனியும்,எமனும் சேர்ந்து இருக்கும் ஆலயம்...

சனீஸ்வர பகவான் மிகவும் கருணையானவர்.வாழ்வில் நமக்கு வேண்டும் என்று சொல்லக் கூடிய செல்வங்களை எல்லாம் வாரி வாரி வழங்கக் கூடியவர்.

இவர் வெறும் கெடுதல்களை மட்டுமே ஒரு மனிதருக்கு தருபவர் அல்ல.

1 Image
அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஒரு வார்த்தையிலே அழகாகக் கூறுவார்,சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று.

மிக உயர்ந்த சோழவள நாட்டிலே மயிலாடுதுறை அற்புதமான திருத்தலம்.

2
இந்த மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளத்தின் மேற்கே 3 கி.மீ.தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது திருமீயச்சூர் என்கின்ற அற்புதமான திருத்தலம்.

3
Read 9 tweets
Mar 31
இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா

(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)

சொன்னவர்-திரு முருக கிருபானந்த வாரியார். Image
திரு முருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டு விழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்:
Read 15 tweets
Mar 31
#நாமக்கட்டி

நெற்றியில் இடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கும்.

இதனை ஆராய்ச்சி மையங்கள் கருவிகள் இல்லாமல் அனுபவமாகவே கூறியவர்கள் தான் நம் முன்னோர்கள்..

திருநாமம் இடுதல், திருமண் இடுதல் என்பது ஒரு பழக்கம்.. இதனை பெரும்பாலும் வைணவர்கள் தினமும் இட்டுகொல்வார்கள்.. Image
ஆனால் பெரும்பாலும் நம் மக்கள் சனிக்கிழமை , புரட்டாசி தினங்களில் தவறாது வைத்துக்கொள்வார்கள்...

நாமக்கட்டி களிமண்ணில் இருந்துதான் தயாரிக்கபடுகிறது...

(தெய்வீக நோக்கில் இம்மன் திருமண் என கூறப்படுகிறது)

அதனால் தான் இதில் கால்சியம் முக்கியபங்கு வகித்துள்ளது.
திருநாமம் இடும்போது கிடைக்கும் கால்சியம் சக்தி, இரத்த ஓட்ட அமைப்பிலும், மூளை செயல்பாடுகளிலும், நோய் எதிர்ப்பு திறனும், இதய துடிப்பு கட்டுப்பாடு என பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது.
Read 8 tweets
Mar 31
*கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு..!!*

சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்... அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.

1 Image
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் போதனையை நமக்கு வழங்கியதை இன்னும் உணர்த்துவதற்காகத்தான் தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்தார் சிவனார்.

2
சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார். அதை உணர்த்துகிற வடிவம்தான் அர்த்தநாரீஸ்வர திருவடிவம்.

அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்கள் மிகக்குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான திருத்தலம் திருச்செங்கோடு கோயில்.

3
Read 13 tweets
Mar 30
பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்.

ராமனை பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது நீலகண்டனால் உமையம் மைக்கு எடுத்துரைக்கப்பட்டதாகும். Image
அதை உச்சாடனம் செய்வதால் ஜெயமேற்படும், மங்களம் உண்டாகும், பிறவி பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம்.
அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(