Deva Profile picture
Apr 3, 2023 6 tweets 3 min read Read on X
பெரியாரைப் பற்றி ‘#கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி .
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

1931 விகடனில் எழுதிய கட்டுரையிலிருந்து !

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல்
அளித்துவிடுவேன்.சாதாரணமாக,இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது.இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார்.

ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால்
கேட்க முடியாது.பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை
தொடங்குவதில்லை.எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி
கண்டுவிடும்.எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது

தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன்.இருக்கலாம். ஆனால்,அவர் உலகாநுபவம் என்னும் கலா சாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்
என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!

[ நன்றி: விகடன் காலப் பெட்டகம் ]

#பெரியார் #Vaikom100 @DMKITwing

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Deva

Deva Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Deva_twitt

Dec 28, 2023
1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து..

இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து Image
தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது.
அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.

முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு
Read 25 tweets
Nov 14, 2023
#தீபாவளி_பற்றி...
#தமிழ்_தேசத்தந்தை_பெரியார்

புராணம் கூறுவது,

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று Image
உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான். Image
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான
Read 11 tweets
Jul 15, 2023
இப்ப... ஒரு tea கடையில்

Tea மாஸ்டர் :
அண்ணே நடிகர் வடிவேலு என்ன சாதி'ண்ணே

நான் : தெரியல மாஸ்டர்
எதுக்கு கேட்கறீங்க

Tea மாஸ்டர் : இல்ல மாமன்னன்
படம் பார்த்தேன் அதான் கேட்டேன்'ண்ணே

நான் : தெரியல மாஸ்டர் ஓகே
நான் வரேன் மாஸ்டர் 'ன்னு சொல்லிட்டு கிளம்ப

Tea மாஸ்டர் : daily
Tea குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்வீங்க இன்னைக்கு ஒண்ணுமே சொல்லாம போறீங்களே'ன்னு
கேட்க

நான் : இன்னைக்கு ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லீங்க மாஸ்டர் சுமார்தான்

Tea மாஸ்டர் : அண்ணே மூணு நாளா குடிக்கிறீங்க ரசிச்சு tea குடிப்பீங்க இன்னைக்கு மொபைல் நோண்டிட்டே குடிக்கறீங்க அதான்
உங்களுக்கு அப்படி தோணுது
ஒரு வேலையை செய்யும் பொழுது கவனம் அதுல இருக்கட்டும் அண்ணே அப்போதான் நல்லாயிருக்கும் அண்ணே 'ன்னு சொல்ல

நான் : படம் பார்க்கிறப்ப வடிவேலுவை ஒரு நடிகனா பாருங்க.... அதை விட்டுட்டு அவர் என்ன சாதி குலம் கோத்திரம்'ன்னு தேடி அலைய வேண்டாம் மாஸ்டர்'ன்னு சொல்ல
Read 6 tweets
Jul 8, 2023
பொது இடத்தில் நடமாடும்
பிக்பாக்கெட் திருடனிடம் என்ன பயம் இருக்குமோ..
அதே பயம் எனக்கு பார்ப்பனர்களிடத்தில் உண்டு பொது_வாழ்க்கையில்//

#பெரியார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பெரியாரிடம் ஒரு பிராமணர் கேட்கிறார்..

"என்னிக்கையில் இரண்டு சதவீதம் உள்ள பிரமணர்களை
எதிர்க்கிறிர்களே.. இது ஞயாமா?"

பெரியார்: "உங்களுக்கு சந்தைக்கு போகும் பழக்கம் உண்டா?"

ஐயர்: "போவேன்"

பெரியார்:"சந்தைல ஆடு கோழினு வாங்குவிங்களா?"

ஐயர்: "இல்லைங்க நாங்க சைவம் காய் கறி மட்டும் தான் வாங்குவேன்"

பெரியார்: "பூண்டு வெங்காயம் வாங்குவிங்களா?"
ஐயர்: "இல்லைங்க அது எங்களுக்கு ஆகாது!"

பெரியார்;"அப்படினா குறைந்த காசுதான் எடுத்துட்டு போவிங்க! அந்த பணத்தை சுருக்கு பைல் போட்டு வெளிய தொங்கவிட்டு போவிங்களா? அப்படித்தானே?"

ஐயர்:"அது எப்படிங்க சந்தைல திருடனுங்க அடிச்சிட்டா?"
Read 5 tweets
Jul 7, 2023
திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே..! தேசிய வாதிகளே..! தமிழ் தேசிய குஞ்சுகளே..! என் உடன்பிறவா சகோக்களே..! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

1* 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற நாடக விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை”
என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?

2* 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் என்பதும் , 1925 ல் #பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த
பிறகு 1926க்குப் பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்கப் பட்டார் என்பது தெரியுமா.?

3* பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர்
Read 18 tweets
Jun 30, 2023
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

#அனுராதா ரமணன் என்ற உடனேயே காஞ்சி ஜெயேந்திரனும் உங்கள் நினைவுக்கு வந்தால் நீங்களும் என் தோழரே..
≠===============================

1992-ம் வருடம் சுபமங்களா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து விலகி, `வளை யோசை' என்ற ..
சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம் சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகவும் அழைப்பு வந்தது.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும்
குடும்பத்தில் வளர்ந்தவள் நான். `கடவுளே அழைத்திருக்கிறார்' என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார்.

என்னை அழைத்துப்போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தாள். அவளுடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனாள்.

முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் `அம்மா' என்ற ஆன்மீகப்
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(