M.SivaRajan Profile picture
Apr 3 7 tweets 3 min read Twitter logo Read on Twitter
#திருவாரூர்_ஆழித்தேர் :*

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 01 ம் தேதியன்று நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக தேர் திருவிழா நடைபெறும்.
திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்டது.
இதன் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஏழு அடுக்குகளைக் இந்த தேரில் 64 தூண்களும்,
நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த 64 தூண்களும் 64 கலைகளையும்,

நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன.

அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெறுவதற்கு முசுகுந்த மன்னன் உதவினார்.

அவருக்கு பரிசாக ஏழு விதமான அதிவிசேஷமான மூர்த்தங்களை வழங்கினான் இந்திரன்.
இந்த மூர்த்தங்களைக் கொண்டு செல்வதற்காக தேவலோகத்தை சேர்ந்த ஸ்பதியான மயன் என்பவனால் உருவாக்கப்பட்டது தான் ஆழித்தேர்.

பாற்கடலில் உருவான தேவதாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் இதற்கு ஆழித் தேர் என பெயர் உருவாகிற்று.
இந்த பிரம்மாண்ட தேர் பிரம்ம தேவரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

திருமால் வணங்கிய இந்த தேரின் குதிரைகளாக அஷ்ட திக் பாலர்கள் மாறியதாகவும்,

தேர்க்கால் அச்சாக தேர்வர்கள் மாறியவும் தேரின் அடித்தட்டாக கால தேவனே அமர்ந்ததாகவும் இத்தல புராணம் சொல்கிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 5
#பங்குனி_உத்திரமும்_குலதெய்வ_வழிபாடும் :*

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். Image
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும்,

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் வழிபடுவார்கள்.

இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.
மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நல்ல பலனை பெற்றுத் தரும்.

பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.
Read 6 tweets
Apr 4
#பங்குனி_உத்திரம்

பங்குனி உத்திரம் திருநாள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்தது.

தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி,

27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். Image
எனவே தான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.

தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.
இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

ஆனால் பங்குனி உத்திர விரதத்தால் அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும்.
Read 19 tweets
Apr 3
#ஸ்ரீ_சைலம்

*ஈசன் விரும்பும் பிடித்தமான ஶ்ரீ சைலம்*

ஸ்ரீ சைலம் சிகரத்தை தரிசித்தால் முன்ஜன்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

அடுத்த ஜன்மம் என்பது இருக்காது’ என வேதம் கூறுகிறது.
வசு ஸ்ரீ’ என்ற பெண் துறவி இங்கு தவம் இருந்ததால் அவளது பக்தியைப் பாராட்டி, ‘உன் பெயரால் இது ஸ்ரீசைலம் எனப்படும்’ என்று வரம் தந்தாராம் ஈசன்.

அதே போல் நந்தியின் தந்தையான சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடம் என்பதால், அவர் பெயரைக் கொண்டு
‘ஸ்ரீ சைலம்’ ஆனதாகவும் ஒரு தகவல் உண்டு.
குப்த வம்சத்தில் வந்த இளவரசி ஒருத்தி இந்தப் பகுதிக்கு ஸ்ரீசைலம் என்று பெயரிட்டதாகவும்,

இத்தல இறைவனை மல்லிகார்ஜுனன் என அழைத்ததாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

அதற்கு முன் இங்குள்ள ஈஸ்வரனை ‘பர்வத லிங்கன்’ என்றே அழைத்தனராம்!
Read 9 tweets
Apr 2
#குளியல்_பரிகாரங்கள்

நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்கள்

தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த கிரகத்தின் தோஷங்களை நீக்கிக் கொள்ள முடியும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
சூரிய தோஷம் :

குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும்.

நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும்.

அதன் பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம்.

இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திர தோஷம் :

குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
Read 12 tweets
Apr 1
#பஞ்ச_சம்ஸ்காரம்

பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.

1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல்
#புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.

3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல்
#நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.
Read 13 tweets
Mar 31
#அதிர்ஷ்ட_தேவி_வழிபாடு

பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்த வேண்டும். Image
அதிர்ஷ்ட தேவி புகைப்படம் இல்லை என்றால் காமாட்சி அம்மன் அல்லது மஹாலக்ஷ்மி புகைப்படம் வைத்து பூஜை செய்யலாம்.

தவறு ஏதும் இல்லை.

நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூற வேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(