#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

02/02 தொடர்கிறது

தன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

அவளுடைய குறையை பார்த்த யாருக்கும்,அவளின் அன்பு தெரியவில்லை,
அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்..!

அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

திருமண வயது வந்தது, ஆனால் பேச
முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...
பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது.

பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது.

ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்.
(கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாக துடைத்தார்)

(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)

தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..

"அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது...
ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்க பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..
வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை.

அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக "அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்."
பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று "என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று வாய் பேச முடியாத நிலையிலும்,

செய்கையை காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!
(என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது)
"பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்".என்று தன்னை திட படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தார்..

"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்
ஆனால் அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால் என் மனைவியின் நிலை என்ன என்று..?

அதற்கு தான் இந்த "பணம்" ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..

அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும்,
மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!

அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி"..என்றார்.

"சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்...கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...!
அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!

அதில்.....

"நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.

அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்...
நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பாத்து கொள்ளுங்கள்".

இதுவே என் கடைசி ஆசை.."

..........

இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை,கால் நடுக்க ஆரம்பித்தது..
கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்...
"சரி தம்பி எனக்கு நேரம் ஆகி விட்டது அதை அனுப்பி விடுங்கள்,ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர்.

என்ன செய்ய வேண்டும் ஐயா என ஆவலோடு கேட்டான்.

"வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழ கூடை இருக்கிறது அந்த பழ கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா" என்றார்.
நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..

வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....!

அந்த முதியவருக்கு இடது கை இல்லை...!

(இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..
அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்)

"கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்"... அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது.

"மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..
உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்.....,!

நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்ட பட தேவையில்லையே" என்று குரலில் ஒரு நடக்கத்தோடு சொன்னான்.
இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்... ஆ...ஆ...ஆ.

"என் மனைவி நம்பி வந்தது என்னை தான்......!

சொத்தையோ....! அல்லது பிள்ளையை யோ இல்லை......!"

"அவளுக்காக சுமகின்ற இந்த சுமையும் ஒரு சுகமே.....!"
என்று சொல்லி கொண்டே
உச்சி வெயிலில் உற்சாகமாக பழ கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்... ! அந்த முதியவர்.

சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....! பெருந்துழி யாய்...! தரையில் விழுந்தது...! தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...! அவனின் சுபாவமும்...!
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்"
"முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும்" தான்
உலகின் ஆக சிறந்த காதல் ஜோடிகள்...!

கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில் கொடுத்து செல்வோம் உண்மையான அன்பை..!
💐💐💐💐💐💐💐
இனி வரும் நாட்கள் வசந்த காலமாகட்டும்..!

#மனைவி ஒர் அற்புதமான இறைவன் கொடுத்த வரம்

கண்களில் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Apr 4
*ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்*

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது. Image
*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார். Image
*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்* Image
Read 10 tweets
Apr 3
எனது 5 இலக்க வருமானம், எனது 2 BHK வீடு, எனது கார், எனது தொழில், எனது 25 ஏக்கர் நிலம், என் பண்ணை வீடு போன்றவை, என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இவை அனைத்தும் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் எல்லாமே தீயில் எரிந்து விடும்.
இன்று இரண்டு மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அண்டை நாடுகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்???. நாங்கள் எங்கு செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்???

ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் வங்கதேசம், கீழே இந்தியப் பெருங்கடல், மேலே சீனா, நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்!!!

உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Read 4 tweets
Apr 3
#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

01/02

காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் "சேகர்".

அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்க்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..
ஆனால் தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாக புறப்பட்டான்.

இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரம் போகிறீர்கள்" என்று வினவினாள்.

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்..., "
நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே,கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றால் மனைவி.

"எல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது,
Read 25 tweets
Apr 2
#ஸர்வம்_ஸ்ரீராமமயம் 🙏
#ஓம்நமோ_நாராயணாய 🙏

*#சரணாகதி*
🙏🙏🙏🙏🙏🙏

*1. நின்றால் வேங்கடம்*
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

*2.கிடந்தால் ரெங்கமாம்*
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு
*3.அமர்ந்தால் கச்சியாம்*
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

*4.விழுந்தால் கோட்டையாம்*
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி

*5.தொழுதால் அமுதமாம்*
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு
*6.அழுதால் கடிகையாம்*
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

*7.நினைந்தால் பூரியாம்*
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

*8.நடந்தால் துவாரகையாம்*
துவாரகபுரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்
Read 5 tweets
Apr 1
அவர் பெயர் சூர்தாசர். பிறவியிலேயே தன் கண்பார்வையை இழந்தவர்.

அதனால் அவரது குடும்பம், இவரை ஒதுக்கி வைத்தது.

ஒருநாள் அவர், தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தபோது, தெருவீதியில் சிலர் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர். அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர், Image
அதில் ஒருவரை அழைத்து, "அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரைப் பற்றியது? மிகவும் நன்றாக இருக்கிறதே" என்று கேட்டார்.

அதற்கு அவர், "அய்யா இந்தப் பாடல்கள் கண்ணனை போற்றிப்பாடும் பாடல்கள். அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள்" என்றார். Image
உடனே சூர்தாசர் "நீங்கள் போற்றிப் பாடிய கண்ணன் எப்படி இருப்பார்" என்று கேட்டார்.

அதற்கு அவர் "அய்யா!கண்ணன் சிறு குழந்தை. கருநீல நிறம் உடையவன். அவனின் புன்னகை முகத்தைப் பார்த்தால் பரவசம் அடையும். நம் மனது, அவன் வசம் போய்விடும். Image
Read 21 tweets
Mar 31
ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். Image
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா என அழைத்து சென்றார்.

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு Image
ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(