இன்று #பங்குனி_உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும்
மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதா
தேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் இன்று நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்
தான். செல்வத்தின் அதிபதியான #ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீமகாலட்சுமிக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான்
என்கிறது #விஷ்ணுபுராணம். நம் செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீமகாலட்சமியை வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும். ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார், நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். எம்பெருமான் சொக்கநாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம்
நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான். பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான். அது மட்டுமா,
பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக் கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான். பிரம்மச்சாரிய கடவுளான ஸ்ரீசபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் அவதரித்ததும், பூரணா-புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான். அதேபோல் மன்மதன் ரதிதேவியை மணம் செய்து கொண்டதும்
இந்த நாளில் தான். #ஶ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் – மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் மிக விசேஷம். பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும்.
*பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
*தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
*பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
*பெரிய பிராட்டியார் சேர்த்தி
*ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
*வருடத்தில் ஒரு முறை கொள்ளிடகரையில் சின்ன பெருமாள்
தீர்த்தவாரி மற்றும் கத்யத்ரயம் சாற்றுமுறை
*பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
இதுவே ஸ்ரீரங்கத்தில் நடக்கும் சேர்த்தி உட்சவத்தின் நிகழ்ச்சியாகும். #ஸ்வாமி_இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம்
சரணாகதி அடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடை
பெறுகிறது.
நாம் என்னதான் வாழ்க்கையில்
வசதியாக இருந்தாலும், சுப நிகழ்வுகள் நடக்க இறைவனின் திருவருள் அவசியம் வேண்டும். அதற்கு கைகொடுப்பது பங்குனி உத்திர விரதம் தான். சிலருக்கு திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம்
திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஸ்ரீரங்கம் மேட்டழகியசிங்கர் சன்னதி எதிரில் நடந்த கம்பராமாயணம் அரங்கேற்றமும் இன்று தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்