அன்பெழில் Profile picture
Apr 12 37 tweets 6 min read Twitter logo Read on Twitter
#தருமமிகு_மயிலை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே உள்ளன. இவை சென்னையின் #சப்தவிடங்க_ஸ்தலங்களைப் போல் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்தரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இதன் விசேஷமாகும். இந்த 7 சிவ ஆலயங்களையும் ஒரே நாளில் Image
தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடும் தொடர்பு உள்ளது. இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு கோயில்களுமே 12-ம் Image
நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்த போது, அவர்கள் வழிபட்ட முறையில் தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
1. விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில் (சூரியன் ஸ்தலம்)
மயிலை
கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில். சப்த சிவ வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய கோவிலாகும். இங்கு விசால்க்ஷி அம்மன் சன்னிதிக்கு முன் உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பைரவர் சன்னிதியும்
சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில
திகழ்கின்றது .நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்மகாரகன் சூரியனின் அம்சமாகத் திகழ்கிறார்.

2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்) மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில
தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய
முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவை ஆகக் கருதப்
பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில் தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர்
பஞ்சமே ஏற்படாது.

3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்) 'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டு
இருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான்
இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.

4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)
மயிலாப்பூர் கடைவீதி, பஜார் சாலையில
காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது. மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால்,
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. மல்லீஸ்வரர் வித்யாகாரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.

5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்) கடற்கரை சாலையில்
இருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட
திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் திருப்பெயர்
ஸ்ரீ காரணீஸ்வரர். அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும்.
இத்தலத்து
ஈசன் நவக்கிரகங்களில் தனகாரகன் மற்றும் புத்திரகாரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும், செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு
அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது.
ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும்
குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார்.
ஆனாலும் மகாபலி தானம் கொடுக்க முன் வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார். வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த
கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்
மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)
மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம்
ஏழாவதாக தரிசிக்க வேண்டிய ஆலயமாகும்.
கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. #திருஞானசம்பந்தர்
‘மடலார்ந்த தெங்கின
மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் அடலானே றூரும் அடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
என்கிறார். ஆக திருஞான சம்பந்தர் காலத்தில் கபாலீச்சுவரத்தில் கடல் இருந்திருக்கிறது. ஊர்திரை வேலை என்றால் ஊர்ந்து வரும் அலைகடல் ! அருணகிரி நாதர் கூடத் தன் திருப்புகழில் மயிலாப்பூர் கோவில் முருகனைப் பாடி இருக்கிறார்.
கயிலைப் பதியரன் முருகோனே கடலக்கரைதிரை அருகே – சூழ் மயிலைப் பதிதனில
உறைவோனே மகிமைக் கடியவர் பெருமாளே! ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். (வேறு காரணங்களும் சொல்லப் படுகின்றன) புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை
அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார்.
மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள்
தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம். நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே என்போருக்கு, ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே.
அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?

8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்) திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு
வழியாக கச்சேரி சாலையைக் கடந்து சென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிமீ சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் உள்ளது. இங்கு உள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு
ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்) துர்கை மற்றும் மாரியம்மனை ராகு அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர்
மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

10. அப்பர் சுவாமி திருக்கோயில்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில்
அமைந்துள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம். அருள்மிகு அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை
வழிபட வேண்டியது அவசியம். சைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம்
அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும்
அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், "மயிலையே கயிலை கயிலையே மயிலை" என்ற சிறப்பைப்
பெற்றுள்ளது. சிவ அன்பர்கள் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுலாம்
ஓம் நமசிவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 13
#மகாபெரியவா
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன்.
13-09-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே Image
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார
Read 13 tweets
Apr 13
#ஆதிசங்கர_பகவத்பாதாள் #விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா" Image
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
Read 6 tweets
Apr 13
#காயத்ரி என்பது மந்திரம் அல்ல, இது 24 எழுத்துக்கள் கொண்ட ஒரு மீட்டர் ஆகும், அதில் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. புகழ்பெற்ற #காயத்ரி மந்திரம் சாவித்ரி என்று அழைக்கப்படுகிறது. இது ரிக் வேதம் 3:5:6:10 ல் இருந்து வருகிறது.
சவிதா காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் Image
கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.

பொருள்
இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உருவாக்கியுள்ள உன்னதமானவரின் ஒளியை (அதாவது சூரியனை) தியானிக்கிறோம். அதுவே நம் மனதை ஞானத்தை நோக்கித் Image
தூண்டட்டும் அல்லது அந்த ஒருவர் நம் புத்தியை ஒளிரச் செய்வாராக. அந்த ஒருவர் நம் மனம், பேச்சு மற்றும் செயல்களை வழிநடத்தட்டும். காயத்ரி மந்திரங்கள் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது - எதில்? எதன் மூலம்? எப்படி?
#தியானம்
கேள்வி 1. எதைப் பற்றி சிந்திக்க அல்லது தியானிக்க வேண்டும்?
பதில்: உச்ச
Read 25 tweets
Apr 12
#மகாலட்சுமியும்_நுனிப்பகுதியும் எதில் ஒன்றிலும் நுனிப் பகுதி லட்சுமி ஸ்தானமாகும். கை கால் நுனி விரல் ஆனாலும் இலைகளின் நுனி ஆனாலும் பழங்களின் நுனி ஆனாலும் நாக்கின் நுனியும் லட்சுமி ஸ்தானமாகும். மகா சரஸ்வதியும் மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும் Image
அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள். அது போல் காய் கிழங்கு பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடிப் பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்குவது நல்லது. அடிப் பகுதி எதிலும் சக்தி பகுதியாகும், முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி. அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுகிறது.
தலையிலும்
லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பர். பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலை மூழ்கி தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்.
எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து பார்த்துக் கொண்டால்
Read 4 tweets
Apr 12
#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின் Image
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா Image
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம் Image
Read 21 tweets
Apr 12
#மகாபெரியவா
சொன்னவர்: ராயவரம் பாலு ஸ்ரீமடம்
தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு: வரகூரான் நாராயணன்

வயதான தம்பதிகள், மனம் உடைந்து போயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். பெரியவாள் மௌனம் மேற்கொண்டிருந்த சமயம். காஞ்சீயிலேயே Image
தங்கி பெரியவாளிடம் பேசி விட்டுத் தான் போவது என்று தீர்மானித்துக் கொண்டு இருந்தார்கள் போலிருக்கிறது. மூன்றாவது நாள், அவர்கள் கண்களில் கண்ணீரைக் கண்டதும், பெரியவாளின் மனம் உருகி விட்டது. அவர்கள் இருவரையும் அருகில் அழைத்து உட்காரச் சொன்னார்கள். அவர்களுக்காக மௌனத்தைக் கைவிட்டார்கள்.
"ஒரே பையன் மூணு வருஷமாக அமெரிக்காவில் இருக்கான். எங்களிடம் கொள்ளை ஆசை"

"அப்புறம் என்ன?"

"இப்போ லீவில் வந்திருக்கான். ஒரு வெள்ளைக்காரியோடு கூட. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே."

"அந்த வெள்ளக்காரியைக் கல்யாணம் பண்ணிக்க போறானாமா?"

"இல்லை என்கிறான். அந்த மார்கரெட் ரொம்ப
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(