M.SivaRajan Profile picture
Apr 15 17 tweets 2 min read Twitter logo Read on Twitter
#சர்ப்ப_தோஷ_நிவர்த்தி

சர்ப்ப தோஷம் போக்கும் 
நாகேஸ்வரமுடையார் கோவில்

ராகு தோஷம் உள்ளவர்கள் 
நாகேஸ்வரமுடையார் 
கோவிலில் உளுந்து தானியம் மீதும், 

கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, 

தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள் Image
ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு 
கிரகப்பதவியை அடைந்தனர். 

அந்த இறைவன் பெயர் 
நாகேஸ்வரமுடையார், 
இறைவி புன்னாக வல்லி. 

இவர்கள் அருள்பாலிக்கும் 
ஆலயம் சீர்காழியில் உள்ள 
நாகேஸ்வரமுடையார் கோவில் ஆகும்.
கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், 

உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய 
மகா மண்டபம் உள்ளது. 

அதனை அடுத்து அர்த்த 
மண்டபமும், கருவறையும் 
உள்ளன. 

கருவறையில் இறைவன் 
நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.
இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறாள்

தேவக் கோட்டத்தின் தென் 

திசையில் தட்சிணா மூர்த்தியின் திருமேனி உள்ளது

பிரகாரத்தின் தென் மேற்குத் 
திசையில் நாக மாணிக்கத்தை வைத்து பூஜை செய்த 
மாணிக்க விநாயகரும்,
மேற்கு திசையில் வள்ளி - தெய்வானையுடன் 
முருகப்பெருமானும், 

வடமேற்கு திசையில் சண்டிகேசுவரரும், 

வடகிழக்கு திசையில் சூரியன், 

விநாயகர் மற்றும் பைரவரும், 

தென்கிழக்கு திசையில் 
வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி 
தருகின்றனர்.
இக்கோவிலில் ஆகம விதிப்படி துர்க்கை மற்றும் நவக்கிரக 
சன்னிதிகள் இல்லை.

ராகுவின் நண்பன் சனி 
என்பதால் சனி தன் மனைவியுடன் ராகுவின் சன்னிதியில் 
இருக்கிறார்.

மேலும் ராகு, கேதுவுக்கு இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப் படுகிறது.
இந்த ஆலயம் ஆதி ராகு தலமாகவும் அழைக்கப்படுகிறது.

அமுதம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் 
விழுந்தான். 

எனவே இத்தலம் சிரபுரம் என்றபெயரிலும் அழைக்கப் படுகிறது. 

இது தவிர பிரம்மபுரம், 
வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், 
புறவம், சண்பை, காளிபுரம்,
கொச்சைவையம், கழுமலம் 
என்ற பெயர்களும் இத்
தலத்திற்கு உண்டு.

பூர்வ காலத்தில் தேவரும், 
அசுரரும் கூடி மந்திர மலையைமத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு 
திருப்பாற்கடலைக் 
கடைந்தார்கள். 

அதிலிருந்து லட்சுமி, 
தன்வந்திரி, சிந்தாமணி, 
ஐராவதம், ஆலகால விஷம்,
காமதேனு முதலியன தோன்றின. தொடர்ந்து நரை, திரை, 
பிணி, மூட்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாகிய 
தேவாமிர்தம் தோன்றியது.

அசுரர்கள் இந்த தேவாமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு 
அழிவு இருக்காது.

மேலும் தேவர்களுக்கும் 
அசுரர்களுக்கும் இடையே 
எப்போதும் போர் நடந்து கொண்டேயிருக்கும்.
எனவே, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல்தடுத்து விட வேண்டும் 
என்று எண்ணிய மகாவிஷ்ணு,மோகினி உருவமெடுத்தார்.

மோகினியின் அழகைக் கண்ட அசுரர்கள் மதிமயங்கினர். 
உணர்விழந்து செயலற்று 
நின்றனர். 

இதுதான் சரியான நேரம் 
என்று உணர்ந்த மோகினி 
உருவிலிருந்த மகாவிஷ்ணு,
தேவர் களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்.

அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்கை என்பவளுக்கும் பிறந்த ‘சியிங்கேயன்’ என்பவன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான்.
இதனை அறிந்த சூரிய, 
சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் 
குறிப்பால் உணர்த்தினர். 

அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த 
அசுரனை ஓங்கி அடித்தார்.
அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை ‘சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், 

உடல் ‘செம்பாம்பின் குடி’யிலும் விழுந்தது. 

தேவார்மிதம் உண்டதால், அந்தஅசுரனது இரண்டு உடல் 
பாகங்களும் இரண்டு 
பாம்புகளாயிற்று.
இந்த அரவங்கள் 
சிவபெருமானைத் தியானித்து,காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடும் தவம் புரிய, 
இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் 
எழுந்தருளினார்.

அப்போது அரவங்கள் 
சிவபெருமானிடம் சூரிய, 
சந்திரனை விழுங்கும் 
சக்தியையும்,
அகில உலகையும் ஆட்டிப் 
படைக்கும் வலிமையையும் 
தங்களுக்கு அருளுமாறு 
வேண்டினர்.

‘சூரிய, சந்திரர்கள் 
உங்களுக்குப் பகைவர்கள் தான். 

ஆனால், அவர்கள் அகில 
உலகிற்கும் இன்றி அமையாதவர்கள்.
எனவே, அமர பட்சம், 
அமாவாசை, பவுர்ணமி 
நாட்களில் நீங்கள் அவர்கள் 
மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்குவரம் அளித்தார்.

மேலும் இறைவன் அருளால் 
மனிதத் தலையும் பாம்பு 
உடலும் கொண்டு ‘ராகு’வும், 

பாம்புத் தலையும் மனித 
உடலும் கொண்டு ‘கேது’வும் தோன்றினார்கள்.
அதுவரை இருந்த ஏழு 
கிரகங்களுடன் சேர்ந்து 
ஒன்பது கிரகங்களாக
 (நவக்கிரகங்களாக) அவர்கள் விளங்கும் படி வரமளித்தார் 
சிவபெருமான் என்பது புராண வரலாறு.

#சர்ப்ப_தோஷ_நிவர்த்தி

#நாகேஸ்வரமுடையார்

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 13
#கடன்_தீர்க்கும்_கணபதி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் கோவில்.

இக்கோயில் பிற கோயில்களைப் போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. Image
கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது.

மேல் தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது.

பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல்,
படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடையாரின் மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும்
Read 6 tweets
Apr 5
குல தெய்வம் பற்றிய விளக்கம் :

மிக முக்கியமான பதிவு :

திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குல தெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம். Image
திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?
இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும்.

பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குல தெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள்.

பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள்.
Read 21 tweets
Apr 5
#பங்குனி_உத்திரமும்_குலதெய்வ_வழிபாடும் :*

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். Image
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும்,

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் வழிபடுவார்கள்.

இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.
மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நல்ல பலனை பெற்றுத் தரும்.

பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.
Read 6 tweets
Apr 4
#பங்குனி_உத்திரம்

பங்குனி உத்திரம் திருநாள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்தது.

தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி,

27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
எனவே தான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.

தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.
இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

ஆனால் பங்குனி உத்திர விரதத்தால் அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும்.
Read 19 tweets
Apr 3
#திருவாரூர்_ஆழித்தேர் :*

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 01 ம் தேதியன்று நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக தேர் திருவிழா நடைபெறும்.
திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்டது.
இதன் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஏழு அடுக்குகளைக் இந்த தேரில் 64 தூண்களும்,
நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
Read 7 tweets
Apr 3
#ஸ்ரீ_சைலம்

*ஈசன் விரும்பும் பிடித்தமான ஶ்ரீ சைலம்*

ஸ்ரீ சைலம் சிகரத்தை தரிசித்தால் முன்ஜன்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

அடுத்த ஜன்மம் என்பது இருக்காது’ என வேதம் கூறுகிறது.
வசு ஸ்ரீ’ என்ற பெண் துறவி இங்கு தவம் இருந்ததால் அவளது பக்தியைப் பாராட்டி, ‘உன் பெயரால் இது ஸ்ரீசைலம் எனப்படும்’ என்று வரம் தந்தாராம் ஈசன்.

அதே போல் நந்தியின் தந்தையான சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடம் என்பதால், அவர் பெயரைக் கொண்டு
‘ஸ்ரீ சைலம்’ ஆனதாகவும் ஒரு தகவல் உண்டு.
குப்த வம்சத்தில் வந்த இளவரசி ஒருத்தி இந்தப் பகுதிக்கு ஸ்ரீசைலம் என்று பெயரிட்டதாகவும்,

இத்தல இறைவனை மல்லிகார்ஜுனன் என அழைத்ததாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

அதற்கு முன் இங்குள்ள ஈஸ்வரனை ‘பர்வத லிங்கன்’ என்றே அழைத்தனராம்!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(