M.SivaRajan Profile picture
Apr 19 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#தருமை_ஆதீன_குரு_மணிகள்

இவரைப் போல இனி எவர் உண்டு .

எனக்கு இவர் தான் லோக குரு.

இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர். Image
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.

குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.

முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சியர் அலுவலகம் அமைக்க 60 ஏக்கர் நிலத்தை வழங்கியதும் இதே ஆதீனம் தான்.

புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும் மணக்குடி அருகே நிலம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய பேருந்து நிலையம் செயல்படும் இடமும் தருமை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
மேலும், பள்ளிகள், கல்லூரி மற்றும் மயிலாடுதுறை சுற்றுவட்டார மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதும்,

கொரோனா தொற்று காலத்தில் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கியது அல்லாமல்,
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியை கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான தற்காலிக மருத்துவமனை போல் மாற்றியதும் தருமை ஆதீனம் தான்,

ஊரடங்கு காலங்களில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஒவ்வொரு திருக்கோவில் தேவஸ்தானங்களிலும்
தினமும் அப்பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவு பெட்டலங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சைவ சமயப் பிரச்சாரங்களை தொடர்ந்து செவ்வனே செய்து வரும் நிலையிலும் தருமை குருமகா சந்நிதானம் அனைத்து மதத்தினரிடமும் மிகுந்த அன்பைப் பெற்றும் தலை சிறந்த ஆதீனமாக போற்றப்படுவதும்
தருமை ஆதீன குருமகா சந்நிதானத்தின் தனிச் சிறப்பு.

பாகுபாடின்றி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும்,

அரசு அதிகாரிகள், மற்றும் ஊடக நிறுவன முதலாளிகள் உட்பட தொழிலதிபர்கள், பலருடன் சமமாக பாவித்து அன்பை செலுத்தும்
தருமை குருமகா சந்நிதானம் அவர்களை தொடர்ந்து பல அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து ஆசி பெறும் நிலையில் இருந்து பெரும் பேறு பெற்றவர் ஆ்வர்.

வாட்ஸ்அப் பகிர்வு :

#குருவே_சரணம்

#திருச்சிற்றம்பலம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 20
#ஸ்ரீ_தட்சிணாமூர்த்தி

*தலையில் கிரீடம் அணிந்து 
காட்சி தரும் அபூர்வ 
தட்சிணாமூர்த்தி*

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி.

இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. Image
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார்.

தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார்.
அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.

அதன் படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது.
Read 6 tweets
Apr 20
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950 - களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீ மஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். Image
திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,

”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”
யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,
Read 14 tweets
Apr 19
#நென்மேலி

#பிண்டம்_வைத்த_பெருமாள்
#ஸ்ராத்த_ஸம்ரட்சண_பெருமாள்

எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள். Image
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்து கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி சிறு குறிப்பு.

நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
Read 15 tweets
Apr 18
#சொர்க்கம்

எது சொர்கம்?

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார்.

பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.

இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். Image
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.

மாலையில் வருவேன்.

அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.

நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.
Read 6 tweets
Apr 18
#சொர்ணபுரீஸ்வரர்

திருமண வரம் அருளும் 
சொர்ணபுரீஸ்வரர் கோவில் :

சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை 
பவுர்ணமி அன்று பூஜை 
செய்தால் திருமணத் தடை 
விலகி விரைவில் திருமணம் 
நடந்தேறும் என்பது 
பக்தர்களின் நம்பிக்கை. Image
இறைவனையே தன் 
கணவனாக நினைத்து 
வளர்ந்தாள் ஒரு மங்கை. 

தான் நினைத்தபடியே 
அவரையே மணந்து 
கொண்டாள்.

ஆம். இந்த அதிசயம் நடந்த 
தலம் தான் ஆற்றூர்.

இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். 
இங்கு அருள்பாலிக்கும் 
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.

மந்தாரவனேஸ்வரர் என்பது 
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப் 
பிறந்தவள் கயற்கண்ணி. 

அவள் தன் பெற்றோரால் 
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.

அவள் திருமண வயதை 
எட்டியதும், அவளுக்குத் 
திருமணம் செய்வதற்கான 
ஏற்பாடுகளைச் செய்தனர் 
பெற்றோர்.
Read 18 tweets
Apr 17
#சோம_வார_பிரதோஷம்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது.

சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். Image
சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் ( இன்று ) சிவ தரிசனம் செய்யலாம்.
 
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
நாள் முழுக்க நீர் ஆகாரத்தை  தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(