அருள்மிகு
ஶ்ரீ (தேவி, பூதேவி)
செங்கமலவல்லி தாயார் சமேத
ஶ்ரீ ராஜகோபாலசுவாமி  திருக்கோயில்,
(சதுர்வேதி மங்கலம்)
மணிமங்கலம்,
தாம்பரம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

1 Image
சுமார் 1000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலத்தில் பத்ம விமானத்தின் கீழுள்ள கருவறையில்,
நான்கு திருக்கரங்களுடன்,
ஶ்ரீ தேவி, பூதேவியுடன்
ஶ்ரீ ராஜகோபாலர் அருட்காட்சியளிக்கிறார்.

2
பொதுவாக, வலது கரத்தில் சக்கரமும்,
இடது கரத்தில் சங்கும்
வைத்திருக்கும் பெருமாள்,
இத்தலத்தில் வலது கரத்தில் சங்கும்,

3
இடது கரத்தில் சக்கரமும் ஏந்தியும், வலது கீழ் கரம் அபய ஹஸ்தம் காட்டியும், இடது கீழ் கரத்தில தண்டாயுதத்துடனும், திருமார்பில் மகா லட்சுமியையும் கொண்டவராக திருக்காட்சியளிப்பது வித்தியாசமான சிறப்பாகும்.

4
சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின்  மேலே பள்ளி கொண்ட கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. கிருஷ்ணருக்கான தலம் என்பதால் இவ்வாறு வடித்துள்ளனராம்.

5
ஒரு புராண நிகழ்வின்படி;
ஶ்ரீ கிருஷ்ணர், குருஷேத்ர போரின்போது வலது கையில் சங்கு வைத்து  ஊதியதின் அடிப்படையில் இங்கு இறைவன் வலது கரத்தில் சங்கு வைத்தபடி காட்சியளிக்கிறாராம்.
அதனாலேயே வலது கரத்தில் இருக்க வேண்டிய சக்கரம் இடது கரத்தில் இருக்கிறது.

6
கிருஷ்ணாவதாரத்தில்
இடையனாக இருந்து பசுக்களை மேய்த்ததால்
இவர், 'ஶ்ரீ ராஜகோபாலர்' எனப்பெயர் பெற்றார்.

செங்கமலவல்லி நாச்சியார் தனி சன்னதியில் திருக்காட்சியளிக்கிறார்.

7
ராமானுஜர் வழிபட்டுள்ள, இத்தல பெருமாள் சன்னதியின் சுற்றுச்சுவரில் காட்சி தரும்
ஶ்ரீ தட்சிணாமூர்த்தி சிற்ப வடிப்பு சிறப்பு.

8
வைகுண்ட ஏகாதசி மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில்,
தம்பதியர் கருத்தொற்றுமையுடன்
வாழ்ந்திடவும்,
கால்நடைகள்
நோயின்றி வாழ்ந்திடவும் நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு விசேஷம். 🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 22
தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?

ஆதிசங்கரர் நமக்கு வழி
காட்டுகிறார்.

பொதுவாக, நாம் "பக்தியோடு"
எதை கேட்டாலும், பகவான்
நமக்கு கேட்டதை தருவார்.
கேட்பதில் உயர்ந்த விஷயங்கள்
உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண
விஷயங்கள் உண்டு. Image
பிரார்த்தனை செய்தேன்,
நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
வேலை கிடைத்து விட்டது,
என்று சந்தோஷப்படுவது
எல்லாம், கோடீஸ்வரனிடம்
போய் 10 ரூபாய் வாங்கி
சந்தோஷப்படுவது போல ஆகும்.
முக்கியமாக, "நாம் தெய்வத்திடம்
என்ன கேட்க வேண்டும்?"
என்று வேதம் சொல்கிறது
என்று எளிதான ஸ்லோகங்கள்
மூலம் நமக்கு தர்மத்தை புரிய
வைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள்
பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க
வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை
குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
Read 29 tweets
Apr 22
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "அருள்மிகு உத்தமர் திருக்கோவில்."

"ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும்".

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

1 Image
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

2
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை.

3
Read 10 tweets
Apr 21
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். Image
" கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? " என்று அந்த மகானிடம் அவர் கேட்டார்.
அதற்கு அந்த மகான் " கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் "என்றார்.
அதற்குப் பக்தர் " அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை ?" என்று கேட்டார்.

அதற்கு அந்த மகான் " உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை " என்று பதிலளித்தார்.
Read 15 tweets
Apr 21
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது.
இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
Read 14 tweets
Apr 20
வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி
மூக்கில் பூமி உருண்டையாக தெரியும், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது Image
கலிலியோவுக்கும் கோப்பர் நிகஸுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த உண்மை இந்துக்களுக்கு தெரிந்தது

பூமி உருண்டை என்பது வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியருக்கு தெரிந்தது, அதுவும் போப்பாண்டவர் அப்படி சொன்னவர்களை முழங்காலில் நிறுத்தி தண்டித்த கதை எல்லாம் உண்டு
உலகம் இன்று சொன்னதை பல ஆயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் இந்துக்கள்

பன்றி வந்தது உலகை சுமந்தது என்பது நம்பிக்கைக்கு உட்பட்டது, ஆனால் அன்றே பூமி உருண்டை என்பது இந்துக்களுக்கு தெரிந்தது என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா?
Read 6 tweets
Apr 20
#சோறு

காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(