#சுற்றுலா
மனதை கொள்ளை கொள்ளும் மாவட்டமாக இருக்கும் தேனி அதிகம் செலவில்லாத சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் தான். தேனியில் மலைகள், அருவிகள், ஆன்மீக இடங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் தேனியை அடைவது எளிது. தேனியை பற்றி பார்ப்போம் Image
மேகமலை :
பச்சை பசேல் என கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் உள்ள மேகமலைக்கு செல்ல தேனியிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் பேருந்து, தேனியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம் Image
சின்ன சுருளி அருவி :
மேகமலையிலிருந்து கீழே பாய்ந்து, புத்துணர்ச்சியை ஊட்டும் அருவியான சின்ன சுருளி அருவிக்கு செல்ல காலை 7 முதல் மாலை 5 வரை அனுமதி உண்டு. தேனியில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் கடமலைக்குண்டு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் அமைந்துள்ளது. Image
சண்முகநதி அணை :
உத்தமபாளையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இராயப்பன்பட்டி ஊருக்கு அருகே இருக்கிறது 52 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை. இந்த அணைக்கு மேகமலை மலையில் இருந்து இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது. Image
கொழுக்குமலை தேயிலை தோட்டம் :
பட்ஜெட்டுக்கு ஏற்ற அற்புதமான சுற்றுலா தலமாக இருக்கும் கொழுக்குமலை போடி மெட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள சூர்யநெல்லி வழியாக செல்ல வேண்டும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அரசு அங்கீகரித்த ஜீப்புகளில் மட்டுமே செல்ல முடியும். Image
கொழுக்கு மலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டத்திற்குள் நுழைய கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும். காலை 7:00 முதல் மாலை 6:00 வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கொழுக்கு மலையில் இரண்டு கேம்பிங் இடங்கள் இருக்கின்றன. 2500.ரூ கொடுத்தால் போதும். Image
கொழுக்குமலையிலேயே டென்ட் அடித்து தங்கலாம். இரவு-காலை உணவும் உண்டு. இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். கொழுக்குமலையை யொட்டியிருக்கும் மீசைப்புலி மலைக்குச் செல்லும் பயணத்தை கேரள சுற்றுலாத்துறையே ஒருங்கிணைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.
சூரிய உதயத்தை பார்க்க விரும்புவர்கள் முதல் நாளே இடுக்கி அருகேயுள்ள சூர்யநெல்லியில் அறை எடுத்து தங்கி அதிகாலையிலேயே கொழுக்குமலைக்கு கிளம்பிவிடலாம். மூணாறு - தேனி பேருந்தில் பவர் ஹவுஸ் நிறுத்தத்துக்கு 16 ரூபாய் பயணக் கட்டணம். அங்கிருந்து சூர்யநெல்லிக்கு ஷேர் ஆட்டோவில் செல்லலாம். Image
வைகை அணை
ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையைச் சுற்றி மிக அழகான பூங்கா உள்ளது. உள்ளூர் மக்களால் 'சிறிய பிருந்தாவனம்” என அழைக்கப்படும் வைகை அணை தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது Image
பென்னிகுவிக் மணிமண்டபம்

கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை கட்டிய அவரின் நினைவாக தமிழ்நாடு அரசால் இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது. Image
குச்சனூர் சனி பகவான் கோயில்

குச்சனூர் என்ற கிராமத்தில் ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. Image
குரங்கனி

அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. Image
சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வணிகப்பாதை மற்றும் தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது. தீ விபத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன. Image
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில்

வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அம்மனை பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் கௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார் Image
மேகமலை

ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாகச் சமைத்துக்கொடுப்பார்கள். Image
இறைச்சல் பாறை அருவி

ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவக் குணம் கொண்டது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. Image
சொந்த வாகனத்தில் செல்பவர்கள், மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். Image
மேகலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு எனத் தனியாக காட்டேஜ்கள் இருந்தாலும், பேரூராட்சியின் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. எனினும் போதுமான விடுதிகள் இல்லாததால் நன்கு விசாரித்து செல்ல வேண்டும். அப்புறம் என்ன தேனி மாவட்டத்திற்கு ஜம்முன்னு ஒரு விசிட் போடலாமே? Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with உண்மை கசக்கும்

உண்மை கசக்கும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Unmai_Kasakkum

Dec 20, 2023
#கலைஞர்_என்ன_செய்தார்

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கி கொண்டே இருந்தார்

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார்

பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்

ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்

லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம் ஆக்கினார்

வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார் Image
டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.

மவுண்ட் ரோட்டை அண்ணா சாலை ஆக்கினார்.

கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில் கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார் கண்டக்டர்.

காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்.
குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அடையாளப்படுத்தினார்.

தமிழகம் எங்கும் எத்தனை மேம்பாலங்கள்.

எத்தனை சுரங்கப்பாதைகள். எத்தனை சமூக அரங்குகள்

எத்தனை உழவர் சந்தைகள்.
எத்தனை சமத்துவபுரங்கள்.
இதற்கு இடையிலே தான் குறளோவியம் படைக்கிறார்.

பூம்புகார் படைக்கிறார்.
Read 9 tweets
Oct 26, 2023
கேள்வி: 1967-76 ஆட்சிக் காலத்தில் #திமுக ஏன் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டவில்லை.?

பதில்: 1970-களில் மத்திய அரசு ஒரு விதி கொண்டு வந்தது.

அதாவது, இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தூரம் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். Image
மருத்துவ வசதிகள் ஒரு சில நகரங்களில் குவியாமல் பல நகரங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விதி உருவானது.

அந்த காலத்தில் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் மருத்துவ கல்லூரிகள் இருந்தன.

சென்னை - 3 கல்லூரிகள்
4. செங்கல்பட்டு
5. சேலம்
6. கோவை
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. நெல்லை
இவற்றைத் தாண்டி 100 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிய கல்லூரி கட்ட தமிழ்நாட்டில் இடம் இல்லை.

திமுக அங்கம் வகித்த 1989 வி.பி.சிங் ஆட்சியில் இந்த விதி 10 கிலோ மீட்டர் என்று குறைக்கப்பட்டது

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மருத்துவ கல்லூரி கட்டுவது என்று திமுக அரசு கொள்கை முடிவு எடுக்கிறது
Read 4 tweets
Jul 12, 2023
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பெரியாரிடம் ஒரு பிராமணர் கேட்கிறார்.

"எண்ணிக்கையில் 2% உள்ள பிராமணர்களை எதிர்க்கிறீர்களே. இது நியாயமா?

பெரியார்: உங்களுக்கு சந்தைக்கு போகும் பழக்கம் உண்டா?

ஐயர்: போவேன்

பெரியார்:சந்தைல ஆடு கோழினு வாங்குவீங்களா?
ஐயர்: இல்லைங்க நாங்க சைவம் காய்கறி மட்டும் தான் வாங்குவேன்

பெரியார்: பூண்டு வெங்காயம் வாங்குவிங்களா?

ஐயர்: இல்லைங்க அது எங்களுக்கு ஆகாது!

பெரியார்: அப்படினா குறைந்த காசுதான் எடுத்துட்டு போவிங்க! அந்த பணத்தை சுருக்கு பைல போட்டு வெளிய தொங்கவிட்டு போவிங்களா? அப்படித்தானே?"
ஐயர்: அது எப்படிங்க சந்தைல திருடனுங்க அடிச்சிட்டா?

பெரியார்: அதெப்படிங்க சந்தைக்கு வர்ற எல்லாரும் திருடனா?

ஐயர்: இல்லை ஒன்றிரண்டு பேர் தான்!

பெரியார்: ஆயிரம் பேர் கூடுற எடத்துல எப்படி அந்த ஒருத்தன் ரெண்டு பேருக்கு பயந்து பணத்தை பாதுகாக்க நீங்க நினைக்கிறிங்களோ,
Read 4 tweets
Jul 11, 2023
திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே! தேசியவாதிகளே! தமிழ் தேசிய குஞ்சுகளே! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

1. 1895-ல் சென்னையில் நடைபெற்ற நாடக விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?
2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மாகாந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் என்பதும், 1925ல் #பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பின்தான் அவர் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பதுதெரியுமா.?
3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் #தந்தைபெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
Read 17 tweets
Apr 25, 2023
இந்த புகைப்படங்கள் நினைவிருக்கின்றதா?
கலைஞர் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அது கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் Professional கோர்ஸ் அனைத்திற்கும் நுழைவுதேர்வு கிடையாது என்று அறிக்கை அளிக்கப்பட்டது(மருத்துவம், பொறியியல் படிப்புகள் உட்பட) Image
இந்த நுழைவு தேர்வு இல்லாமையால் என்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று சர்வே நடத்தப்பட்டது(அதாவது 2007 முதல் 2015 வரை) அதில் பல ஆச்சரியங்கள் சமூக நீதியின் வெற்றி எப்படி MBC, SC, ST சமூகத்தில் இருந்து பல முதல் தலைமுறை பட்டதாரிகள் சாதித்து உள்ளார்கள் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக பிரான்டலைன்(Frontline) பத்திரிகையில் ஒரு அட்டகாசமான கட்டுரை வந்துள்ளது. (இணைப்பு கீழே)
இன்று நீட் உட்பட பல நுழைவு தேர்வால் எப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு பாஜக அதிமுக கூட்டணி நம்மை அடிமை செய்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
Read 4 tweets
Apr 18, 2023
கவனம் செலுத்தும் திமுக. மகிழும் கைவினைஞர்கள்

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது

🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்

👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(