அன்பெழில் Profile picture
May 1 8 tweets 4 min read Twitter logo Read on Twitter
#சரணாகதி_வைபவம் #ஶ்ரீவைஷ்ணவம்
(ஸ்ரீ உ.வே. D.S.தாதாசார்ய ஸ்வாமி வைகுண்டவாசி)
சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?
சரணாகதியால் நாம் #க்ருதக்ருத்யர் ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. நமக்கு மோக்ஷம் நிச்சயம். நம்முடைய கர்மம் எப்படி என்றால், Image
ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்ம பலத்தை அனுபவித்தாலும் முடிவு பெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்து விடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுசில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம்
நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு #ஸஞ்சித_கர்மம் என்று பெயர். இவைகளுக்குப் பெருமாள் பேரேடு போட்டு வைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்க வேண்டி
இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படி எடுத்த கர்மத்துக்கு #ப்ராரப்த_கர்மம் என்று பெயர்.இப்படி ப்ராரப்த கர்மத்தில் சில பாகம் (அதாவது 3 ஜன்மம்) அனுபவித்தாகி விட்டது. 4வது ஜன்மம் இப்போது நடக்கிறது. இதற்குப் பெயர் #அப்யுபகத_ப்ராரப்தம். இன்னும் வரவேண்டியதான 5வது ஜன்மத்தைக்
கொடுக்கிற பாகத்துக்கு #அநப்யுபகத_ப்ராரப்தம் என்று பெயர்.
இனி ஜன்மம் எடுக்கிற காலங்களில் செய்கிற கர்மத்துக்கு #ஆகாமி_கர்மம் என்று பெயர். நம்முடைய சரணாகதியால் எது தொலைகிறது?
#ஸஞ்சித_பாபம் பூராவும் போய் விடுகிறது. ப்ராரப்தத்தில் #அநப்யுபகதம் பூராவும் போய் விடுகிறது. #அப்யுபகதம்
மட்டும் நடக்கிறது.இது நம்முடைய சரணாகதியால் போகவில்லை. ஏன்?
நம்முடைய ப்ரார்த்தனையில்
‘ஏதத் தேஹாவஸாநே மாம்’ என்று கேழ்க்கிறோம். ததிபாண்டன் உடனே மோக்ஷம் வேண்டுமென்று கேட்டான்; உடனே மோக்ஷம் போய்விட்டான்.
இனி ஆகாமி பாபம் என்ன ஆகிறது என்று பார்ப்போம். அதாவது சரணாகதிக்குப் பிற்பாடு நாம்
இப்போது இருக்கிறோமே, இந்தக் காலத்தில் நாம் செய்கிற கர்மங்களுக்குப் பலம் என்ன?
நாம் செய்கிற கர்மம் இரண்டு விதம் - புத்தி பூர்வமானது, தன்னறியாமல் செய்வது. நம்மைறியாமல் செய்கிற கர்மம் நம்மை ஒட்டாது. புத்திபூர்வமான கர்மமோ என்றால், நாம் பரமபதத்தில் போய்ப் பெருமாளுக்குக் கைங்கர்யம்
செய்யவேணுமென்று ஆசைப்பட்டே சரணாகதி செய்திருக்கிறபடியால் அந்தக் கைங்கர்யத்தை இங்கே விடமாட்டோம்.

ஆசார்யன் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 3
#ஆன்மீக_அறிவியல்
விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசு Image
பட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு Image
ஒரு முறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் Image
Read 14 tweets
May 3
#மதுரை_ஸ்ரீமீனாட்சிஅம்மன்_பட்டாபிஷேகம் #மீனாட்சி_அம்மன்_திருக்கல்யாணம் #சித்திரை_திருவிழா #கள்ளழகர்_ஆற்றில்_இறங்குவது
முன்பு மதுரையில் சைவப்பிரிவினர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தையும் , மீனாட்சி பட்டாபிஷேகத்தையும் சேர்த்து திருவிழாவாகவும் வைணவப்பிரிவினர் அழகர்கோவிலில் ImageImage
இருந்து ஸ்ரீ கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் திருவிழாவையும் தனித்தனியே கொண்டாடி வந்தனர். அந்த காலத்தில் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார்.
மாசியில் மீண்டும் பட்டத்து அரசியாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் பொறுப்பேற்கும் திருவிழா மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. மன்னர் #திருமலை_நாயக்கர் இந்த இரண்டு விழாகளையும் ஒருங்கிணைத்து, சித்திரை மாதத்தில், சித்திரை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்
Read 22 tweets
May 2
The differences are how the two schools interpret prapatti, surrender to God, and how this has led to a clear schism on cultural levels. The Vadakalais rest their philosophy on the Sanskrit Vedas, which suggest that existence is rooted in the performance of certain actions for
achieving a certain result. So, it is said that even though Sriman Narayana is kind, he waits for the individual to show some sign of his/her surrender to Him before acting to save one from the sorrows of life. So, prapatti is an action leading to a whole new set of actions,
living a life of strict adherence to Vedas in order to show Him that we are ready to leave the cycle of reincarnation to serve Him in Vykunta.
The Tenkalais place great emphasis on the Azhwars devotional literature, which collectively is called the nAlAyira divya prabhandam.
Read 6 tweets
May 2
#பக்தி #தும்பைப்பூ
ஒரு விலைமகள் தன் தொழிலுக்கென தர்மம் வைத்திருந்தாள். அவள் தினமும் காலையில் எழும் போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டு இருக்கும். அதை கையில் எடுப்பவள், இந்த அச்சாரத்தை வைத்தவர் இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு Image
வரலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடு தான். அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒரு போதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார்.
வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள் என்று அனுப்பி விட்டாள். வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், பெண்ணே, உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால்
Read 12 tweets
May 2
#திருநாராயணபுரம்
#மேலக்கோட்டை
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மைசூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜர் திருப்பணி செய்த தலம். அடிவாரத்தில் திருநாராயணரும் மலை மீது யோக நரசிம்மரும் காட்சி Image
தருகிறார்கள். உத்சவர் பெயர் செல்வநாராயணர் (செல்வபிள்ளை). ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சித் தருகிறார். தாயார் பெயர் ஶ்ரீ யதுகிரி நாச்சியார். தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தி. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு Image
வருவதாக ஐதீகம். மகா விஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு விக்ரகம் ஒன்றை பெற்றார் பிரம்மா. அதை தனது மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அதை பிரதிஷ்டை செய்தார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த
Read 18 tweets
May 2
#MahaPeriyava
Author: Sri Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There was a large crowd and a long queue at Sri Kanchi Matham many years ago in the Chittirai month on the New Year’s Day during the morning hours. A sixteen year Image
old boy was among those waiting in the queue, which moved slowly. He reached near the stage where Mahaswamiji was seated. Acharyal keenly looked at him for some time. He prostrated at once before the sage, his eight limbs touching the ground. He did not get up. Swamiji waited
for sometime and then said, "Get up, get up my child!"

He got up, raised his hands over his head and joined the palms. The stirrings of bhakti hadn't left him yet. Tears were flowing down his eyes. Swamiji called the youth near him. He obeyed, his palms still joined. Swamiji
Read 42 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(