அன்பெழில் Profile picture
May 2 18 tweets 6 min read Twitter logo Read on Twitter
#திருநாராயணபுரம்
#மேலக்கோட்டை
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மைசூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜர் திருப்பணி செய்த தலம். அடிவாரத்தில் திருநாராயணரும் மலை மீது யோக நரசிம்மரும் காட்சி Image
தருகிறார்கள். உத்சவர் பெயர் செல்வநாராயணர் (செல்வபிள்ளை). ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சித் தருகிறார். தாயார் பெயர் ஶ்ரீ யதுகிரி நாச்சியார். தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தி. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு Image
வருவதாக ஐதீகம். மகா விஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு விக்ரகம் ஒன்றை பெற்றார் பிரம்மா. அதை தனது மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அதை பிரதிஷ்டை செய்தார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த
வரத நந்தினி என்னும் பக்தை மூலவரின் திருவடியில் இருக்கிறாள். 12ம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங்
காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து #திருநாராயணபுரம் என அழைக்கும்படி அருளினார். ஆனால் இவர் இங்கு வரும் முன்பே, மலைமேல் பிரகலாதனால் பிரதிஷ்டை செய்ததாகப் புராணங்கள் சொல்லும் நரசிம்மர் கோயில் பிரபலமாகவே இருந்துவந்துள்ளது. 400 படிகள் மலை எறினால்
அங்கு #யோகநரசிம்மருக்கு கோயில் உள்ளது. இவரது சன்னதிக்குச் செல்ல மேலும் ஒன்பது படிகள் உள்ளன. இவரது சன்னதி முன் படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள் உள்ளன. இந்த படிகளில் கால் வைத்தாலே நமது கிரக தோஷங்கள் நீங்கும். விஷ்ணு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரத்தில் இரணியனைக் கொன்றார். தன் தந்தை இறக்க Image
காரணமாக இருந்த பிரகலாதனுக்கு பிதுர் ஹத்ய தோஷம் ஏற்பட்டது. இதைப்போக்க பிரகலாதன் இங்கே தவம் புரிந்தார். யோகநிலையில் நரசிம்மர் காட்சி அளித்து தோஷத்தை போக்கினார். அவரே இங்கு எழுந்தருளி இருக்கிறார். மலையில் இராமானுசரின் பாதம் உள்ளது.

இராமானுசர் தாம் தங்கியிருந்த காலத்தில் நியமித்த
தினசரி, வாராந்திர, மாதந்திர, வருடாந்திர வழிபாட்டு நியமங்களையே இன்றும் இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி,ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் இந்த நாட்களில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில்
நடைபெறும் #வைரமுடிச்_சேவை விழாவில், இராமானுஜர் சந்நிதிக்கு முன்னால் உத்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக்கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது. முதலில் கருடாழ்வார் கோயிலை
சுற்றி வலம் வருகிறார். பிறகு வைரமுடி பல்லக்கில்   ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றிவருகின்றது. இந்த வைரமுடி கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த கிரீடம் பெருமாளுக்கு அணிவிக்கப் படுகிறது பின் தங்கத்தாலான கருட Image
வாகனத்தின் மீது நான்கு மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப் படுகிறது. கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு   பல்லக்கில் வெளியே வருகிறார் சம்பத் குமாரர். இவ்வைரமுடிச் சேவை இப்போதும் இரவுப்பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டு விடுகிறது. Image
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது 'வைநதேய முடி' என்றழைக்கப்பட்டு, 'வைநமுடி' என சுருங்கி பின்னர் #வைரமுடி என மருவியுள்ளது.
சாதிபேதங்களை எதிர்த்த ஸ்ரீ இராமானுஜர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் (திருமகளின் பிள்ளைகள்) என
அழைத்தத்தோடு அவர்களுக்கு வழிபாட்டிலும் சமூகத்திலும் சமமான இடமளித்தார். ஒருமுறை உத்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர் மீட்டுக் கொண்டு வரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடம் இருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி Image
உத்சவ மூர்த்தியையும் ஸ்ரீ இராமானுஜரையும் காத்தனர். இதற்கு நன்றி நவிலும் வண்ணம் இராமானுசரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் #திருக்குலத்தார்_உத்சவம் மிகப் பிரம்மாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ இராமானுஜர் தன் 80 ஆவது வயதில்
திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுஜர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை வடிக்கச் செய்தார். இந்த விக்ரகம் இராமானுஜர் கைகூப்பி வணங்கி
விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச் செய்தார். பின்பு சக்தியூட்டிய விக்ரகத்தை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். Image
இதுவே #தமர்_உகந்த_திருமேனி என்று அழைக்கப் படுகிறது. இங்கு ஸ்ரீராமானுஜர் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் பேசும்  யதிராஜர் எனப்படுகிறார். இங்குள்ள இசை தூண் கலை நுட்பத்துடன்  செதுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கல்யாணி தீர்த்தங்கரையில் பிந்துமாதவன், Image
நாராயணன், லட்சுமி நரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன. நிச்சயம் தரிசிக்க வேண்டிய தலம்.
தொடர்புக்கு தொலைபேசி எண்
08236- 299839.
ஸ்ரீ யோக நரசிம்மர் திருவடிகளே சரணம்
திருநாராயணர் பொற்பாதம் பணிவோம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 4
#MahaPeriyava
Author: Raa. Venkatasamy (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years back. The bank officials Image
of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their
own building in front of the Matham. And whatever shops were required to be vacated for this purpose, alternate places were compulsorily to be given to the shopkeepers. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood
Read 12 tweets
May 4
#அக்னி_நட்சத்திரம்
இன்று 04.05.2023 தொடங்குகிறது.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் அதிதேவதை அக்னி. சித்திரை மாத பிற்பகுதி மற்றும் வைகாசி மாத முதல் 2 வாரங்கள் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் இது Image
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. ஜோதிடப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது சூரியன் உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படுகிறது. சூரியன் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில்
சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களின் பெயர்தான் அக்னி நட்சத்திரம் ஆகும். வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. புராணத்தில் அக்னி நட்சத்திர காலம் உருவான காரணம் சொல்லப்பட்டுள்ளது. அக்னி தேவன் தீராத வயிற்றுப் பசியால் அவஸ்தைப்
Read 9 tweets
May 4
#மகாபெரியவா ஒரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான். அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், “நீ குளித்தலை சங்கரன் தானே? சௌக்கியமா இருக்கியா” என்று விசாரித்தார்.

“உங்க ஆசீர்வாததுலே சௌக்கியமா இருக்கேன் பெரியவா!” Image
என்றான் சங்கரன்.

“அது சரி, உனக்கு இப்போ என்ன வயசாகறது ?”

“30 பெரியவா” என்றான் சங்கரன்.

உடனே பெரியவா, “கல்யாணம் பண்ணிக்காம இப்படியே பிரம்மச்சாரியா காலத்தை ஒட்டிடலாமுனு தீர்மானிச்சுடையாக்கும்!” என்று சிரித்தார்.

“ஆமாம் பெரியவா” என்றான் சங்கரன்.

“சரி சரி. நீ இப்போ
வந்திருக்கறதிலேயே ஏதாவது விசேஷம் உண்டா? விஷயம் இல்லாம நீ வர மாட்டியே” என்று சொல்லி விட்டு சிரித்தார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “ஆமாம் பெரியவா ! எனக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.

ஸ்வாமிகள், “அப்படியா! சொல்லு, சொல்லு நோக்கு
Read 25 tweets
May 3
#ஆன்மீக_அறிவியல்
விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசு Image
பட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு Image
ஒரு முறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் Image
Read 14 tweets
May 3
#மதுரை_ஸ்ரீமீனாட்சிஅம்மன்_பட்டாபிஷேகம் #மீனாட்சி_அம்மன்_திருக்கல்யாணம் #சித்திரை_திருவிழா #கள்ளழகர்_ஆற்றில்_இறங்குவது
முன்பு மதுரையில் சைவப்பிரிவினர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தையும் , மீனாட்சி பட்டாபிஷேகத்தையும் சேர்த்து திருவிழாவாகவும் வைணவப்பிரிவினர் அழகர்கோவிலில் ImageImage
இருந்து ஸ்ரீ கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் திருவிழாவையும் தனித்தனியே கொண்டாடி வந்தனர். அந்த காலத்தில் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார்.
மாசியில் மீண்டும் பட்டத்து அரசியாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் பொறுப்பேற்கும் திருவிழா மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. மன்னர் #திருமலை_நாயக்கர் இந்த இரண்டு விழாகளையும் ஒருங்கிணைத்து, சித்திரை மாதத்தில், சித்திரை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்
Read 22 tweets
May 2
The differences are how the two schools interpret prapatti, surrender to God, and how this has led to a clear schism on cultural levels. The Vadakalais rest their philosophy on the Sanskrit Vedas, which suggest that existence is rooted in the performance of certain actions for
achieving a certain result. So, it is said that even though Sriman Narayana is kind, he waits for the individual to show some sign of his/her surrender to Him before acting to save one from the sorrows of life. So, prapatti is an action leading to a whole new set of actions,
living a life of strict adherence to Vedas in order to show Him that we are ready to leave the cycle of reincarnation to serve Him in Vykunta.
The Tenkalais place great emphasis on the Azhwars devotional literature, which collectively is called the nAlAyira divya prabhandam.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(