Muthukumar Subbaiah Profile picture
May 2 21 tweets 3 min read Twitter logo Read on Twitter
இந்திய ராணுவம் செய்த மிக துணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது. கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது.

இந்திய விமான படையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை பாராட்டுகின்றது...!
இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன‌...!

நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது. இந்திய ராணுவ படை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல. காரணம்,...
முறையான விமான நிலையங்களில் வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன‌.

சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான் பகுதி மூடபட்டு, விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது. அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது.
வேறு எல்லா நாடுகளும் அங்கே திணறின. விமான நிலையத்தில் சண்டை நடப்பதால், விமானம் சாத்தியமில்லை. இன்னும் பல வழிகளும் சாத்தியமில்லை.

பல நாட்டு மக்கள் இப்படி சிக்கி கொண்டார்கள்.

இந்தியர்களும் 121 பேர் இப்படி சிக்கிகொண்டார்கள், இவர்களை மீட்பது பெரும் சவானாலது.
பிரதமர் மோடி இந்திய விமான படைக்கு முழு உரிமை அளித்தார். இதனால், உற்சாகததுடன் இந்திய விமானபடை களமிறங்கியது. அவர்களோடு இந்திய உளவு துறையும், வெளிநாட்டு அமைச்சகமும் இணைந்தன‌.

சூடானில் வெளிநாட்டு விமானம் பறக்க முடியாது பறந்தால் இரு தரப்பும் அச்சத்தில் தாக்கலாம்,...
அதை தாண்டி முக்கிய விமான நிலையம் சீரழிந்து கிடக்கின்றது. இந்நிலையில் சூடானிய அனுமதி இல்லாமல் இந்தியர்களை மீட்டு வரவேண்டும்.

இந்திய உளவு துறை சூடானை ஆராய்ந்தது. அப்பொழுது தலைநகரை தாண்டி 50கிமி தொலைவில் ஒரு ஆளில்லா கை விடபட்ட விமான நிலையம் இருப்பது தெரிந்தது.
அங்கே விமானத்தை இறக்கலாம். ஆனால், சிக்கல் பலவகை

முதலில் தரையில் யாருமே இல்லை, மின்சாரம் இல்லை, விளக்கு இல்லை, ஏர் டிராபிக் எனப்படும் வழிகாட்டுதல் இல்லை, இங்கே விமானம் இறங்கினாலும் ஏறினாலும் ஆபத்து அதிகம். அப்படியே விமானம் வந்தாலும், சூடான் அனுமதிக்காது.
அவர்களை மீறித்தான் ரகசியமாக வரவேண்டும். அப்படி வரும்பொழுது, இந்திய விமானம் பறந்து செல்ல பெட்ரோல் நிரப்ப வழி இல்லை.

இப்படி ஏக சிக்கல்கள்,...

முதலில் இந்திய விமானபடை, தன் கமெண்டோக்களுடன் பெரிய விமானம் ஒன்றை சவுதி ஜெட்டா நகருக்கு அனுப்பியது.
அங்கிருந்து சூடான் பக்கம் என்பதால், பெட்ரோல் ஒரு முறை நிரப்பினால் போதுமானது.

பரபரப்பான காட்சிகளை இந்திய விமானபடை மிக ரகசியமாக செய்தது. அந்த 121 பேரும் ஓசைபடாமல் மாலை புறப்பட்டு, அந்த ஆளில்லா விமான நிலையம் அருகே மறைந்திருந்தார்கள்.
அதன் பின் தொடங்கியது, இந்திய விமானபடை ஹெர்குலிஸ் ரக விமானத்தின் சாதனை...!

வெளிச்சமே இல்லாமல் இருளில் பறந்தது விமானம், விளக்கே இல்லாமல் பறந்ததால் சூடானியரின் பார்வைக்கு தெரியாது.
அப்படியானால் பைலட்டுகள் எப்படி விமானத்தை செலுத்தினர் என்றால், இந்தியாவிடம் இப்போது இரவில் பார்க்கும், தாக்கும் உபகரணங்கள் உண்டு. மேற்கொண்டு செயற்கைகோள் வழி காட்டலில் இந்திய விமானம் இருட்டில் சரியாக பறந்தது...
விமானிகள் இரவில் சாமார்த்தியமாக விமானதை இறக்கினார்கள், என்சின் நிறுத்தபடவில்லை.

விமான கதவு திறக்கபட்டு இந்திய கமெண்டோக்கள் ஓடி சென்று, 121 பேரையும் மின்னல் வேகத்தில் விமானத்தில் ஏற்றி கிளம்பினார்கள்.

விமானம் தரையில் நின்ற நேரம் 7 நிமிடங்கள்.
மின்னல் வேகத்தில் கிளம்பிய விமானம், சவுதி ஜெட்டாவில் தரையிறங்கியது. பின் இந்தியர்கள் நாடு திரும்பினார்கள்.

சம்பவம் உலக அரங்கில் பெரும் திகைப்போடு பார்க்கபடுகின்றது.

எந்த நாடும் இஸ்ரேலை தவிர இப்படி சவால் எடுத்ததில்லை, அதிரடி காட்டியதில்லை, இந்தியா அதனை செய்திருக்கின்றது.
இதை செய்தது ராணுவ விமானம் எனும் வகையில், இந்திய ராணுவம் எப்படி மேம்பட்டிருக்கின்றது என்பதை அறிந்த பாகிஸ்தான் நடுங்கி கொண்டிருக்கின்றது. சீனா சத்தமே இல்லை...

இந்த நடவடிக்கை சவால் அதிகம், பெரும் ஆபத்து. விமானம் சிக்கினாலொ இல்லை, அந்த போராளிகள் சூழ்ந்தாலோ பெரும் சொதப்பல்.
ஒவ்வொரு திட்டமாக மிக நுணுக்கமாக ஆனால், தைரியமாக சவாலை மீறி வகுக்கபட்டு நிறைவேற்றபட்டிருக்கின்றது.

மோடியின் இந்தியா, உலகின் மாபெரும் சாகசத்தை செய்திருக்கின்றது.

ஆச்சரியம் என்னவென்றால், இது நடந்தது சனி கிழமை, ஏப்ரல் 29-2023 அன்று.
இது பற்றி இந்திய ஊடகம் மூச்சு விடவில்லை. மோடியும் பேசவில்லை.

ஏன் பேசவில்லை..?

அதுதான் ராஜதந்திரம், உலகமே இனி பேசபோகும் விஷயத்தை நாம் ஏன் முதலில் சொல்லவேண்டும்...?

உலகெல்லாம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பாராட்டு மழை கொட்டபடுகின்றது.
மோடி இஸ்ரேலிய பிரதமர்களை போல வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.

தன் மக்களை காக்க, மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பாஜக அரசு நிரூபித்திருக்கின்றது...!

இந்த சாதனையினை செய்த விமானி மற்றும் குழு தலைவர் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடபடவில்லை.
நிச்சயம் விருதுகளுக்காக அவர்கள் பெயர் அறிவிக்கபடும் அப்போது தெரிந்துகொள்ளலாம்.

மாபெரும் சாதனையினை இந்திய விமானபடை செய்திருக்கின்றது. ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்தி, கம்பீரமாக அவர்களை பெருமையுடன் வாழ்த்த வேண்டிய நேரமிது...!
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே, இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..." என சாதித்திருக்கின்றது மோடி அரசு...

இந்தியா வல்லரசு பட்டத்தை தொட்டுவிட்ட தருணமிது...
ராஜிவ் கொலையாளிகள் பெங்களூர் அருகே பதுங்கிய போது, டெல்லியில் இருந்து கமோண்டோக்கள் வர இரு நாட்களானது.

மும்பை தாக்குதலின் போது, டெல்லியில் இருந்து கமாண்டோக்க்கள் வர ஒரு நாளானது.
மோடி ஆட்சியில், 7 நிமிடத்தில் சூடானில் இருந்து இந்தியர் மீட்கபடுகின்றனர் என்பதில் தெரிகின்றது மோடி என்பவரின் ஆட்சி எத்தனை மடங்கு தேசத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது எனும் சரித்திர சாதனை...!

#JaiHind🔥

🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Muthukumar Subbaiah

Muthukumar Subbaiah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @smkumarlakshmi

Apr 28
கோபாலபுர குடும்ப ஆடிட்டர் சண்முகராஜை IT அதிகாரிகள் விசாரித்ததன் அடிப்படையிலும் G-Square அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட லாக்கரில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு முக்கிய ஊழல் அம்பலமாகி உள்ளது...!
அதாவது தமிழ்நாட்டில் மணல் கொள்ளை மாபியாவாக இருப்பவர் திமுக குடும்ப பினாமியாக உள்ள கரிகாலன். ஒவ்வொரு வருடமும் மணல் கொள்ளை மூலம் இவருக்கு வரும் மாமூல் மட்டும் 900 கோடிகள்(எதிர்க்கட்சிக்கு 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் பங்கு கொடுத்தது போக-அதாவது ஆளுங்கட்சி 60 எதிர்க்கட்சி 40).
இந்த 900 கோடி தொகையை இவர் திமுக MLA அண்ணா நகர் மோகனிடம் ஒப்படைப்பார்.

அதன் பிறகு இந்த தொகை கோபாலபுர குடும்ப ஆடிட்டரான சண்முகராஜிடம் கொடுக்கப்படுகிறது.
Read 8 tweets
Apr 21
விஜயகாந்தை திமுக மற்றும் ஊடகங்கள் சேர்ந்து அரசியல் கோமாளி ஆக்கியது போல அண்ணாமலையை அரசியல் கோமாளியாக்க திமுக, அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். நிச்சயமாக இவர்களுடைய நோக்கம் நிறைவேறாது...!
காரணம் விஜயகாந்த்-க்கு இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் நல்ல நோக்கம் மட்டுமே இருந்ததே தவிர, சப்ஜெக்ட் நாலேஜ் கிடையாது. ஆனால், அண்ணாமலை அப்படி அல்ல தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளில் சப்ஜெக்ட் நாலேஜ் அதிகம் உள்ளவர் அவர்தான் எனும் நிலையில் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது...
1. 2022-ம் வருட பொங்கல் தொகுப்பு ஊழல் நடந்திருக்குன்னு அண்ணாமலை தலையிட்டார்.

நடந்த தவறுக்கு வருந்துகிறோம். விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
Read 9 tweets
Feb 23
ஈரோடு இடைத்தேர்தல் கேவலங்கள்,...

போகிற போக்கை பார்த்தால், அதிமுகவே டெபாசிட் வாங்குமா என்று தெரியவில்லை. ஆடிக்காற்றில் அம்மி பறந்தாலும் ஆச்சரியம் இல்லை. திமுகவின் பணம் சூறாவளியை போல் சுழற்றி அடிக்கிறது. எல்லா பணக்கார ஓட்டல்களிலும் சாப்பாடு காலி. எல்லா லாட்ஜிலும் ரூம் ஃபுல்.
ஒட்டு மொத்த தமிழக திமுகவும் ஈரோட்டில் தான் டெண்ட் அடித்துள்ளது.

பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்து மானம் காத்தார் அண்ணாமலை. தனித்து போட்டியிட்டு 1000 வாக்குகளுக்கு கீழே சென்றிருந்தால், நிலைமை படு கேவலமாக போயிருக்கும்.
தனித்து போட்டியிட வேண்டும் என்று சொன்ன சங்கிகள் வாயடைத்து போய் உள்ளனர்.

மிகக்கேவலமான கேலிக்கூத்து நடக்கிறது. பணம் கொடுத்தால் மக்கள் மலத்தை கூட தின்பார்கள் என்று திமுக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இவ்வளவு கேவலமாக மக்களை யாரும் எக்ஸ்போஸ் செய்ததில்லை.
Read 4 tweets
Feb 22
#ஈஷா -வை பத்தி தெரிஞ்சா பேசுங்க, இல்லன்னா அமைதியா இருங்க.
எவனோ மதமாற்ற குரூப் அடிச்சு விடுறது தூக்கிட்டு ஆடாதீங்க.

அப்படிபட்ட செய்திகளுக்கு உண்மையாவே ஆதாரம் இருந்திருந்தா, மதமாற்ற குரூப் நம்மள மாதிரி பேஸ் புக்லயும், சத்திரம் சாவடிலயும் வதந்தி பரப்பிட்டு உக்காந்திருக்க மாட்டான்.
நேரா கோர்ட்டுக்கு போய், ஈஷாவ ரெட்டை தாழ்பாள் போட்டு இழுத்து பூட்டியிருப்பான்.

கோர்ட்டுக்கு போயும் ஒன்னும் வேலை ஆவலன்னு தான், நம்ம ஆளுங்கள வெச்சே ஈஷா மேல புரளி கிளப்பிட்டு திரியுறாங்க.
ஈஷா மேலான புரளிகளுக்கு, மீடியா துணை போறது கூட வழக்கமா மத்த நிறுவனங்கள் மாதிரி கவர் குடுக்கும் பழக்கம், ஈஷா கிட்ட இல்லேன்றதால தான்.

இவங்க சொல்ற வனப்பகுதி ஆக்கிரமிப்பு, ஈஷாவோட கட்டுப்பாட்டுல இருக்குற,...
Read 13 tweets
Jan 24
கோகோ கோலா கோகா 1980-களில் இந்தியாவுக்கு வந்தது. 11 குளிர்பான பிற இந்திய பிராண்டுகளை கைப்பற்றியது. மீதமுள்ளவை பெப்சியால் எடுக்கப்பட்டது.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை..!!

அமேசான் ஒவ்வொரு நகரத்தையும் விட்டு வைக்கவில்லை.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை..!!
ப்ளூ டார்ட், டி.எச்.எல் & ஃபெடெக்ஸ் போன்ற கூரியர் சேவை வந்து தங்கள் விமானங்களையும் கொண்டுவந்தது. இப்போது முழு வியாபாரமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பும் இல்லை, கூச்சல் இல்லை.

சீன & கொரிய மொபைல்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை.!
நெஸ்லே, மேகி, ஐ.டி.சி, எச்.யூ.எல், பெப்சி போன்றவை பண்ணைத் துறையில் நுழைந்தன.

எதிர்ப்பு, கூச்சல் இல்லை..!!

4 சக்கர வாகன துறையில் எம்.எஃப்.ஜி, ஹூண்டாய் போன்றவையும், இரு சக்கரவாகன துறையில் ஹோண்டா, சுசுகி ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

எதிர்ப்பு இல்லை, கூச்சல் இல்லை..!!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(