பிடிசாம்பல் Profile picture
May 3, 2023 16 tweets 6 min read Read on X
உங்கள் கலவர ராமன் இல்லை..

மதங்களை கடந்து மனிதம் போற்றும் எங்கள் அழகன்..

மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா, இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம்.

வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு.

ஆனால்,
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்.. Image
தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து, மதுரைக்கு கிளம்புவாரு

சும்மால்லாம் கிளம்பிட முடியாது,
அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும்

எங்கள் எளிய மனித கள்ளர் வேடத்தில் கொண்டை போட்டு கிளம்புவாருய்யா Image
அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி, ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும்

சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி,கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும் Image
வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா?

வர்ற வழியில கள்ளந்திரி,
அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல, தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. Image
இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும்.

எங்க வீட்டுக் கல்யாணக்
கொண்டாட்டத்துல, அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… Image
மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து, மதுரை மகராசிக பூராம் புது மாங்கல்யம் மாத்துவாங்க.

அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும்
கல்யாணம்தான் ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான்,
ஐயய்யோ அழகரு வாராம.. Image
எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும்.

இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு..

ஒரு பக்கம் இஸ்லாமிய சகோதரர்களின் நீர்மோர்களும் பானக்கரங்களும்...
இராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,
மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும்,

” *கோயிந்தா.. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு
இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க…..

ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். Image
ஆனால், தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா
தோப்பறையில தண்ணிய
நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க…

மதுரையை மட்டுமாய்யா அழகனையும் சேர்த்துதான்ய்யா... Image
(ஆட்டு தோலினால் செய்யப்பட்ட அசைவ பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு... வாங்கய்யா ..
வாங்கய்யானு ... Image
மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்…

விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும்,
இலட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து

“கோவிந்தாஆஆஆஆ…..”னு கூப்பிடும் போது... Image
பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு…
எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி,
பவனிக்கும் அழகில் மயங்கி, மறுபடி சயனத்துக்கே போயிருவாரு

(ப.பி)

இதான் எங்க ஊரு திருவிழா...
உலகில் வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா..?
தெரியலை... Image
எங்க பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்.

ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா.

ஒட்டு மொத்த மதுரை மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்ய்யா.. Image
எங்க மதுரை..
எங்கள் சொர்க்கம் பா. 🙏

மாட்டுக்காக மனிதனை அடித்துக் கொல்லும் நாட்டில்

இறையருள் ஒன்றே நிலையானது என்று போற்றும் எளிய மக்களின் விழா..

இது #சைவ #வைணம் #இஸ்லாமிய மதங்களின் சங்கமம்....

#சித்திரை_திருவிழா
#திராவிடபெருவிழா
Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிடிசாம்பல்

பிடிசாம்பல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pidisambal

Nov 20, 2023
#கலைஞர்100

1) வாய்மை என்பது என்ன?

2010 பிப்ரவரி 10 அன்று சென்னையில் ஐந்தமிழறிஞர் கலைஞருக்கு 'திருக்குறள் பேரொளி' எனும் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது ஏற்புரை நிகழ்த்திய கலைஞர், 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்றொடருக்கு உண்மையான பொருள் Image
என்ன என்பது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:

"#அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்றத்திலே நானும் நாவலரும் பேராசிரியரும் அமருகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, அப்பொழுது சில வாசகங்களை எப்படியெல்லாம் நாம் நடைமுறைப்படுத்தலாம் என்று எண்ணிய நேரத்திலே,
'சத்தியமேவ ஜெயதே' என்றிருந்த அந்தச் சொற்றொடரை எப்படி மாற்றலாம் என்று கருதியபோது, 'சத்தியம்' என்றால் வாய்மை. 'வாய்மை வெல்லும்' என்று சொல்லலாமே என்று யோசித்து, 'வாய்மையே வெல்லும்' என்றிருக்கலாம் என்று அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோம். அது சில நாட்களுக்கு எதிர்ப்புக்கு ஆளாயிற்று.
Read 7 tweets
Jul 1, 2023
50 ஆண்டுகளை கண்ட
கலைஞரின் அண்ணா மேம்பாலம்

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும், கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவிலேயே நீண்ட பாலமாகவும் திகழ்ந்த சென்னை அண்ணா மேம்பாலம் 1973 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் தான் Asia's First Grade Separator.

அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த தலைவர் கலைஞர்,

"தமிழகத்தின் பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால், நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால்..
இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

அந்த வகையில் இனி,

♦ சைதாப்பேட்டை மர்மலாங் பாலம் மறைமலைஅடிகளார் பாலம் என்றும்
♦ அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பாலம் என்றும்
♦ வாலாஜா பாலம் காயிதே மில்லத் பாலம் என்றும்
Read 5 tweets
May 27, 2023
லார்டு #மவுண்ட்பேட்டன் சுதந்திரம் கொடுத்த போது, அவருடனும் #நேரு மாமாவுடனும் தருமபுர ஆதீனமோ அல்லது செங்கோலோ அல்லது ராஜாஜியோ இருப்பது போல் ஒரு படத்தைக் கூட காட்ட முடியாத சங்கிகள்…
தங்களின் மிகப்பெரிய ஆயுதமான வாட்ஸப் யூனிவர்சுட்டி மூலம் கட்டிவிடும் கதைகள்… Image
அப்பப்பா…! காது கிழிந்து ரெத்தமே வந்து விடும். அந்தளவுக்கு 1947ல் நடந்ததையே மாற்றி கதை கட்டுகிறானுங்க.

படம் 1 : 15 Aug 1947 எடுத்த படம். Lord Mountbatten கையில் இருந்து ஆதீனம் செங்கோலை வாங்கி நேரு மாமா கையில் கொடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பச்சைப் பொய். Image
படம் 2 : Aug 15, 1947 விடுதலை நாளுக்கு முன் மாலை பலரும் நேரு அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். அதில் பல மதத் தலைவர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் தருமபுர ஆதீனம். தனியே சந்தித்துப் பூங்கொத்து / செங்கோல் கொடுத்ததை .. Image
Read 5 tweets
May 27, 2023
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..? Image
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
Read 6 tweets
May 26, 2023
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி துபாய் எஸ்போ போல சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்...அதை திசை திருப்ப என்னமோ செய்கிறார்கள்...

ஜப்பானில் முதல்வர் பேசியது முக்கியமானத:- Image
மருத்துவ சாதனங்கள் பூங்கா,உணவுப் பூங்காக்கள்,
மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்தொகுப்புகள்.. Image
மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம் என்று சொன்னது தான் ..

கடைசியாக, இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத் தான் வளர முடியும். Image
Read 5 tweets
Dec 24, 2022
#periyarforever

பெரியார் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்தவர்.

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.

"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
அவர் நடத்திய மஞ்சரி பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும், சத்திரங்களிலும்தான் பல பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(