M.SivaRajan Profile picture
May 8 16 tweets 3 min read Twitter logo Read on Twitter
#கைலாசநாதர்

பூர்வ ஜென்ம சாபம் நீக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்

காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பாடல் பெற்ற சிவ ஆலயங்கள் பல உள்ளன.

இவற்றில் பல ஆலயங்கள்,

சைவ வழி பற்றிய நாயன்மார்களாலும்,

வைணவ வழியைப் பின்பற்றிய ஆழ்வார்களாலும் பாடப்பெற்றவை. Image
மேலும் பல கோவில்கள் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளையும், கலை அழகுமிக்க சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் தமிழகத்தின் பன்பாட்டை, கலாசாரத்தை, கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான், திருச்சி அருகே உள்ள சோழமாதேவியில் இருக்கும் கயிலாயமுடையார் திருக்கோவில்.

உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது.
ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் பெயர் ‘கயிலாயமுடையார்’ என்பதாகும்.

இறைவனின் இன்னொரு பெயர் ‘கைலாசத்து பரமேஸ்வரர்’ ஆகும்.

இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
காவிரியின் தென்கரை கோவில்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயம், மன்னர்களின் ஆட்சி காலத்தில் ‘சோழமகாதேவிச் சதுர்வேதி மங்களம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறை எதிரே பலி பீடமும், நந்தி மண்டபமும் இருக்க, ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது.

மகா மண்டபத்தின் வடக்கே சண்டிகேஸ்வரர், சூரியன், ஐயனார், முருகப்பெருமான் ஆகியோரின் திருமேனிகளும், தென் திசையில் சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
அன்னை கற்பகாம்பாள் வீற்றிருக்கும் சன்னிதி சிதிலமடைந்து காணப்படுவதால்,

தற்போது அன்னை அர்த்த மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறாள்.

அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் இருக்க,
அன்னையானவள் இன்முகத்துடன் காணப்படுகிறாள்.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் கயிலாய முடையார், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

கருவறை தேவகோட்டங்களில் முதலில் காணப் படுவது பிட்சாடனர்.

இது ஈசனின் யாசகம் கேட்கும் திருக்கோலமாகும்.
கபாலம் ஏந்தி புன்னகை தவழ காட்சித்தருகிறார் இந்த இறைவன்.

இவருக்கு எதிர் திசையில் ரிஷி பத்தினி ஒருத்தி கரண்டியை ஏந்தி அன்னம் பாலிக்க நிற்பதுபோல் காட்சி உள்ளது.

அவளது காலடியின் கீழ் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சிவபெருமான், தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கர்வத்தை அடக்கும் புராண நிகழ்ச்சியைக் கூறும் சிற்பமாக இது அமைந்துள்ளது.

பஞ்ச மகா சப்தம் என்பது ஐந்து வகையான இசையைக் குறிக்கின்றன.
தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் இசையை வெளிப் படுத்தி, அந்த இசைகளை ஒன்று சேர செய்வதற்கு பஞ்ச மகா சப்தம்’ என்று பெயர்.

கரடிகை ஒன்றும், மத்தளம் இரண்டும், சங்கு இரண்டும், காளம் நான்கும் ஆக மொத்தம் ஒன்பது இசைக் கருவிகள்,
நாள்தோறும் இந்த ஆலயத்தில் வாசிக்கப்பட்டதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

இதை வைத்துப் பார்க்கும் போது, அந்த காலத்தில் இந்தக் கோவிலில் எவ்வளவு சிறப்பாக வழிபாடு நடந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால்,

பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் உள்ளது இந்த கயிலாயமுடையார் ஆலயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் சென்று அங்கிருந்து சூரியூர் அல்லது துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் நகர பேருந்தில் பயணித்து சோழமாதேவி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.
அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

#கைலாசநாதர்

#கயிலாயமுடையார்

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 8
#விநாயகர்_அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப்பாடப்

பொன் அரை ஞாணும்
பூந்துகிலாடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,

பேழை வயிறும்,
பெரும்பாரக் கோடும்,

வேழ முகமும்,
விளங்குசிந் தூரமும்,

அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும், Image
நான்ற வாயும் நாலிரு புயமும்,

மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்,

இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய
மெய் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன!

இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்க மறுத்தே,

திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து,
Read 12 tweets
May 8
#திருமுறை_வழிபாடு

மிக மிக முக்கியமான பதிவு :

ஓம் நமசிவாய.

அனைவருக்கும் அடியேனின் வணக்கங்கள்.

திருமுறைகளை படிக்க வேண்டும்.

திருமுறைகளை ஓத வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

திருமுறைகள் மொத்தம் பதினெட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. Image
இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு பாடல்களையும் ஓத முடியாத நிலையில் பல நபர்கள் உள்ளனர்.

ஆகையால் அனைவரும் திருமுறைகளில் அவசியம் ஓத வேண்டிய முக்கியமான திருப்பதிகங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்கிறேன்.
அத்துடன் சைவம் என்னும் இணைய தளத்தில் உள்ள அந்த பதிகத்தின் விவரம் சேர்த்து பதிவு செய்கிறேன்.

சைவம் என்னும் இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளும் உள்ளது.

இங்கு அடியேன் பதிவு செய்வது தேவார பதிகங்கள் அகராதி வரிசையில் இருக்கும்.
Read 13 tweets
May 8
#ஸ்ரீ_தோரண_கணபதி

*கடன் தீர்க்கும் ஸ்ரீ தோரண கணபதி*!

கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு.

ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்;

நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும்.

வேண்டியது வேண்டிய படி நிறைவேறும். Image
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை.

அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு,

நாம் இருக்கும் - புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே...

தெருக்கோடியிலும்,

மரத்தின் அடியிலும்,

நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும்.

வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும்.

ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும்.

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபடுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும்.
Read 14 tweets
May 7
#ஸ்ரீ_மருந்தீஸ்வரர்

*நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் - பேராவூரணி*

நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார்.

‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. Image
‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன.

அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள்.

மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.

ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன.
Read 10 tweets
May 7
#வடுவூர்_ராமர்

கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், நீடாமங்கலம்.

திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர். Image
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.

வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,

ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
Read 21 tweets
May 6
#கடன்_நிவர்த்தி

கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெற பைரவருக்கு செய்ய வேண்டிய மிளகு வழிபாடு :

பைரவருக்கு மிளகு மூட்டை கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

இந்த பரிகாரத்தை செய்தால் தீராத கடன்கள் தீருவதாக நம்பிக்கை உண்டு. Image
இதை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் நம் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய பரிகாரம் தான் இது!

பைரவர் படத்திற்கு முன்பு சனிக்கிழமைகளில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வையுங்கள்.
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.

பின் சிகப்பு நிறத்தில் திரி போட்டு, சிகப்பு நிற மலர்களை பைரவருக்கு சாற்றி வைக்க வேண்டும்.

சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் என்பதால் செவ்வரளி பூக்களை பெரும்பாலும் பைரவருக்கு அணிவிப்பார்கள்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(