#ஸ்ரீவைஷ்ணவம்#ஆழ்வார்_பெருமை ஒரு முறை நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது. நம்மாழ்வார், பகவானே உன்னை விட நான் தான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய். அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்து
இருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள் என்று விவாதம் வைத்து இறைவனின் கருணையைப் பெறுகிறார் நம்மாழ்வார். பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால், அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் #மதுரகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா. இதைத் தான் இராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.
பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும் #சடாரி என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும். நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான #சடகோபன் என்பதே சடாரி என்று மருவியது. “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக
இருப்பவர். எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில் சாதிக்கப்படும் திருவடிகள் ‘மதுரகவிகள்’ என்று போற்றப் படுகின்றன. மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் #கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. மதுரகவியாழ்வார்
பெருமாளைப் பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம் என்று போற்றப் படுகிறது. எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், #திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே
தொடங்குவார்கள் நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.
ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தமிழ்நாட்டின்_வித்தியாசமான_கோவில்_மூர்த்திகள்
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர். வேறு எந்த காளி கோயில்களிலும் இப்படி காண இயலாது.
சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில்
கபாலம் ஏந்தியிருக்கிறார்.
பொதுவாக 5 தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் 7 தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.
திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி
விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் 5 விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.
திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல குத்திட்டு
#கண்ணனும்_பாண்டவர்களும்
பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன்
திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர்.
பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இருவரின் அஸ்திரப்
#ருத்ராட்ஷ_மகிமை
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒரு போதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து
ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது. அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக 5 முக ருத்ராட்ஷமாவது
அணியவேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவ
#நற்சிந்தனை
ராமன் காட்டிற்குப் போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த
ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?" என பக்தியோடு கேட்கிறான். "கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா." அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு புறப்படத் தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன்
படகை இங்கே கொண்டுவா" என்றான். "கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா ராமர், அது சீதாதேவி ராணி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்"
கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதும் இரவில்
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில்
நங்கவள்ளி சேலம் மாவட்டம்
இக்கோவில் ஆயிரம் வருட பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சி அளிகின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது.
அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் தொட்டிநங்கை என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டு இருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என
யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்த போது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு
#போக_நந்தீஸ்வரர்_ஆலயம்
நந்தி கிராமம், சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.
பொ.யு.8-ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய அரச வம்சத்தினரால் ஏராளமான கட்டுமானங்கள், திருப்பணிகள் இவாலயத்திற்கு செய்யப்பட்டுள்ளன. வெளியில் இருந்து பார்ப்பதற்கு எவ்வித
பரபரப்புமில்லாமல், பக்தர் கூட்டம் அதிகமின்றி காணப்படும் இப்பெரும் ஆலய வளாகம், வரலாற்று, கலை ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. தென் பாரதத்தின் புகழ் மிக்க அரச வம்சத்தினரின் கோவில் கட்டுமான பொறியியல், சிற்பக்கலை நுணுக்கம், அழகியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒரு சேர
இந்த ஆலயத்தில் காணலாம். நுளம்பர், ராஷ்ட்ரகூடர், பாணர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தம் பாணிகளில் கலைப் பங்களிப்புகளை இவ்வாலயத்தில் செய்து உள்ளனர். ராஷ்ட்ரகூட மன்னர் 3ஆம் கோவிந்தன் (பொ.யு.806) கல்வெட்டுக்கள், பாண அரசர் ஜெயதேஜா (பொ.யு.810)