SSR 🐘 Profile picture
May 12 24 tweets 5 min read Twitter logo Read on Twitter
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,

அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்

(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

1/24 Image
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,

எல்லாருக்கும் சிறு வயசு தான்.

2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,

சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை

சரி இதை பற்றி தனியாக பேசுவோம்,

3/24
கொடி மரத்தை வணங்குவது பற்றி ஆரம்பித்து நந்தி, நால்வர், நடராஜர், விநாயகர், என பேசி கடைசியில் முருகனிடம் வந்து நின்றார்கள்,

முருகன் தமிழ்க் கடவுள்,
அப்ப சிவப்பெருமான் தமிழ் கடவுள் இல்லையா ?

பிள்ளை தமிழ்க் கடவுள்னா, அப்பா தமிழ் கடவுள்தான் டா அட ஆமாம்ல,

#கந்தனுக்கு_அரோகரா

4/24
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு,

முருகனுக்கு எப்படி இரண்டு மனைவி ?

அப்போ முருகன் தமிழ்க்கடவுள் இல்ல இரண்டு பொண்டாட்டி நம்ம Culture இல்ல,

அடேய் சிவனுக்கே 3 பொண்டாட்டி டா, புள்ளைக்கு 2 இருந்தா என்ன என்றார்கள்,

அப்போ இரண்டு பேரும் தமிழ் கடவுள் இல்லை என்றார்கள்,

5/24
எனக்கு அடியார்களிடமே சரியான புரிதல் இல்லாமல் இருக்கும் போது பொதுமக்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்று தோன்றியது,

வணங்குதலுக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியல, திருமுறைகளை படிக்கல,
ஆகமம் புரியல,
சக்தி, ஆன்மா, ஆத்மா, கர்மா, முக்தி, பக்தி இத பற்றி தெரிஞ்சிக்க ஆர்வம் இல்ல,

6/24
இவங்களை சொல்லி குற்றம் இல்லை இவர்களுக்கு ஒரு நல்ல குரு இல்லை,

இது எல்லாம் எப்ப யாரால ஒரு வழிமுறையோட நெறிபடுத்துனும்னு எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனுக்கு தான் வெளிச்சம்,

சரி விஷயத்துக்கு வருவோம்,

கடவுள் (ஈசன், முருகன்) ஒருவரே என்று பல முறை பல இடங்களில் நான் கூறியதுண்டு,

7/24
முருகனைப் பற்றியும் அவரின் இரணடு மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு ஞானம் போதாது,

இருப்பினும் என்னால் முடிந்தவரை இந்த திரேட்டில் விளக்க முயற்சிகிறேன்,

அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.

8/24
மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன,

அவற்றுள் முக்கியமானது இருப்பது நான்கு.

இந்நாடிகள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன.

குண்டலி என்னும் சக்திக்கு நடுவில் பத்து நாடிகள் மேலாகவும்,

பத்து நாடிகள் கீழ்ழாகவும்
இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும்

9/24
இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன.

இந்த இருபத்து நான்கு நாடிகளுள் பத்து நாடிகளை முக்கியமானது அது சிறந்தவை என்று திருமூலர் கூறுகிறார்,

" எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்,
மற்றதில் பத்து வளமான நாடியே "

#நோக்கம்சிவமயம்
10/24
அவை,
1. இடகலை,
2. பிங்கலை,
3. சுழுமுனை,
4. புருடன்,
5. காந்தாரி,
6. அத்தி,
7. அலம்புருடன்,
8. சங்குனி,
9. சிங்குவை,
10. குரு ,

இந்த பத்து நாடிகளுள் மூன்று நாடிகளே முக்கியமானது

அவை, இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாகும்.

#கந்தனுக்கு_அரோகரா

11/24
இடக்கலை நாடி வலது கால் பெருவிரலிலிருந்து மேல் எழுப்பி மூலாதாரம் வழியாய் இதயத்துக்கு இடப்பக்கமாய் மாறி தலையின் இடது பக்கமாய் நின்று, பின் இடது கையில் நிற்கும்.

பிங்கலை நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் எழும்பி மூலாதாரத்தின் வழியாக இதயத்துக்கு வலப்பக்கமாய் மாறி

12/24
தலையின் வலது பக்கமாய் நின்று, வலது கையில் நிற்கும்.

சுழுமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து தலையின் உச்சி வரை பாய்ந்து நிற்கும்.

இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறந்த நாடிகள்.

இவற்றின் வழியாய் மூச்சு (சுவாசம்) ஓடுகிறது.

13/24
இடகலை என்பது இடது மூக்கு வழியாக ஓடும் மூச்சு ஆகும்,
இதனைச் சந்திரக்கலை என்பர்.

பிங்கலை என்பது வலது பக்க மூக்கில் வரும் மூச்சு ஆகும், இதனைச் சூரியக்கலை என்பர்.

சுழுமுனை என்பது நடுநாடியாகும். இதனை அக்கினிக் கலை எனக்கூறுவர்.

இது இரண்டு நாசியிலும் பரவியோடும்.

14/24
நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள்,உதடுகள்,மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள்,

இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னி பினைந்து உள்ளன அந்த மையமே சுழுமுனை.

15/24
இன்னும் விரிவாக சொன்னால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்.

16/24
1.நெற்றி (பிரம்மந்திரா)

2.தொண்டைக் குழி (ஆங்ஞை)

3.மார்புக்குழி (விசுத்தி)

4.தொப்புள் குழி (மனிப்புரம்)

5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டானம்)

6.மலக்குழி (மூலாதாரம்)

இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும்.

17/24
இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது,

அது தான் சாஹஸ்ரா.

முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.

18/24 Image
இதைத்தான் கந்தகுருகவசத்தில் சதானந்த சுவாமிகள்,

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
என்கிறார்,

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே,

19/24
சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.

இதை கந்த குரு கவசத்தில் சதானந்த சுவாமிகள்,

20/24
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்,

என்று கூறிப்பிடுகிறார்,

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என கேட்பது புரிகிறது,

21/24
ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன் இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே,

மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்

22/24
முடிவாக ஒன்றை கூறிகொள்கிறேன்,

"கடவுள் ஒருவரே"

அவர் எவராலும் பெறப்படவும் இல்லை

அவர் எதையும் பெற்றிருக்கவும் இல்லை.

எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு
மனைவியர் இரண்டு என்பது

இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர

வேறொன்றும் இல்லை.

23/24
இறை ரகசியங்களை இன்னும் ஆழமாக பதிவிடலாம் அதை உணரும் ஆன்மபக்குவம் பலருக்கு வாய்ப்பதில்லை.

எனவே சில பல நம்பிக்கைகளை கிளறாமல் இருப்பதே நலம்,

திருமுறைகளையும்,
சிவாக்கியத்தையும்,
திருபுகழையும்,
கந்தகுருகவசத்தையும்,
படித்து தெளிவுபெருவோம்,

நன்றி🙏

சிவாயநம
திருச்சிற்றம்பலம்.

24/24 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🐘

SSR 🐘 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

May 13
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1

பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,

எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/25 Image
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.

திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,

இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,

2/25 Image
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.

சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.

3/25 Image
Read 25 tweets
Apr 20
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
Apr 18
மகாபாரதம்;

சூதாடி வெல்ல முடியாமல் முடிதுறந்ததால்,

தன் முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி,

குருதியில் ஓடியது குருசேத்திரம்,
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்,
நடந்து முடிந்தது மகாபாரதம்,

-திரௌபதி

1/4
சிலப்பதிகாரம்;

தன் சிலம்பு ஒன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி,

முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்,

முடியாத அவள் கூந்தலால் தன் கற்பின் வலிமையால் எரிந்து கரியாய் முடிந்தது மதுரை.

- கண்ணகி

2/4
கணவனை வேண்டி
முடியாத தன் நீள் முடியை
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி,

முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்,

எரிந்து பொரிந்து முடிந்தது இலங்கை.

- சீதை

3/4
Read 5 tweets
Apr 3
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

#மூலிகைஅறிவோம்

1/8
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

2/8
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

3/8
Read 8 tweets
Mar 10
வணக்கம்🙏
சிவசொந்தங்களே.!

சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்

#SSRthreads
#நோக்கம்சிவமயம்
1/16 Image
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?

எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?

அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.

2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?

அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.

எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,

3/16
Read 16 tweets
Aug 7, 2022
தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?

தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?

1/20
#SSRThreads
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.

ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,

காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க

2/20
வயல்வெளிகளும் தண்ணீரின் சுவையும் அப்பப்பா,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்,

தஞ்சாவூரில் ஓங்கி வளர்ந்த உணவு வரலாற்றில் இன்று இடம் பிடித்திருப்பது லஸ்ஸி.

நல்ல ருசியான தயிர்தான் லஸ்ஸிக்கு மிகமுக்கியமான அடிப்படை பொருள். கறந்த பாலை வாங்கி, ஒன்றுக்கு பாதியாக சுண்டக்காய்ச்சி,

3/20
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(